December 7, 2025, 12:48 PM
28.4 C
Chennai

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 26)

manakkula vinayakar and bharathi 4 - 2025

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 26
விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 33 – வெண்பா

உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி – எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

பொருள் – விநாயகப் பெருமானே என்னுடைய உயிரும் உள்ளமும் உனக்கெனவே தந்தேன். எனவே என்னுடைய மனக்கவலைகள் அனைத்தையும் மாற்றி, எனக்கு நீண்ட புகழ், நீண்ட ஆயுட் காலம், நிறைந்த செல்வம், பேரழகு விரைவாக தேவையான அளவிற்குத் தருவாயாக.

பாடல் ‘உனக்கே’ எனத் தொடங்கி, ‘விரைந்து’ என முடிகிறது.

பாடல் 34 – கலித்துறை

விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே!

பொருள் – அனுமார் மூலமாக இராவணனின் இலங்கையை எரியூட்டிய, திருவரங்கத்தில் இலக்குமியுடன் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமானின் மருமகனான விநாயகா, நீ வரங்களை மழையாய் பொழியும் மேகம்; என்னுள்ளத்தில் வாழ்பவன்; எனவே விநாயகப் பெருமானே, விரைவாக உன்னுடைய திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும்.

பாடல் ‘விரைந்து’ எனத் தொடங்கி, ‘வாழ்பவனே’ என முடிகிறது.

பாரதியார் அவர்கள் இந்தப் பாடலில் குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன் அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் என்ற கம்பராமாயணக் கதை ஒன்றினைக் குறிப்பிட்டுள்ளார். சீதையைத் தேட, தென்திசை சென்ற அனுமன், இலங்கை சென்று பிராட்டியாரைக் காண்கிறான். பின்னர் நான் வேறு என்ன இங்கே செய்யவேண்டும் என எண்ணுகிறான்.

‘மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளதுஅன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவதுகொல்?’ என்று முயல்கின்றான். 5

‘இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல் செவி சார்தலும், அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உற முருக்கி, உயிர் உண்பல், இது சூதால். 6

‘வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்,
வெந் திறல் அரக்கனும், விலக்க அரு வலத்தால்
முந்தும்; எனின், அன்னவன் முடித் தலை முசித்து, என்
சிந்தை உறு வெந் துயர் தவிர்த்து, இனிது செல்வேன்.’ 7

(கம்பராமாயணம், சுந்தர காண்டம், பொழில் இறுத்த படலம், பாடல்கள் 5,6,7)

இதன் பின்னர் அனுமன் இந்திரசித்தனால் சிறைபிடிக்கப்பட்டு இராவணன் முன் கொண்டு செல்லப்படுகிறான். பின்னர் அனுமனின் வாலில் தீவைக்க ஆணையிடப்படுகிறது. இந்த நெருப்பினைக் கொண்டு அனுமன் இலங்கையை எரியூட்டுகின்றார். இதனை கம்பர் ஒரு பாடலில் மிக அழகாகச் சொல்கிறார்.

நீல் நிறநிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன்நன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்னமன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.

(கம்பராமாயணம், சுந்தர காண்டம், பிணி வீட்டு படலம், 133)

பாடலின் பொருளாவது – கருநிறத்தவர்களான அரக்கர்கள் எங்கும், நெய் சொரிந்து செய்யும் யாகங்களைப் புரிய வொட்டாமல் நீக்கி விட்டதனால் தன்னிடத்தே மிக்க பசி உடையவனான அக்கினி தேவனும் அனுமனது வாலை அன்புடன் தனக்கு ஆதாரமாகப் பற்றிக் கொண்டு விஷத்தை உண்ட சிவபெருமானே ஏவி உண்பிக்க உலகம் முழுவதையும் ஊழி முடிவில் எரிக்கின்ற காலத்தைப் போல இலங்கை நகரை விரைவாக எரித்து அழித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories