காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 106): புதிய நபர்களால் ஏற்பட்ட பின்னடைவு!

gandhi naukaoli - 2026

பிர்லா ஹவுஸ் வளாகத்தை ஆய்வு செய்த பின், கார்கரே ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்று கோபால் கோட்ஸேயை அழைத்துக் கொண்டு ஷரிஃப் ஹோட்டலிலிருந்த தன் ரூமிற்கு சென்றார்.

அங்கு மதன்லால் பஹ்வா முதல் முறையாக கோபால் கோட்ஸேயை சந்தித்தார். அங்கு மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அங்சேகர் வருகைக்காக காத்திருந்தனர்.

அவர் வந்த பிறகு,அவரிடம் அவர்கள் மூவரும் ஜலந்தருக்கு, மதன்லால் பஹ்வாவின் திருமண விஷயமாக செல்வதாகக் கூறி அங்கிருந்து அவரை காலி செய்துஅனுப்பி விட்டனர். அதன் பிறகு மூவரும்,ஹிந்து மஹா சபா பவனிலிருந்த கார்கரேயின் அறைக்குச் சென்றனர்.

திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும் இன்னும் வந்தபாடில்லை. மாலையில்,மதன்லால் பஹ்வாவும் கோபால் கோட்ஸே அறையிலேயே தங்கியிருக்க கார்கரே மட்டும் மெரினா ஹோட்டலில் தங்கியிருந்த ஆப்தேயையும்,நாதுராமையும் சந்திக்கச் சென்றார்.

அங்கிருந்து மூவரும் புது டெல்லி ரயில் நிலையத்திற்கு,ஒரு வேளை FRONTIER MAIL அன்றைய ரயிலில் திகம்பர் பாட்கேயும் வருகிறார்களா என்று பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை.

ஒரு வேளை கோபால் கோட்ஸே ரயிலில் வந்த போது அவரை காணாமல் விட்டு விட்டதை போல் இவர்களையும் பார்க்காமல் விட்டு விட்டோமோ என்று கருதி,ஹிந்து மஹா சபா பவனுக்குச் சென்றனர்.

அங்கு அவர்கள் வந்திருந்தனர். அவர்கள் FRONTIER MAIL ரயிலுக்கு பதிலாக PUNJAB MAILல் வந்திருந்ததால் அவர்களை தவற விட்டு விட்டார்கள்.

நாதுராமும், ஆப்தேயும் பவனுக்கு வருவதற்கு முன்,ஹிந்து மஹா சபா பவனில், மதன்லால் பஹ்வாவோடு, ஒரு புது நபர் இருப்பதை திகம்பர் பாட்கேயும், ஷங்கர் கிஷ்டய்யாவும் பார்த்தனர். அவர் நாதுராமின் சகோதரர் கோபால் கோட்ஸே என்று அறிந்து கொண்டனர்.

திகம்பர் பாட்கேயிற்கும் ஷங்கர் கிஷ்டய்யாவிற்கும் அளிக்க தனி அறை கிடைக்காததால், அவர்கள் இருவரையும் ஹாலிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அன்றிரவை அவர்கள் அங்கேயே கழித்தார்கள். ஷர்மாவிடம் திகம்பர் பாட்கே வாங்கி வந்த .32 ரிவால்வர் ஷங்கர் கிஷ்டய்யா வசமிருந்தது.

கோபால் கோட்ஸே கொண்டு வந்த ரிவால்வரை அவரே வைத்திருந்தார். வெடிகுண்டுகளும்,வெடிப்பொருட்களும் மதன்லால் பஹ்வாவின் ‘ஹோல்டாலில்’ இருந்தது.

ஆப்தேயும்,நாதுராமும் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. பெரும் மதக்கலவரங்களை சந்தித்த டெல்லி இப்போது அமைதியாக இருந்தது.

காந்தியின் பாஷையில் கூற வேண்டுமானால்,தன் பாவங்களை கழுவிக் கொண்டு புண்ணியம் அடைந்த நகரமாக இருந்தது. அன்றைய காலை பத்திரிகைகளில், முஸ்லீம்கள் சுதந்திரமாக நடமாடி வருவதைப் பற்றிய செய்திகள்,

அவர்கள் ஊர்வலமாக வந்து,அவர்களுக்கு ஹிந்துக்களும், சீக்கியர்களும் பழங்களும் இனிப்புகளும் வழங்கியதாகவும் செய்திகள் வந்திருந்தன.

இவையெல்லாம் செயற்கையானதாக காட்சி அளித்தன. ஆட்சியி லிருந்த காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடோ என்று எண்ணத் தோன்றியது. உண்ணாவிரதமிருந்த காந்தியின் உயிரைக் காக்க உருவான அலை இப்போது அடங்கத் தொடங்கி இருந்தது.

அமைதியான மனதோடு,’ அமைதிக்கான உறுதிமொழி ‘யை படித்து பார்த்த போது, அது ஒருமித்ததாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.

(தொடரும்)

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories