உலக வானிலை நாள் 2025

chennai meteorolocical centre - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலக வானிலை ஆய்வாளர்களின் உலக வெப்பமயமாதல் பற்றிய கணிப்புகள் சரியாகிவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. நமது காலநிலை தீயில் எரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும், பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் வெப்பமானவை.

          நிலப்பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கின்றது என்றால், கடல் வெப்பமும் சாதனைகளை முறியடித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் இதன் விளைவுகளை உணர்கிறது. காட்டுத்தீயின் சேதம், வெள்ளம் அல்லது முன்னோடியில்லாத புயல்களால் உலக நாடுகள் பாதிப்படைகின்றன.

          1950ஆம் ஆண்டு உலக வானிலை கழகம் (World Meteorolorogical Organisation) உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 23ஆம் தேதியை உலக வானிலை ஆய்வு நாளாக நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொவொரு ஆண்டும் இந்நாள் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான உலக வானிலையாய்வு தினத்தின் மையக்கருத்து – ஆரம்ப எச்சரிக்கை இடைவெளியை நாம் அனைவரும் இணைந்து குறைப்போம் – என்பதாகும். இது இந்தப் புதிய காலநிலை நிலவும் சூழலில், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் ஆடம்பரமாக வெளியே காட்டுவதற்கு மட்டும் உள்ளவை அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவை வளமான வாழ்வின் முக்கியமான தேவைகள் மற்றும் சிறந்த முதலீடுகள். இவை கிட்டத்தட்ட பத்து மடங்கு வருமானத்தை வழங்குகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

ஆயினும்கூட, உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் இன்னும் இந்த உயிர்காக்கும் அமைப்புகளை உருவாக்குவதில் நல்ல புரிதல் இல்லை. டிஜிட்டல் யுகத்தில், பயனுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுவது அவமானகரமானது.

          2027ஆம் ஆண்டுக்குள் எல்லா இடங்களும் ஒரு எச்சரிக்கை அமைப்பு மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் தனது முன்முயற்சிக்கான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய உலகம் ஒன்று கூடி, அவசரமான நடவடிக்கை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

          நாடுகளுக்குள் இயற்கைப் பேரிடர்கள் பற்றி வானிலை எச்சரிக்கைகள் வழங்குவதற்கு உயர்மட்ட அரசியல் ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவில் ஊக்கம், அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பு மற்றும் நிதியத்தை அதிகரிக்க பெரிய முயற்சி தேவை. பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிப்பது முக்கியமானது. கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட எதிர்கால ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றங்களைச் செய்தது, அது முழுமையாக வழங்கப்பட வேண்டும். எனவே COP29 நிதி முடிவு இருக்க வேண்டும்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

          அதே நேரத்தில், காலநிலை நெருக்கடியை மூலத்தில் சமாளிக்கும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.  பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் விரைவான மற்றும் ஆழமான குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைவதைத் தடுக்கிறது. இந்த ஆண்டு அனைத்து நாடுகளும் உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தேசிய காலநிலை செயல் திட்டங்களை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

          இந்தியாவில் இந்திய வானிலை ஆய்வுத்துறை இயற்கைப் பேரிடர்களான, புயல், பெருவெள்ளம், பெருமழை போன்றவற்றிற்கான எச்சரிக்கைகளை வழங்குகிறது. இதற்காக நவீன டாப்ளர் வெதர் ரடார்களை நாடெங்கிலும் அமைத்து வருகிறது. சென்னையில் துறைமுக பொறுப்புக்கழக நூற்றாண்டுவிழாக் கட்டிடத்தின் மேல்மாடியில் S-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரணையில் NIOT வளாகத்தில் ஒரு C-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலும் காரைக்காலிலும் S-Band டாப்ளர் வெதர் ராடார்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

          சென்னை நகரில் பெருமழக்காலத்தில் பெருவெள்ள எச்சரிக்கை வழங்க ஏதுவாக இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் தானியங்கி வானிலை நிலையங்களும், தானியங்கி மழைமானிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories