கட்டபொம்மன் தளபதி! லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை!

IMG 20191015 WA0104 - 2026

விடுதலை வீரர் “லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை…

வீரபாண்டிய கட்டபொம்மனின் விசுவாசமான தளபதியாய் “யது(யாதவ)குல சடக்குட்டிசேர்வை” விளங்கினார்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு பல இடங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெற்றி அடையச் செய்துள்ளார்

IMG 20191015 WA0101 - 2026

சிங்கத்தாகுறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படை ஆங்கிலேயப்படையை விரட்டி அடித்தது

ஆங்கிலேய துரைகளின் தலைகளையை வெட்டி எறிந்தார் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் வீரத்தை கண்டு மிரண்ட ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக எதிர்பாராத நேரத்தில் அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டனர்

IMG 20191015 WA0103 - 2026

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை மீது பேரன்பும்,பெரும் நம்பிக்கையும் கொண்ட வீரபாண்டியகட்டபொம்மன் மரணதருவாயில் தங்களுக்கு என்னவேண்டுமானாலும் தருகிறேன் என்று கேட்டதற்கு தாங்கள் தந்த “சேர்வை” பட்டமே போதும் என்று கட்டபொம்மன் மடியிலேயே வீரமரணம் அடைந்தார் சடக்குட்டிசேர்வை

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் மனைவிகள் உடன்கட்டை ஏறிய இடம் இன்றும் அவர்களது பெயரில் காளியம்மாள் கோயிலாக மாலைக்காரிஅம்மன் என்று தெய்வமாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள்

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்த மற்றொரு மாவீரர் தூங்கக்கோன்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படையினர் வாழும் ஊர்களில் சில
1.லெக்கம்பட்டி, 2.மேல்மாந்தை, 3.நெடுங்குளம் அருகேயுள்ள கட்டாலங்குளம், 4.கடுகுசந்தை என்ற சத்திரம், 5.மாறந்தை, 6.சிறுகுடி, 7.கோட்டைநேந்தல், 8.கீழச்செல்வனூர், 9.வாகைக்குளம், 10.மணிவிளை, 11.கூரான்கோட்டை, 12.மாரியூர், 13.பாம்பன்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை பற்றிய கும்மிப்பாடல்

“பட்டான் பட்டான் சடக்குட்டி
படையில் பட்டான் சடக்குட்டி
நெற்றிமேல் குண்டு நேரேபட்டான் சடக்குட்டி
சிங்கத்தாகுறிச்சியை ஜெயங்கொண்ட சடக்குட்டி
நாடுவேண்டாம் நகரம்வேண்டாம் சடக்குட்டி
பாஞ்சாலங்குறிச்சியில் பட்டம் வாங்கிய சடக்குட்டி
சேர்வைபட்டம் மட்டும்போதும் சடக்குட்டி
சீறிப்பாய்ந்தான் சடக்குட்டி
சீமைத்துரையை வெட்டிவந்த சடக்குட்டி”

கட்டபொம்மனின் படைவீரனுக்குக்கூட அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஆனால்
தளபதி சடக்குட்டிசேர்வையை போல பல மாவீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளனர்

கற்பனையாக பலர் புத்தகம் எழுதும் நிலையில் பலரால் மறைக்கப்பட்ட வரலாற்றை களஆய்வு மூலமாக ஏட்டில் ஏற்றியவர் வரலாற்றுஆய்வாளர் சுபாஷ்சேர்வை

கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளில் மாவீரர் சடக்குட்டிசேர்வையின் தியாகத்தை போற்றுவோம்…

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories