காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 69): ஆப்தேயின் மனப் போராட்டம்!

godse - 2026

பாகிஸ்தானிற்கு வெடிப்பொருட்கள் கொண்டுசெல்லும் ரயிலை தகர்ப்பதை நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு குடும்பப் பிரச்சனைகள் ஆப்தேயின் மனதை ஆட் கொண்டிருந்தது. மகனின் மனநிலை பாதிப்பு அதிகமாகி வந்ததை தொடர்ந்து,இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான்,தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி பூனாவிலிருந்த ஒரு மனநல காப்பகத்தில் கொண்டு சேர்த்திருந்தார் ஆப்தே.

மகன் மனநலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்த ஆப்தேயின் மனைவி அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. அவள் மனதை தேற்றவே இயலவில்லை.

ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டு ஆப்தேயின் மனைவி தினசரி சத்தம் போட்டு சண்டை போடுவது வழக்கமாகத் தொடங்கியது. மகனை பார்க்க மனைவியை மனநலக் காப்பகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழைத்து சென்றார் ஆப்தே.

அது சித்திரவதை தரும் நிகழ்வாக இருந்தது. தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுவதும், ‘ விஸிட்டிங் நேரம் ‘ முடிந்தவுடன் தாயை இறுக்கி அணைத்துக் கொண்டு அனுப்ப மறுக்கும் மகனை பலவந்தமாக பிரிப்பதும் ஆப்தேயிற்கு நரகவேதனையாக இருந்தது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

மருத்துவமனையில் உடன் இருப்பவர்கள் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என கதை கதையாக மகன் முணுமுணுத்துக் கொண்டே இருப்பதை கண்ட ஆப்தே

ஒரு கட்டத்திற்கு மேல், டாக்டர்களிடம், மகனை வெளியே விடாது வீட்டிலேயே பத்திரமாக வைத்து பார்த்துக் கொள்ளுவதாகக் கூறி அழைத்து வந்து விட்டார்.

அக்கம்பக்கத்தாரின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. அதைப் பற்றி ஆப்தே கவலைப்படவில்லை. தாயும் மகனும் ஒன்றாக இருக்கிறார்களே அது ஒன்றே போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.

தன் கணவனை ஒரு கொடிய மிருகமாகப் பார்ப்பதையாவது ஆப்தேயின் மனைவி குறைத்துக் கொண்டார். அப்போது நடந்த வேறோரு விஷயம் ஆப்தேக்கு இருந்த கொஞ்சம்நஞ்சம் நிம்மதியையும் அழித்து விட்டது. மனோரமா சால்வி தான் கர்ப்பமாக இருப்பதாக ஆப்தேயிடம் தெரிவித்தார்.

மனோரமா சால்வி வில்சன்ஸ் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் பெண்கள் விடுதியில் இல்லை. பைகுலாவில் காவல்துறைக்குச் சொந்தமான ஒரு ஃப்ளாட்டில் பெற்றோரோடு இருந்தார்.

இது,மனோரமாவின் தந்தை தெளத்ராவ் சால்வே மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்த நார்த்கோட் காவல்துறை மருத்துவமனைக்கு அடுத்து அமைந்திருந்தது. B.A. கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தார்.
ஆப்தேயுடனான காதல் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகியிருந்தன.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

சால்வே குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது,கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் அக்கம்பக்கத்தினராக இருந்த ‘ மிஷினரி காம்பவுண்ட் ‘ டில் வசித்து வந்தார்கள். மனோரமா,ஆப்தேயுடனான காதலை பெற்றோரிடம் தெரிவித்தார்.

மகள் ஒரு ஹிந்துவை, அதுவும் தன் ஹிந்து மதத்திற்காக போர் குணம் கொண்டு போராடும் ஒருவனை காதலிக்கிறாள் என்பதும், அவனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்திருக்கிறாள் என்பதையும் அறிந்து அவர்கள் அதிர்ந்து போனார்கள்.

1947 அக்டோபர் மாதம் வரை ,மனோரமாவின் காதல் விவகாரம் அவர்களுக்குத் தெரியாமலேயே இருந்தது ஆச்சரியமே !

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories