வந்தேறிகளின் வம்பு பிரசாரம்: விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-29)

vantherikaL vambupracharam - 2026

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“Punctuality is absent among Indians – நேரம் தவறாமை இந்தியர்களுக்குத் தெரியாது!”

உலக நாடுகளில் இந்தியர்களுக்கு மட்டுமே நல்ல நேரம் பார்ப்பது என்ற விஞ்ஞான முறைமை உள்ளது. ஒரு பணியை நன்கு தேர்ந்தெடுத்த நேரத்தில் கச்சிதமாக மணி, நிமிடம், வினாடியோடு கூட செய்து முடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாம். நம்மைப் பார்த்து முதலில் வியந்து, பின்னர் ஏளனம் செய்வதற்காக Indian Punctuality என்ற சொல்லை பயன்படுத்தினர் வந்தேறிகள்.

திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களில் முகூர்த்த நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நம்மை விட யாரும் இல்லை.

அகந்தை கொண்ட பிரிட்டிஷார் தம் தாழ்வுமனப்பான்மையை காட்டிக் கொள்ள விரும்பாமல் இவ்விதமான ஆட்சேபணைகளை கூறத் தொடங்கினர். போகப்போக நமக்கு நேரம் தவறாமை குறித்த அலட்சியம் இருப்பதாகவும் இந்தியர்கள் எதையும் சரியான நேரத்திற்குத் தொடங்க மாட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

மனிதன் எப்போது உறக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்? எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? என்பது பற்றி ரிஷிகள் படைத்த சாஸ்திரங்கள் கூறும் அறிவியல் நமக்கு உள்ளது.

“ப்ராஹ்மீ முஹூர்தே உத்திஷ்டே ஸ்வஸ்தோ ரக்ஷார்தமாயுஷம்”

பொருள்: சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் – என்பது ஆயுர்வேத நூல்களில் முதல் பக்கத்திலேயே உள்ள அறிவுரை!

சோம்பலை அருகில்கூட நெருங்கவிடாத பாரதியர்களுக்கு நேரம் தவறாமை தெரியாதென்று அபவாதம் சுமத்துவது அசட்டுத்தனம்.

நித்தியம் செய்யும் சந்தியாவந்தனத்தில் அர்க்கியத்தை சரியான நேரத்தில் செய்யாவிட்டால் பிராயச்சித்தம் செய்து கொள்ளும் பண்பாடு நமக்குள்ளது. சரியான நேரத்தில் எதையும் செய்ய வேண்டும் என்று போதிக்கின்ற ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் பல உள்ளன.

மகாபாரதத்தில் உள்ள இந்த ஸ்லோகப் பகுதி நமக்குள்ள நேரம் தவறாமையை தெரிவிக்கிறது…

ஸ்வ: கார்ய மத்ய குர்வீத
பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !

பொருள்: நாளை செய்யலாமென்ற பணியை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்யலாம் என்று எண்ணிய வேலையை காலையே செய்ய வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஹிதோபதேசம் கூறும் இந்த நற்சொல் நாம் நேரத்தை எத்தனை மதிப்புள்ளதாக கணக்கிடுகிறோம் என்பதை தெரிவிக்கிறது…

க்ஷணஸ: கணஸ்ஸ்சைவ வித்யாம் அர்தஞ்ச சாதயேத் !

பொருள்: நேரத்தை வீணடிக்காமல் யாரிருப்பார்கள்… சுப முகூர்த்தம் வைத்துக் கொண்டு நேர விரயம் இன்றி வேலைகளைச் செய்யும் பாரதியர்களை விட?.

வந்தேறிகள் நம் மேல் செய்த நகைச்சுவையை நாமும் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வது தாழ்வு மனப்பான்மையின் உச்சம்!


Source- ருஷிபீடம் மாத இதழ், மார்ச், 2019


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories