என்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்!

encounter - 2026

என்கவுண்டர் ஒரு பார்வை : தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.

பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்..? எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..? எவ்வளவு பணச் செலவு, நேரமிழப்பு, தேவையில்லாத பிரயாணங்கள் ஏற்படுகிறது ஒரு வழக்கில் நாம் தெரியாமலோ.. அல்லது நிர்பந்தத்தாலோ மாட்டிக் கொள்ளும் போது..? காலம் தாழ்ந்து கொடுக்கும் நீதிக்கும்… நீதி மறுப்பிற்கும் பெரிய வித்தியாசமே கிடையாதே..?

இந்த மேற்கொண்ட காரணங்களினால்தான் பொது மக்கள் போலீஸ் என்கவுண்டரால் பரவசமடைந்து போலீஸ்காரர்களை தலைக்கு மேல் அலாக்காக தூக்கிக் கொண்டாடியும், அவர்கள் மேல் மலர்களை வாரி இறைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்..!

23 வயது உன்னாவ் கற்பழிப்பில் பிழைத்தவரை அடித்தும், உதைத்தும், கத்தியால் குத்தியும், உயிரோடு கொளுத்தியும்… நிகழ்ந்ததா இல்லையா..?

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாள். அதற்காக நீதித்துறையை அணுகினாள். ஆனால் அப்படிச் செய்ததற்காகவே அவளை அடித்து, உதைத்து, உயிரோடு கொளுத்தினார்கள். நவம்பர் 30 வெளியே பெயிலல் வந்த அயோக்யன் மீண்டும் அவளை வழிமறித்து நாசப்படுத்தி… இன்று அவள் இறந்தும் போனாள்.

இதற்காகவா நம் நீதித்துறை..? நிர்பயாவாக இருந்தாலும் உன்னாவ் கற்பழிப்பில் பிழைத்தவராக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைத்தது..?

நேற்று ஏசி அறையில் உடகார்ந்து கொண்டு ஒரு பெண் வக்கீல் வீல் வீல் என்று கத்துகிறார் என்கவுண்டருக்கு எதிராக..! உயிரைப் பணயம் வைத்தது அந்த பெண் மட்டுமல்ல.. குற்றவாளிகளை அந்த இடத்திறகு அழைத்துச் சென்ற போலீஸ்காரர்களும்தான் என்று இவர்களுக்கு ஏன் தெரியப் போகிறது..? மனித உரிமை ஆர்வலர்களுக்கும், கம்னாட்டீஸ்களுக்கும், அரசியல் பிழைக்கும் காங்கிரஸ் வியாபாரிகளுக்கும் இப்படியெல்லாம் அயோக்யத்தனங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் மட்டும்தான் இவர்கள் குரல் எழுப்புவதாகக் காட்டிக் கொண்டு தங்கள் வியாபாரத்தைத் தொடர முடியும்.

தீர்ப்பு வழங்கும் வரை கற்பழித்தவனை குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று குரல் கொடுப்பவர்களே.. என்கவுண்டர் செய்த போலீஸ்கார்ர்களுக்கும் அந்த என்கவுண்டரில் உள்ள நியாயத்தை சொல்ல கோர்டில் சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமில்லையா..?

அதற்குள் அதனை போலி என்கவுண்டர் என்று பறைசாற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்..?

மாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள். திருந்த வேண்டியவர்கள் திருந்துக்கள். அதே சமயம் திருத்த வேண்டிய நடைமுறைகளையும் திருத்துங்கள். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வேண்டுமானால் முதலில் நடைமுறை சிக்கல்கள் களையப்பட வேண்டும். அதற்கு நம் நீதித்துறையில் இருப்பவர்கள் யதாஸ்தானத்திலிருந்து இறங்கி வர வேண்டும். இதெல்லாம் சரியானால் தானாக மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்..!

  • எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories