December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

நாடு முழுதும் பேர் சொல்லும் ‘நவராத்திரி’!

navaratri
navaratri

பார் புகழும் பாரதத்தில் பண்டையக் காலம் முதலே கொண்டாடப் பட்டு வரும் பண்டிகை நவராத்திரி. இந்த நவராத்திரி கொண்டாட்டங்களின் மூலம், நம் நாட்டு பாரம்பரியப் பண்பாடு பெரிதும் வெளிப்படுகிறது.

நவராத்திரி பண்டிகையின் போது தென்னகத்தின் கோலமும், வடக்கின் ரங்கோலியும், மத்திய இந்தியாவின் சன்ஸ்கார் பாரதியும் என ‘இல்ல வாயில்களில்’ கோலமிட்டு கொண்டாடப்படுகிறது. இதனால் நம் நாட்டு ‘கோலமிடுதல்’ என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

குமரி முனையில் உள்ள கன்னியாகுமரி கோயிலில் இருந்து காஷ்மீரத்து ஸ்ரீவைஷ்ணவி தேவி திகழும் எல்லை வரை, முப்பெரும் தேவிகளை மும்மூன்று இரவுகளில் வணங்கும் ‘பக்தி’ என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

‘செப்புமொழிகளால்’ சிந்தனை ஒன்றினால், மகிழும் நம் பாரத அன்னையின் புன்னகையினால் பன்மொழி இலக்கிய வளம் காத்தல் எனும் பண்பாடு வெளிப்படுகிறது.

navarathri-kolam
navarathri-kolam

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்களால் போற்றிப் பாதுகாக்கப் படும் கலாசாரம் பேணுதல் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

தென் கர்நாடக இசையாகட்டும், வட இந்துஸ்தானி இசையாகட்டும், நவராத்திரி நேரத்தில் இல்லங்களில் ஒலிக்கும், மக்களின் மனத்தினை இணைக்கும் ‘இசையால்’, இசை காத்தல் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

அஸ்ஸாமின் பிஹுவும், மராட்டிய லாவணியும், குஜராத்தின் கர்பாவும், ஒரிஸாவின் ஒடிஸியும், பஞ்சாபின் பாங்க்ராவும், ஆந்திராவின் குச்சுப்பிடியும், கேரளாவின் கதகளியும், தமிழின் பரதமும் என நாட்டியம் பேணுதல் என்னும்
பண்பாடு வெளிப்படுகிறது.

navarathri-spl
navarathri-spl

மழலையர் முதல் பல்லும் சொல்லும் போன முதியவர்கள் வரை கரைபுரளும் ‘உற்சாகத்தால்’, இன்பமே பெருகும் எனும் பண்பாடு வெளிப் படுகிறது. குதூகலமான கொண்டாட்டங்களுடன்’, மகிழ்ச்சியே வாழ்வாதாரம் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

‘வாழையடி வாழையாய்’ விருந்தோம்பல் தொடர்வதால், பகிர்வதில் இன்பம் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

தெற்கிலும் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் கொண்டாடப்படும் நவராத்திரியால் நாம் யாவருமே கேளிர் எனும் பாரதத்தின் பாரம்பரியப் பண்பாடு வெளிப்படுகிறது.

திரைகடல் ஓடினாலும், திரவியம் தேடினாலும்
அங்கும் இந்திய மக்கள் நவராத்திரி கொண்டாடுவதால் மரபினை பின்பற்றுதல் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.

  • கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories