காலம் தாழ்த்திய நீதியின் விளைவு!

 
 
இதற்கெல்லாம் குற்றங்களைத் தெரிந்தே செய்வதும், அதிலிருந்து மீண்டுவரத் தங்களுக்காக கட்சியிலேயே வழக்கறிஞர் குழுக்களை வைத்துக் கொள்வதும், பொய் சொல்லியே வழக்குகளுக்கு வாய்த்தாக்கள் வாங்குவதும், அதற்காகவே பட்டப்படிப்புப் படித்த பண்பாடற்ற கல்வியாளர்களின் (பணத்திற்கோ, பதவிக்கோ, விருதிற்கோ ஆசைப்படும்) அறிவுரைகளும், பாரம்பரியமான ஊடகங்களின், குறிப்பாக தார்மிக உணர்வும், தன்மானமும் இல்லாத பத்திரிக்கை ஆரிசியர்களின் ஈனப் பிழைப்பும், போலி மதவாதிகளும், போலி நாத்திகர்களும் அடிக்கும் கொட்டங்களும், நேர்மையற்ற, ஆடம்பர அரசியல்வாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் அப்பாவித் தொண்டர்களுமே முழு முதற்காரணம்.
 
குலகல்வி முறை வேண்டாம் என்று கொத்தித்த அரசியல் வாதிகளின் குடும்பத்தினரே அரசியல் வாதியாக வர விரும்புவதும், குலத்தை முன்னிறுத்தியே தேசத்தின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதும் என்று அனைத்துத்துறையிலும் நேர்மை இல்லாதவர்கள் அதிகமாகப் பரவிக்கிடக்கிற தேசமாகிப் போனதைத்தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எளிமையான, நேர்மையானவர்களின் குரல் மக்களின் செவிகளின் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.
 
தன்குலதைச் சேர்ந்தவர்கள் தேசத் துரோகம் செய்தால் அதற்கு நியாயம் கற்பிப்பதும், மற்றவர்கள் செய்தால் நிந்திப்பதுமான குணம் மாறவேண்டும். ஊழல் செய்தவர்கள் நல்ல தமிழில் பேசினால் அவர்கள் நல்லவர்கள் அல்ல, பக்திமான் போல வேடம் போட்டாலும் தீயவர்கள்தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் தேசம் தலை நிமிர்ந்து நிற்கும்.
 
மனச்சாட்சியும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். எத்துணை சாவுகளைப் பார்த்தாலும், ஒரு ஒட்டுத் துணிகூடக் கூடவரப் போவதில்லை என்ற பக்குவம் பிறர் பொருளையோ, தேசத்தின் சொத்துக் களையோ கொள்ளை அடிப்பவர்களின் நினைவுக்கு வருவதே இல்லை. பிடிபட்டவுடன் அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி நாடகக் காட்சிகள் வந்து விடுகிறது. போலிச் சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். சிறைச் சாலைகளின் கதவுகளுக்கு அத்தனை பலம் இருக்கிறது.
 
“பிடிபட்ட பின்தானே கள்வன், அதுமட்டும் அவன்கூடத் தலைவன்” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகள்தான் இன்றுவரை உண்மை.
 
படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்ற மகாகவி பாரதியின் வாக்குப் பொய்க்காது.
 
அரசியல் வாதிகளே..நீங்கள் பொதுச் சொத்தைத் திருடநினைக்கும் முன்பாக ஒரு நிமிடம் உங்கனின் தீவினையால் துன்பப்படப் போகும் உங்கள் பிள்ளைகளை நினையுங்கள். சந்ததி இல்லாதவர்கள் உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். மனச்சாட்சியே இல்லாதவர்களை இன்னும் இறைவன் படைக்க வில்லை என்று நம்புகிறேன்.
 
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” – தமிழ் மறை.
 
கட்டுரை: மீ.விசுவநாதன்
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories