தடுப்பூசிகள் கைவசம் இருந்தும் மாவட்டங்களுக்கு முறையாக விநியோகிக்காதது ஏன்?!

covid vaccine
covid vaccine sand art pic curtesy: Sudarshan Patnaik

தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும், தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 10 விழுக்காடு அதிக தடுப்பூசி வழங்கியுள்ளது மத்திய அரசு என்றும் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பதும், அந்தந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்ட தொற்றின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், அமைச்சர் அவர்கள் கூறுவது சரியென்றால், மக்கள் தொகை அடிப்படையில் பாஜக ஆட்சி உள்ள உத்தரப் பிரதேசத்திற்கு தானே அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் மகாராஷ்டிராவுக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல் பாஜக ஆட்சி செய்யும் பீகாரில் அதிக மக்கள் தொகை உள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானுக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எங்கே பாரபட்சம் உள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.

ALSO READ:  செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

வயது மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கே தடுப்பூசிகளை விரைந்து செலுத்த வேண்டும் என்று இந்த விவகாரத்திற்கான அமைச்சகங்கள், மாநில அரசுகள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரே முடிவு செய்து அதற்கேற்ப ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் 18-44 வயதுக்குள்ளானோர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், 45 வயதுக்கு மேலானோரே அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள் எனபதாலும், உயிரிழப்புகளில் 85 விழுக்காடு 45 வயதுக்கு மேற்பட்டோர் தான் என்பதையும், மாநிலங்களின் தடுப்பூசி செலுத்தும் சராசரி எண்ணிக்கை மற்றும் விரயமாகும் தடுப்பூசிகளை கணக்கிட்டே அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிகின்றன என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்து, செலுத்தப்படும் 18-44 வயதுக்குள்ளானோருக்கான தடுப்பூசிகள், மாநிலங்களில் அந்த வயதுக்குப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையிலேயே .வழங்கப்படுகிறது. அதே போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விலையினையும் நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் விரயத்தை தவிர்த்து வேகமாக அதிக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் இருந்ததும், அதிக தடுப்பூசிகளை வீணடித்ததும், தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரத்தை அன்றைய எதிர்க்கட்சிகள் செய்து மக்களை தயக்கமடைய செய்ததுமே, தமிழகம் தடுப்பூசிகளை செலுத்துவதில் பின்னடைவை சந்தித்க வைத்தது என்பதையும் அமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

வருகிற ஜூன் 1 -15 வரை, தமிழகத்திற்கு 45 வயதுக்கு மேற்பட்டோருக்காக 6.55 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசும், 18-44 வயதுள்ளோருக்கு 11.52 லட்சம் தடுப்பூசிகளை, தடுப்பூசி நிறுவனங்களும் நேரடியாக அனுப்பவுள்ளன.

மேலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு இருந்தும் தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏன்? முறையாக மாவட்டங்களுக்கு விநியோகிக்கப் படாதது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொல்வாரா?

மத்திய அரசை குறைகூறுவதை நிறுத்தி விட்டு, மாவட்டங்களுக்கு முறையான விநியோகத்தை செய்து, தடுப்பூசிகளை விரைந்து செலுத்த மாண்புமிகு தமிழக சுகாதார துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

  • நாராயணன் திருப்பதி,
    (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories