அரசு இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா? விற்றுவிட்டனரா?: கணக்கெடுக்க உத்தரவு!

school laptop - 2026அரசின் இலவச லேப்டாப்களை உண்மையிலேயே மாணவர்கள் பயன்படுத்து கிறார்களா? அல்லது விற்று விட்டனரா? அவை மாணவர்களின் படிப்புக்கு பயன்பட்டதா? என்பதை கணக்கெடுத்து அறிக்கை தர அனைத்து மாவட்ட சிஇஓ-க்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு  பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கும் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்க்கும் இலவச லேப்டாப் – மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் விவரங்கள், ஆதார் எண் உள்ளிட்டவை EMIS – கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் பதிவேற்றப் படுகின்றன. இந்த லேப்டாப்களை மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் வழங்கக் கூடாது.

ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதும் கொண்டு வரப் பட்டு, கடந்த 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்துள்ளன என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.freelaptop - 2026

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

இந்நிலையில், இலவச மடிக்கணினி பெற்றுள்ள மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அந்தத் தகவல் கேட்பில்…

இலவச மடிக்கணினியை மாணவர்கள் பெற்ற வருடம், அந்த மாணவர் தற்போது தொடர்ந்து படிக்கிறாரா, சுயதொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா?

பள்ளியில் எப்போது லேப்டாப் வழங்கப்பட்டது?
லேப்டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா?
படிப்புக்கு தேவையான சாப்ட்வேர் வழங்கப்பட்டதா?
லேப்டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா?
வழங்கிய ஓராண்டுக்குள் லேப்டாப்பில் பழுது ஏற்பட்டதா?
மாணவர்கள் தற்போது லேப் டாப்பை வைத்துள்ளனரா?
லேப்டாப்பின் தற்போதைய பயன்பாடு என்ன?
லேப்டாப்பை மேற்படிப்புக்காக பயன்படுத்துகின்றனரா?
லேப்டாப்பை வேறு யாருக்கும் கொடுத்து விட்டனரா?
லேப்டாப் பழுதாகியுள்ளதா?

  • இத்தகைய விவரங்களை சேகரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories