காலம் தாழ்த்திய நீதியின் விளைவு!

 
 
இதற்கெல்லாம் குற்றங்களைத் தெரிந்தே செய்வதும், அதிலிருந்து மீண்டுவரத் தங்களுக்காக கட்சியிலேயே வழக்கறிஞர் குழுக்களை வைத்துக் கொள்வதும், பொய் சொல்லியே வழக்குகளுக்கு வாய்த்தாக்கள் வாங்குவதும், அதற்காகவே பட்டப்படிப்புப் படித்த பண்பாடற்ற கல்வியாளர்களின் (பணத்திற்கோ, பதவிக்கோ, விருதிற்கோ ஆசைப்படும்) அறிவுரைகளும், பாரம்பரியமான ஊடகங்களின், குறிப்பாக தார்மிக உணர்வும், தன்மானமும் இல்லாத பத்திரிக்கை ஆரிசியர்களின் ஈனப் பிழைப்பும், போலி மதவாதிகளும், போலி நாத்திகர்களும் அடிக்கும் கொட்டங்களும், நேர்மையற்ற, ஆடம்பர அரசியல்வாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் அப்பாவித் தொண்டர்களுமே முழு முதற்காரணம்.
 
குலகல்வி முறை வேண்டாம் என்று கொத்தித்த அரசியல் வாதிகளின் குடும்பத்தினரே அரசியல் வாதியாக வர விரும்புவதும், குலத்தை முன்னிறுத்தியே தேசத்தின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதும் என்று அனைத்துத்துறையிலும் நேர்மை இல்லாதவர்கள் அதிகமாகப் பரவிக்கிடக்கிற தேசமாகிப் போனதைத்தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எளிமையான, நேர்மையானவர்களின் குரல் மக்களின் செவிகளின் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.
 
தன்குலதைச் சேர்ந்தவர்கள் தேசத் துரோகம் செய்தால் அதற்கு நியாயம் கற்பிப்பதும், மற்றவர்கள் செய்தால் நிந்திப்பதுமான குணம் மாறவேண்டும். ஊழல் செய்தவர்கள் நல்ல தமிழில் பேசினால் அவர்கள் நல்லவர்கள் அல்ல, பக்திமான் போல வேடம் போட்டாலும் தீயவர்கள்தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் தேசம் தலை நிமிர்ந்து நிற்கும்.
 
மனச்சாட்சியும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். எத்துணை சாவுகளைப் பார்த்தாலும், ஒரு ஒட்டுத் துணிகூடக் கூடவரப் போவதில்லை என்ற பக்குவம் பிறர் பொருளையோ, தேசத்தின் சொத்துக் களையோ கொள்ளை அடிப்பவர்களின் நினைவுக்கு வருவதே இல்லை. பிடிபட்டவுடன் அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி நாடகக் காட்சிகள் வந்து விடுகிறது. போலிச் சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். சிறைச் சாலைகளின் கதவுகளுக்கு அத்தனை பலம் இருக்கிறது.
 
“பிடிபட்ட பின்தானே கள்வன், அதுமட்டும் அவன்கூடத் தலைவன்” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகள்தான் இன்றுவரை உண்மை.
 
படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்ற மகாகவி பாரதியின் வாக்குப் பொய்க்காது.
 
அரசியல் வாதிகளே..நீங்கள் பொதுச் சொத்தைத் திருடநினைக்கும் முன்பாக ஒரு நிமிடம் உங்கனின் தீவினையால் துன்பப்படப் போகும் உங்கள் பிள்ளைகளை நினையுங்கள். சந்ததி இல்லாதவர்கள் உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். மனச்சாட்சியே இல்லாதவர்களை இன்னும் இறைவன் படைக்க வில்லை என்று நம்புகிறேன்.
 
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” – தமிழ் மறை.
 
கட்டுரை: மீ.விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories