காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 32):

Veer Savarkar - 2026

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 32…

‘ FREE INDIA SOCIETY ‘ ன் உள்வட்ட உறுப்பினர்கள் ‘ வெடிகுண்டுகள் தயாரிப்பதென முடிவுச் செய்து, அதற்கான தொழிற்நுட்பத்தைப் பெறுவதற்காக நிதி திரட்டினர்.

மூன்று நம்பகமான நபர்கள் தெரிவுச் செய்யப்பட்டு, பிரான்ஸ் நாட்டுத் தலைநகரமான பாரீஸுக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு தங்கியிருக்கக் கூடிய ரஷ்ய புரட்சியாளர் யாரையாவது கண்டு பிடித்து, அவரிடமிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை பெற வேண்டும் என்பது பயணத்தின் நோக்கம்.

அங்கு முதலில் ஒரு போலி பேராசிரியரால் ஏமாற்றப்பட்டனர்.

ஆயினும் மனம் தளர்ந்து விடவில்லை.

ரஷ்யாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு பாரீஸிலிருந்த ஒரு புரட்சியாளரின் தொடர்பு கிடைத்தது.

அவர், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான முறைகள், அவற்றை புரட்சிக்கர வேலைகளுக்கு பயன் படுத்தும் விதம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தார்.

ஆதாரபூர்வமான கையேடு ஒன்றையும் கொடுத்தார்.

அதில் பல்வேறு விதமான வெடிகுண்டுகள் , அவற்றை தயாரிக்கும் முறை, பயன்கள் என அனைத்து விவரங்களும் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இதற்காக அந்த ரஷ்ய புரட்சியாளர் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை.

ஆனால்….

இந்த கையேடானது சாவர்க்கரால் தயாரிக்கப்பட்டு, லண்டனில் அச்சிடப்பட்டது என,  அன்றைய இந்திய நாட்டிலிருந்த ஆங்கிலேய அரசின் காவல் துறை குற்றஞ் சாட்டியது.

விரைவில் பாரத நாடெங்கும் பல்வேறு பகுதிகளுக்கு அந்த கையேட்டின் நகல்கள் விநியோகமானது.

காவல்துறை தேடுதல் வேட்டையின் போது,

கல்கத்தா, அலகாபாத், லாகூர், நாஸிக் மற்றும் பூனா உள்ளிட்ட இடங்களிலிருந்து கையேட்டின் நகல்கள் பறிமுதல் ஆயின.

ஒரு நகல், சாவர்க்கரின் மூத்தச் சகோதரர் பாபுராவ் அவர்களின் வீட்டிலிருந்து கிடைத்தது.

இதனால், ‘ மேன்மைப் பொருந்திய பேரரசிற்கும், பேரரசருக்கும் எதிராக போர் தொடுக்க சாவர்க்கர் தயாராகி வருவதாக ஆங்கிலேய அரசு வழக்குப் பதிவு செய்தது.

பாபுராவ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அங்கு சொல்லொணா சித்திரவதைகளுக்கு ஆளானார்.

பாபுராவ் என அறியப்பட்ட கணேஷ் தாமோதர சாவர்க்கர் அபிநவ் பாரத சொஸைட்டி எனும் அமைப்பை தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

அவரைப் பற்றிக் கூறுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், அவை கிளைக் கதைகள் ஆகி விடும் என்பதால் இந்த தொடரில் கூற இயலவில்லை.

பாபுராவ் சாவர்க்கர் போன்று பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள், ஆனால் அதிகம் அறியப்படாது இருப்பவர்கள் (UNSUNG HEROES OF FREEDOM FIGHT ) ஏராளம்..

அவர்களின் நினைவுகள் போற்றுதற்குரியன..

பயிரிடும் போதே தெரிகிறதா என்ன, எந்த அரிசி அட்சதை அரிசி ஆகும், எந்த அரிசி வாக்கரிசி ஆகுமென்று…

அது அரிசியின் குற்றமல்ல…

விதியின் விளையாட்டின் காரணமாக காந்தி, நேரு போன்ற சிலர் முன்னிலை பெற்று விடுகின்றனர்…

கட்டடங்களின் மேற்பரப்பு போல் பூச்சு வேலையும் வண்ணமும் கிடைக்கப் பெறுகின்றனர்…

தேசத்திற்காக, துயரங்கள் பல தாங்கியவர்கள், தம் இன்னுயிர் நீத்தவர்கள் எண்ணற்றோர் உள்ளனர்…

அவர்கள் தான் கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றவர்கள்….. என்பதை நியாய உணர்வுக் கொண்டோர் மறந்து விடக் கூடாது…

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories