காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 106): புதிய நபர்களால் ஏற்பட்ட பின்னடைவு!

gandhi naukaoli - 2026

பிர்லா ஹவுஸ் வளாகத்தை ஆய்வு செய்த பின், கார்கரே ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்று கோபால் கோட்ஸேயை அழைத்துக் கொண்டு ஷரிஃப் ஹோட்டலிலிருந்த தன் ரூமிற்கு சென்றார்.

அங்கு மதன்லால் பஹ்வா முதல் முறையாக கோபால் கோட்ஸேயை சந்தித்தார். அங்கு மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அங்சேகர் வருகைக்காக காத்திருந்தனர்.

அவர் வந்த பிறகு,அவரிடம் அவர்கள் மூவரும் ஜலந்தருக்கு, மதன்லால் பஹ்வாவின் திருமண விஷயமாக செல்வதாகக் கூறி அங்கிருந்து அவரை காலி செய்துஅனுப்பி விட்டனர். அதன் பிறகு மூவரும்,ஹிந்து மஹா சபா பவனிலிருந்த கார்கரேயின் அறைக்குச் சென்றனர்.

திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும் இன்னும் வந்தபாடில்லை. மாலையில்,மதன்லால் பஹ்வாவும் கோபால் கோட்ஸே அறையிலேயே தங்கியிருக்க கார்கரே மட்டும் மெரினா ஹோட்டலில் தங்கியிருந்த ஆப்தேயையும்,நாதுராமையும் சந்திக்கச் சென்றார்.

அங்கிருந்து மூவரும் புது டெல்லி ரயில் நிலையத்திற்கு,ஒரு வேளை FRONTIER MAIL அன்றைய ரயிலில் திகம்பர் பாட்கேயும் வருகிறார்களா என்று பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஒரு வேளை கோபால் கோட்ஸே ரயிலில் வந்த போது அவரை காணாமல் விட்டு விட்டதை போல் இவர்களையும் பார்க்காமல் விட்டு விட்டோமோ என்று கருதி,ஹிந்து மஹா சபா பவனுக்குச் சென்றனர்.

அங்கு அவர்கள் வந்திருந்தனர். அவர்கள் FRONTIER MAIL ரயிலுக்கு பதிலாக PUNJAB MAILல் வந்திருந்ததால் அவர்களை தவற விட்டு விட்டார்கள்.

நாதுராமும், ஆப்தேயும் பவனுக்கு வருவதற்கு முன்,ஹிந்து மஹா சபா பவனில், மதன்லால் பஹ்வாவோடு, ஒரு புது நபர் இருப்பதை திகம்பர் பாட்கேயும், ஷங்கர் கிஷ்டய்யாவும் பார்த்தனர். அவர் நாதுராமின் சகோதரர் கோபால் கோட்ஸே என்று அறிந்து கொண்டனர்.

திகம்பர் பாட்கேயிற்கும் ஷங்கர் கிஷ்டய்யாவிற்கும் அளிக்க தனி அறை கிடைக்காததால், அவர்கள் இருவரையும் ஹாலிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அன்றிரவை அவர்கள் அங்கேயே கழித்தார்கள். ஷர்மாவிடம் திகம்பர் பாட்கே வாங்கி வந்த .32 ரிவால்வர் ஷங்கர் கிஷ்டய்யா வசமிருந்தது.

கோபால் கோட்ஸே கொண்டு வந்த ரிவால்வரை அவரே வைத்திருந்தார். வெடிகுண்டுகளும்,வெடிப்பொருட்களும் மதன்லால் பஹ்வாவின் ‘ஹோல்டாலில்’ இருந்தது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

ஆப்தேயும்,நாதுராமும் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. பெரும் மதக்கலவரங்களை சந்தித்த டெல்லி இப்போது அமைதியாக இருந்தது.

காந்தியின் பாஷையில் கூற வேண்டுமானால்,தன் பாவங்களை கழுவிக் கொண்டு புண்ணியம் அடைந்த நகரமாக இருந்தது. அன்றைய காலை பத்திரிகைகளில், முஸ்லீம்கள் சுதந்திரமாக நடமாடி வருவதைப் பற்றிய செய்திகள்,

அவர்கள் ஊர்வலமாக வந்து,அவர்களுக்கு ஹிந்துக்களும், சீக்கியர்களும் பழங்களும் இனிப்புகளும் வழங்கியதாகவும் செய்திகள் வந்திருந்தன.

இவையெல்லாம் செயற்கையானதாக காட்சி அளித்தன. ஆட்சியி லிருந்த காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடோ என்று எண்ணத் தோன்றியது. உண்ணாவிரதமிருந்த காந்தியின் உயிரைக் காக்க உருவான அலை இப்போது அடங்கத் தொடங்கி இருந்தது.

அமைதியான மனதோடு,’ அமைதிக்கான உறுதிமொழி ‘யை படித்து பார்த்த போது, அது ஒருமித்ததாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.

(தொடரும்)

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories