1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி?

Published:

dmk nalvar - 2026

1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி.. என்பதை மிகத் தெளிவாக Ma Venkatesan ம.வெங்கடேசன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

திமுக-திகவின் முழு நேரத் தொழிலே சுற்றுச் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி.. கிடைக்கும் லாபத்தை முழுமையாக ஆட்டையைப் போடுபவர்கள் இவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இது.

????ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சியை ஒழிக்க சட்டமன்றத் தேர்தலில் இடம் வேண்டாம் என இந்திரா காந்தி செய்து கொண்ட கூட்டணி
????எம்ஜிஆர் என்கிற நடிகரின் அபரிமிதமான செல்வாக்கு
????பாகிஸ்தான் எதிர்ப்பால் இந்திராவுக்குக் கிடைத்த தேச பக்தர்களின், இளைஞர்களின் ஆதரவு
????இந்திரா காந்தியின் நிலச் சீர்திருத்தத்திற்கு கிடைத்த ஆதரவு
????மக்களுக்கு ஜமீந்தார்கள் மேல் உள்ள வெறுப்பு
????வங்கிகளை நாட்டுடமையாக்கிய குபீர் புதுமை
????இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவு

என பல காரணிகள் அந்த காலகட்டத்தில் இந்த திமுக கூட்டணிக்கு இருந்தபோதும்… சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஈவேரா சேலத்தில் ராமர் சிலையை அவமதித்ததால் மட்டுமே.. பிராமணர்களை எதிர்த்ததால் மட்டுமே… போன முறை 1967 தேர்தலில் 138 இடங்கள் பெற்ற திமுக 1971 தேர்தலில் 183 இடங்கள் பெற்றதாக கதை வசனம் எழுதி சுயலாபம் பார்க்க முனைந்தார் இந்த ஈவேரா அடிப்பொடி கி.வீரமணி..


1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி?

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

1969ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் எனவும் முரார்ஜி தேசாய், காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரஸ் ஸ்தானப காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது.

stalin mgr karunanidhi eb bill dvd.original - 2026

1969களில் இந்திராகாந்தி வங்கிகளை நாட்டுடைமையாக்கினார். நிலச்சீர்திருத்தம் கொண்டுவந்தார். இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு செல்வாக்கு கூடியது. தமிழ்நாட்டிலும்தான். பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்காளத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பாகிஸ்தான் இந்தியாவையும் சீண்டி வந்தது. அதை எதிர்த்து அடிக்கடி குற்றம்சாட்டி எதிர்த்து வந்தார் இந்திராகாந்தி. ஒரு பெண் தைரியமாக பாகிஸ்தானை எதிர்க்கிறார் என்ற பிம்பம் நாட்டுப்பற்று மிக்க மக்களை, இளைஞர்களை ஈர்த்தது. அதனால் பெருவாரியாக ஆதரித்தார்கள்.

kamarajar - 2026

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்த மக்கள், ரசிகர்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை. அதை அப்படியே பயன்படுத்திக்கொண்டது திமுக.

1971 தேர்தலில் இந்திராகாந்தியுடன் திமுக கூட்டு வைத்துக் கொண்டது. தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரசை வளரவிடக்கூடாது, காமராஜரின் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி அந்த தேர்தலில் தங்களுக்கு சட்டமன்ற தேர்தலில் இடமே வேண்டாம் என்று கூறி திமுகவுக்கு ஆதரவளித்தார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

திமுக எதிரில் ஸ்தாபன காங்கிரசு, சுதந்திராக் கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி போன்ற அமைப்பு பலம் இல்லாதவர்களே போட்டியில் இருந்தார்கள்.

annadurai - 2026

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வார்ட் ப்ளாக், பிரஜா சோஷ்யலிஸ்ட், முஸ்லிம் லீக் போட்டியிட்டன. இது மாபெரும் கூட்டணி என்று கூறப்பட்டது.

ஆகவே 1971ல் திமுக வெற்றிபெற்றதற்கு காரணம் இந்திராகாந்தியும், எம்ஜிஆரும்தான். அப்போது இந்தியா முழுக்க ஏற்பட்ட நாட்டுப்பற்றும் ஒரு முக்கியக்காரணம். இவையெல்லாம்தான் தமிழ்நாட்டில் மற்ற பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளியது.

முக்கியமாக எம்ஜிஆருடைய செல்வாக்குத்தான் என்பதை எதை வைத்து புரிந்துகொள்ள முடியும்? எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.

Related articles

Recent articles

spot_img