காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 32):

Veer Savarkar - 2026

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 32…

‘ FREE INDIA SOCIETY ‘ ன் உள்வட்ட உறுப்பினர்கள் ‘ வெடிகுண்டுகள் தயாரிப்பதென முடிவுச் செய்து, அதற்கான தொழிற்நுட்பத்தைப் பெறுவதற்காக நிதி திரட்டினர்.

மூன்று நம்பகமான நபர்கள் தெரிவுச் செய்யப்பட்டு, பிரான்ஸ் நாட்டுத் தலைநகரமான பாரீஸுக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு தங்கியிருக்கக் கூடிய ரஷ்ய புரட்சியாளர் யாரையாவது கண்டு பிடித்து, அவரிடமிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை பெற வேண்டும் என்பது பயணத்தின் நோக்கம்.

அங்கு முதலில் ஒரு போலி பேராசிரியரால் ஏமாற்றப்பட்டனர்.

ஆயினும் மனம் தளர்ந்து விடவில்லை.

ரஷ்யாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு பாரீஸிலிருந்த ஒரு புரட்சியாளரின் தொடர்பு கிடைத்தது.

அவர், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான முறைகள், அவற்றை புரட்சிக்கர வேலைகளுக்கு பயன் படுத்தும் விதம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தார்.

ஆதாரபூர்வமான கையேடு ஒன்றையும் கொடுத்தார்.

அதில் பல்வேறு விதமான வெடிகுண்டுகள் , அவற்றை தயாரிக்கும் முறை, பயன்கள் என அனைத்து விவரங்களும் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

இதற்காக அந்த ரஷ்ய புரட்சியாளர் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை.

ஆனால்….

இந்த கையேடானது சாவர்க்கரால் தயாரிக்கப்பட்டு, லண்டனில் அச்சிடப்பட்டது என,  அன்றைய இந்திய நாட்டிலிருந்த ஆங்கிலேய அரசின் காவல் துறை குற்றஞ் சாட்டியது.

விரைவில் பாரத நாடெங்கும் பல்வேறு பகுதிகளுக்கு அந்த கையேட்டின் நகல்கள் விநியோகமானது.

காவல்துறை தேடுதல் வேட்டையின் போது,

கல்கத்தா, அலகாபாத், லாகூர், நாஸிக் மற்றும் பூனா உள்ளிட்ட இடங்களிலிருந்து கையேட்டின் நகல்கள் பறிமுதல் ஆயின.

ஒரு நகல், சாவர்க்கரின் மூத்தச் சகோதரர் பாபுராவ் அவர்களின் வீட்டிலிருந்து கிடைத்தது.

இதனால், ‘ மேன்மைப் பொருந்திய பேரரசிற்கும், பேரரசருக்கும் எதிராக போர் தொடுக்க சாவர்க்கர் தயாராகி வருவதாக ஆங்கிலேய அரசு வழக்குப் பதிவு செய்தது.

பாபுராவ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அங்கு சொல்லொணா சித்திரவதைகளுக்கு ஆளானார்.

பாபுராவ் என அறியப்பட்ட கணேஷ் தாமோதர சாவர்க்கர் அபிநவ் பாரத சொஸைட்டி எனும் அமைப்பை தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

அவரைப் பற்றிக் கூறுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், அவை கிளைக் கதைகள் ஆகி விடும் என்பதால் இந்த தொடரில் கூற இயலவில்லை.

பாபுராவ் சாவர்க்கர் போன்று பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள், ஆனால் அதிகம் அறியப்படாது இருப்பவர்கள் (UNSUNG HEROES OF FREEDOM FIGHT ) ஏராளம்..

அவர்களின் நினைவுகள் போற்றுதற்குரியன..

பயிரிடும் போதே தெரிகிறதா என்ன, எந்த அரிசி அட்சதை அரிசி ஆகும், எந்த அரிசி வாக்கரிசி ஆகுமென்று…

அது அரிசியின் குற்றமல்ல…

விதியின் விளையாட்டின் காரணமாக காந்தி, நேரு போன்ற சிலர் முன்னிலை பெற்று விடுகின்றனர்…

கட்டடங்களின் மேற்பரப்பு போல் பூச்சு வேலையும் வண்ணமும் கிடைக்கப் பெறுகின்றனர்…

தேசத்திற்காக, துயரங்கள் பல தாங்கியவர்கள், தம் இன்னுயிர் நீத்தவர்கள் எண்ணற்றோர் உள்ளனர்…

அவர்கள் தான் கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றவர்கள்….. என்பதை நியாய உணர்வுக் கொண்டோர் மறந்து விடக் கூடாது…

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories