December 6, 2025, 12:09 AM
26 C
Chennai

தான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி?! ஆனால் மோடி சொன்னார்!

dmk rsbarathi - 2025

ஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே ஆதிதிராவிடர்,அருந்ததியினருக்கு நன்றியே இல்லை என்று பொன்முடி பேசினார் முன்பு. இவர்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நன்றியில்லை, சோற்றாலடித்த பிண்டம் என்றெல்லாம் வசைபாடுவது எளிது அவர்களுக்கு.

ஆனால் இவர்களின் உளவியல் அதிதீவிரமான ஜாதிய வாதத்தால் நிரம்பியது.இது சமதர்மத்தை நம்புகிறவர்களின் பேச்சல்ல.எப்போதுமே ஒரு வாதம் வைப்பார்கள் பெரியார் உயர் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு ஒடுக்கு முறையே கிடையாது ஆனால் பட்டியல் பிரிவு மக்களுக்காக போராடினார் என்று சொல்வார்கள்.இது அடிப்படையிலேயே பொய்.

பிராமணர் அல்லாத உயர்ஜாதியினரின் நலனையும்,அதிகாரத்தையும் காப்பாற்ற உருவானதே நீதிக்கட்சி.அதனுடைய நீட்சிதான் திராவிட இயக்கமும்.தங்கள் லாபத்திற்கு ஒரு கருவியாக பட்டியல் பிரிவு மக்களை பயன்படுத்தினார்களே ஒழிய அவர்களுக்கு உரிய இடத்தை தரவில்லை.தந்தாலும் நான் உனக்கு பிச்சையாக போட்டேன் பார்த்தாயா? என்ற ஆணவப்பேச்சு மட்டும்தான் வெளியே வரும்.

சமூகநீதியே இல்லை என்று இவர்கள் சொல்கிற உத்திர பிரதேசத்தில் மாயாவதியை பாஜகவே ஆதரித்தது முதலமைச்சர் ஆக.இதோ கர்நாடகா,ஆந்திராவில் கூட துணை முதல்வர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் இன்று சமூகநீதி இயக்கம் என்று சொல்லும் திமுக அவர்களில் ஒருவரை கட்சி பொது செயளாளர் ஆக்குவார்களா?

இன்று நாட்டின் ஜனாதிபதியை பட்டியல் பிரிவில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம் என்பதை Claim கூட பாஜக செய்யவில்லையே? இதுதானே சமதர்மத்தை ஆழ நினைப்பவர்களுக்கான அடையாளம்.

ரவிக்குமார் 2015 ல் கேட்டார் தலித்துகளின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு நன்றியே இல்லை அவர்களுக்கு நல்லது செய்ய என்று.அதன் பின்னால் SC/ST சட்டத் திருத்தத்தில் பாஜக சட்டப்பாதுகாப்பை உறுதிப் படுத்தியது.

ஆனால் அதற்காக ரவிக்குமார் நன்றி செலுத்தவில்லை அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்பது வேறு.இப்போது நாங்கள் போட்ட பிச்சை என்று ஆணவத்துடன் பேசுகிறாரே ஆர்எஸ் பாரதி இதை எதிர்த்து கேட்க திராணியுள்ளதா திரு.ரவிக்குமாருக்கு? அதே போல,அல்லது உண்மைதான் என்று பெருமையோடு ஏற்கப்போகிறாரா?

சரி, அம்பேத்கர் போட்ட பிச்சையில்தான் நான் வக்கீலானேன் என்று பேசுவாரா ஆர்எஸ் பாரதி? ஆனால் மோடி பேசினாரே அம்பேத்கர் போட்ட பிச்சையில்தான் நான் பிரதமர் ஆனேன் என்று.அவர்தான் இடஒதுக்கீட்டால் எனக்கான பங்கீட்டை உறுதி செய்தார் என்று.

  • சுந்தர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories