December 6, 2025, 12:09 AM
26 C
Chennai

கட்டபொம்மன் தளபதி! லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை!

IMG 20191015 WA0104 - 2025

விடுதலை வீரர் “லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை…

வீரபாண்டிய கட்டபொம்மனின் விசுவாசமான தளபதியாய் “யது(யாதவ)குல சடக்குட்டிசேர்வை” விளங்கினார்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு பல இடங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெற்றி அடையச் செய்துள்ளார்

IMG 20191015 WA0101 - 2025

சிங்கத்தாகுறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படை ஆங்கிலேயப்படையை விரட்டி அடித்தது

ஆங்கிலேய துரைகளின் தலைகளையை வெட்டி எறிந்தார் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் வீரத்தை கண்டு மிரண்ட ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக எதிர்பாராத நேரத்தில் அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டனர்

IMG 20191015 WA0103 - 2025

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை மீது பேரன்பும்,பெரும் நம்பிக்கையும் கொண்ட வீரபாண்டியகட்டபொம்மன் மரணதருவாயில் தங்களுக்கு என்னவேண்டுமானாலும் தருகிறேன் என்று கேட்டதற்கு தாங்கள் தந்த “சேர்வை” பட்டமே போதும் என்று கட்டபொம்மன் மடியிலேயே வீரமரணம் அடைந்தார் சடக்குட்டிசேர்வை

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் மனைவிகள் உடன்கட்டை ஏறிய இடம் இன்றும் அவர்களது பெயரில் காளியம்மாள் கோயிலாக மாலைக்காரிஅம்மன் என்று தெய்வமாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்த மற்றொரு மாவீரர் தூங்கக்கோன்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படையினர் வாழும் ஊர்களில் சில
1.லெக்கம்பட்டி, 2.மேல்மாந்தை, 3.நெடுங்குளம் அருகேயுள்ள கட்டாலங்குளம், 4.கடுகுசந்தை என்ற சத்திரம், 5.மாறந்தை, 6.சிறுகுடி, 7.கோட்டைநேந்தல், 8.கீழச்செல்வனூர், 9.வாகைக்குளம், 10.மணிவிளை, 11.கூரான்கோட்டை, 12.மாரியூர், 13.பாம்பன்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை பற்றிய கும்மிப்பாடல்

“பட்டான் பட்டான் சடக்குட்டி
படையில் பட்டான் சடக்குட்டி
நெற்றிமேல் குண்டு நேரேபட்டான் சடக்குட்டி
சிங்கத்தாகுறிச்சியை ஜெயங்கொண்ட சடக்குட்டி
நாடுவேண்டாம் நகரம்வேண்டாம் சடக்குட்டி
பாஞ்சாலங்குறிச்சியில் பட்டம் வாங்கிய சடக்குட்டி
சேர்வைபட்டம் மட்டும்போதும் சடக்குட்டி
சீறிப்பாய்ந்தான் சடக்குட்டி
சீமைத்துரையை வெட்டிவந்த சடக்குட்டி”

கட்டபொம்மனின் படைவீரனுக்குக்கூட அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஆனால்
தளபதி சடக்குட்டிசேர்வையை போல பல மாவீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளனர்

கற்பனையாக பலர் புத்தகம் எழுதும் நிலையில் பலரால் மறைக்கப்பட்ட வரலாற்றை களஆய்வு மூலமாக ஏட்டில் ஏற்றியவர் வரலாற்றுஆய்வாளர் சுபாஷ்சேர்வை

கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளில் மாவீரர் சடக்குட்டிசேர்வையின் தியாகத்தை போற்றுவோம்…

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories