February 21, 2026, 10:39 PM
27.3 C
Chennai

உலக வானிலை நாள் 2025

chennai meteorolocical centre - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலக வானிலை ஆய்வாளர்களின் உலக வெப்பமயமாதல் பற்றிய கணிப்புகள் சரியாகிவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. நமது காலநிலை தீயில் எரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும், பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் வெப்பமானவை.

          நிலப்பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கின்றது என்றால், கடல் வெப்பமும் சாதனைகளை முறியடித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் இதன் விளைவுகளை உணர்கிறது. காட்டுத்தீயின் சேதம், வெள்ளம் அல்லது முன்னோடியில்லாத புயல்களால் உலக நாடுகள் பாதிப்படைகின்றன.

          1950ஆம் ஆண்டு உலக வானிலை கழகம் (World Meteorolorogical Organisation) உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 23ஆம் தேதியை உலக வானிலை ஆய்வு நாளாக நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொவொரு ஆண்டும் இந்நாள் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான உலக வானிலையாய்வு தினத்தின் மையக்கருத்து – ஆரம்ப எச்சரிக்கை இடைவெளியை நாம் அனைவரும் இணைந்து குறைப்போம் – என்பதாகும். இது இந்தப் புதிய காலநிலை நிலவும் சூழலில், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் ஆடம்பரமாக வெளியே காட்டுவதற்கு மட்டும் உள்ளவை அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவை வளமான வாழ்வின் முக்கியமான தேவைகள் மற்றும் சிறந்த முதலீடுகள். இவை கிட்டத்தட்ட பத்து மடங்கு வருமானத்தை வழங்குகிறது.

ஆயினும்கூட, உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் இன்னும் இந்த உயிர்காக்கும் அமைப்புகளை உருவாக்குவதில் நல்ல புரிதல் இல்லை. டிஜிட்டல் யுகத்தில், பயனுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுவது அவமானகரமானது.

          2027ஆம் ஆண்டுக்குள் எல்லா இடங்களும் ஒரு எச்சரிக்கை அமைப்பு மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் தனது முன்முயற்சிக்கான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய உலகம் ஒன்று கூடி, அவசரமான நடவடிக்கை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

          நாடுகளுக்குள் இயற்கைப் பேரிடர்கள் பற்றி வானிலை எச்சரிக்கைகள் வழங்குவதற்கு உயர்மட்ட அரசியல் ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவில் ஊக்கம், அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பு மற்றும் நிதியத்தை அதிகரிக்க பெரிய முயற்சி தேவை. பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிப்பது முக்கியமானது. கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட எதிர்கால ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றங்களைச் செய்தது, அது முழுமையாக வழங்கப்பட வேண்டும். எனவே COP29 நிதி முடிவு இருக்க வேண்டும்.

          அதே நேரத்தில், காலநிலை நெருக்கடியை மூலத்தில் சமாளிக்கும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.  பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் விரைவான மற்றும் ஆழமான குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைவதைத் தடுக்கிறது. இந்த ஆண்டு அனைத்து நாடுகளும் உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தேசிய காலநிலை செயல் திட்டங்களை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

          இந்தியாவில் இந்திய வானிலை ஆய்வுத்துறை இயற்கைப் பேரிடர்களான, புயல், பெருவெள்ளம், பெருமழை போன்றவற்றிற்கான எச்சரிக்கைகளை வழங்குகிறது. இதற்காக நவீன டாப்ளர் வெதர் ரடார்களை நாடெங்கிலும் அமைத்து வருகிறது. சென்னையில் துறைமுக பொறுப்புக்கழக நூற்றாண்டுவிழாக் கட்டிடத்தின் மேல்மாடியில் S-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரணையில் NIOT வளாகத்தில் ஒரு C-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலும் காரைக்காலிலும் S-Band டாப்ளர் வெதர் ராடார்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

          சென்னை நகரில் பெருமழக்காலத்தில் பெருவெள்ள எச்சரிக்கை வழங்க ஏதுவாக இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் தானியங்கி வானிலை நிலையங்களும், தானியங்கி மழைமானிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories