March 15, 2025, 10:41 PM
28.3 C
Chennai

வைகோ., மீது ஹெச்.ராஜா ஆவேசப்பட அப்படி என்ன இருக்கிறது?

வைகோவால் கலிங்கப்பட்டியில் வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா? மோடி பற்றி பேச வைகோவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா ஆவேசப்பட்டு பேசியிருக்கிறார்.

ஆவேசப்பேச்சில் கைதேர்ந்தவர் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவர் பேச்சைக் கேட்டு மேலும் ஆவேசப் பட்டு பேச ஹெச்.ராஜா முயன்றிருப்பது தேவையற்றது என்றே தோன்றுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகவே பேசி வந்தார் வைகோ. விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்டோரும் மோடிக்கு ஆதரவாகவே பேசி வந்தனர். அடுத்த தேர்தலில், மக்கள் நலக் கூட்டணிக்காக பாதை மாறிய வைகோ, உடனே தன் பேச்சை மாற்றிக் கொண்டார்.

அதற்கு முன்னதாக, திமுக.,வை எதிர்த்தே எல்லா மேடைகளிலும் படுகேவலமாகப் பேசி வந்தார். அவரது பேச்சைக் கேட்ட திமுக.,காரர் எவரும் வைகோவின் முகம் கண்டாலே காறித் துப்பும் மனநிலையில்தான் இருந்தார்கள். அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை தன் திடீர் பாசத்தால் பார்க்க வந்த வைகோவுக்கு செருப்பை எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர் திமுக., தொண்டர்கள்.

இன்னும் சொல்லப் போனால், ஈழத்தமிழரை கொன்ற கட்சி திமுக., பார்வதிஅம்மாளை தரையிலேயே வரவிடாமல் திருப்பி அனுப்பியது திமுக தலைமை, சாதிக் பாட்சாவை கொன்ற கொலையாளி ஸ்டாலின், கனிமொழியை பலிகடாவாக்கி 2ஜி பணத்தை கொள்ளை அடித்தவர் ஸ்டாலின், மானமுள்ளவன் திமுக.,வுடன் கூட்டு வைக்கமாட்டான், தமிழுணர்ச்சி செத்துப் போனவந்தான் திமுக.,வுடன் பேசுவான் என்றெல்லாம் நார்நாராய் கிழித்துப் போட்டவர் வைகோ. அவரையும் திமுக.,வினர் ஏற்றுக் கொண்டு மேடை ஏற்றவில்லையா? திமுக.,வினர் காறித்துப்பினாலும், செருப்பைக் கொண்டு எறிந்தாலும் இப்போது வைகோ அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வருங்கால முதல்வர் ஸ்டாலின் அவர்களே என்றெல்லாம் கூக்குரலிடவில்லையா?

ஹெலிகாப்டரில் பயணித்த போது மோடியை கை காட்டி ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்து அளவளாவும் வைகோ…

நாளையே திமுக., கூட்டணியில் மதிமுக.,வுக்கு 2 தொகுதிகள்தான் என்று தொகுதிப் பங்கீடு பேசப் பட்டால், சுவரில் அடித்த பந்து போல வைகோ கூட ஒரு சீட் கொடுங்க என்று சொல்லி அதிமுக., கூட்டணியில் ஓட்டிக் கொள்வார். அப்போது பாஜக.,வும் அதே கூட்டணியில் இருந்தால்… வைகோ.,வுக்கு வேண்டுமானால் இந்த அரசியல் பழகிப் போய் இருக்கலாம்! ஆனால் பாஜக.,வினர் வைகோ விஷயத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது! நாளையே மோடிக்காக மீண்டும் தெருத்தெருவாக சுற்றி வந்து, நாளைய அமெரிக்க அதிபர் நரேந்திர மோடியே என்றோ, ஐ.நா.,வை வென்றெடுத்த ந.மோ., என்றோ ஏதாவது ஒரு குக்கிராமத்தில் வேனில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்…! அப்படிப்பட்ட ஒரு விளம்பரத் தூதரை பாஜக.,வினர் இழக்க வேண்டுமா என்று ஹெ.ராஜா யோசிக்க வேண்டும்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. வைகோ திமுகவை பற்றி சொல்லிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை மட்டுமே. தன்னுடைய மகனை முதல்வர் ஆக்கவேண்டும் என்பதற்காக கொலைப்பழி சுமத்தி என்னை திமுகவில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி என்றெல்லாம் பல உண்மைகளை சொன்ன வைகோ , தனக்காக தீக்குளித்து உயிர்துறந்த தொண்டர்களின் தியாகத்தையும் கேவலப்படுத்தி , அதே திமுகவுடன் கூட்டணி போட்டு, ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்வதைவிட கேடு கெட்ட ஒரு விஷயம் இல்லை. வைகோ அரசியலில் முழு சைபர் ஆகிவிட்டார். வைகோ உடன் இருந்தால் திமுகவும் முழு சைபர் ஆவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

Topics

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. - இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து,

நாகரீகக் கோமாளிகள்!

கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்; நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!

Entertainment News

Popular Categories