April 23, 2025, 5:33 PM
34.3 C
Chennai

உலக வானிலை நாள் 2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலக வானிலை ஆய்வாளர்களின் உலக வெப்பமயமாதல் பற்றிய கணிப்புகள் சரியாகிவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. நமது காலநிலை தீயில் எரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும், பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் வெப்பமானவை.

          நிலப்பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கின்றது என்றால், கடல் வெப்பமும் சாதனைகளை முறியடித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் இதன் விளைவுகளை உணர்கிறது. காட்டுத்தீயின் சேதம், வெள்ளம் அல்லது முன்னோடியில்லாத புயல்களால் உலக நாடுகள் பாதிப்படைகின்றன.

          1950ஆம் ஆண்டு உலக வானிலை கழகம் (World Meteorolorogical Organisation) உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 23ஆம் தேதியை உலக வானிலை ஆய்வு நாளாக நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொவொரு ஆண்டும் இந்நாள் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான உலக வானிலையாய்வு தினத்தின் மையக்கருத்து – ஆரம்ப எச்சரிக்கை இடைவெளியை நாம் அனைவரும் இணைந்து குறைப்போம் – என்பதாகும். இது இந்தப் புதிய காலநிலை நிலவும் சூழலில், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் ஆடம்பரமாக வெளியே காட்டுவதற்கு மட்டும் உள்ளவை அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவை வளமான வாழ்வின் முக்கியமான தேவைகள் மற்றும் சிறந்த முதலீடுகள். இவை கிட்டத்தட்ட பத்து மடங்கு வருமானத்தை வழங்குகிறது.

ALSO READ:  பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ஆயினும்கூட, உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் இன்னும் இந்த உயிர்காக்கும் அமைப்புகளை உருவாக்குவதில் நல்ல புரிதல் இல்லை. டிஜிட்டல் யுகத்தில், பயனுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுவது அவமானகரமானது.

          2027ஆம் ஆண்டுக்குள் எல்லா இடங்களும் ஒரு எச்சரிக்கை அமைப்பு மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் தனது முன்முயற்சிக்கான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய உலகம் ஒன்று கூடி, அவசரமான நடவடிக்கை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

          நாடுகளுக்குள் இயற்கைப் பேரிடர்கள் பற்றி வானிலை எச்சரிக்கைகள் வழங்குவதற்கு உயர்மட்ட அரசியல் ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவில் ஊக்கம், அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பு மற்றும் நிதியத்தை அதிகரிக்க பெரிய முயற்சி தேவை. பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிப்பது முக்கியமானது. கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட எதிர்கால ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றங்களைச் செய்தது, அது முழுமையாக வழங்கப்பட வேண்டும். எனவே COP29 நிதி முடிவு இருக்க வேண்டும்.

ALSO READ:  கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

          அதே நேரத்தில், காலநிலை நெருக்கடியை மூலத்தில் சமாளிக்கும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.  பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் விரைவான மற்றும் ஆழமான குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைவதைத் தடுக்கிறது. இந்த ஆண்டு அனைத்து நாடுகளும் உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தேசிய காலநிலை செயல் திட்டங்களை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

          இந்தியாவில் இந்திய வானிலை ஆய்வுத்துறை இயற்கைப் பேரிடர்களான, புயல், பெருவெள்ளம், பெருமழை போன்றவற்றிற்கான எச்சரிக்கைகளை வழங்குகிறது. இதற்காக நவீன டாப்ளர் வெதர் ரடார்களை நாடெங்கிலும் அமைத்து வருகிறது. சென்னையில் துறைமுக பொறுப்புக்கழக நூற்றாண்டுவிழாக் கட்டிடத்தின் மேல்மாடியில் S-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரணையில் NIOT வளாகத்தில் ஒரு C-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலும் காரைக்காலிலும் S-Band டாப்ளர் வெதர் ராடார்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

          சென்னை நகரில் பெருமழக்காலத்தில் பெருவெள்ள எச்சரிக்கை வழங்க ஏதுவாக இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் தானியங்கி வானிலை நிலையங்களும், தானியங்கி மழைமானிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  பாலமேடு அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories