அதிமுக.,வில் இரு ஸ்லீப்பர்செல்கள்! கட்டதொர… மைக்குமார்!

piyush goyal thambidurai - 2026

அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மெகா கூட்டணி அமையும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் திமுக அந்தக் கூட்டணிக்கு தடையாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது… இந்த அரசியல் பணியில் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக உள்ள அதிமுகவினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக.,வை மாநிலத்தில் வளர்ப்பது அதிமுக.,வின் பணி அல்ல என்று வழக்கம் போல் தம்பிதுரை ஆவேசமாகக் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை சில மாதங்களுக்கு முன் அதிமுகவை ஊழல் கட்சி என்றனர், ரஜினிகாந்த் பின்னால் சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. மீண்டும் அதிமுகவை நெருங்குகின்றனர். பத்திரிகையாளர் குருமூர்த்தி எந்தக் கட்சி என தெரியாது. அவர் சொன்னால் கூட்டணி வராது. தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக அனுமதிக்காது என்று கூறினார்.

அவரது பேச்சுக்களால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் கூட்டணி முடிவிகளை பாஜக எடுக்கக் கூடாது, அதிமுக தான் முடிவுகளை எடுக்கும் என்பதை காட்டவே தம்பிதுரையும் ஜெயக்குமாரும் ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுப்பதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தம்பிதுரை மீது பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அவர் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.

யார் பாஜகவை சுமப்பது அதிமுகவா? மக்கள் உண்மையை அறிவார்கள். திமுகவின் ஸ்லீப்பர் செல் தம்பி துரை … அதிமுக தலைமை தம்பிதுரை அல்ல! எங்கள் தயவில் தான் துணை சபாநாயகராக அவர் உள்ளார். பொய் பேசுகிறார் தம்பிதுரை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்!

அடுத்த சில நாட்களில் மெகா கூட்டணி அமைப்போம் என கூறிய பாஜகவின் முன்முயற்சியை பின்னுக்கு தள்ள அதிமுகவினர் முயன்று வருகின்றனர்.

இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் மட்டும் விரும்பினால் போதாது, நாங்களும் விரும்ப வேண்டும். தற்போது அது குறித்து பேச தேவையில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories