அஞ்சு வாங்குறதுக்கு அமித் ஷா வேற வரணுமா?

vijayakanth piyush goyal - 2026

தமிழகத்தில் நேற்றைய பரபரப்பு அதிமுக., அறிவித்த கூட்டணிகள்தான்! பாமக., பாஜக., இரு கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அறிவித்தது அதிமுக.,! இன்னமும் தொகுதிகள் உறுதி செய்யப் படாத நிலையிலும், போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையின் படி, பாமக.,வுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப் பட்டது.

ஆனால், பாஜக.,வுக்கு 5 தொகுதிகளே ஒதுக்கப் பட்டன. இது குறித்து பாஜக., அபிமானிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். தனித்தே போட்டியிட்டிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.

இருப்பினும், இந்தக் கூட்டணிக்கான முதல் முயற்சிகளை மேற்கொண்டது பாஜக.,தான்! தமிழகத்தில் இந்த முறை மெகா கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து, கூட்டணியை அமைக்க முயற்சி செய்தது. பழைய கூட்டாளிகளுடன் கூட்டணி அமையும் என்று மோடியும் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்படி, அதிமுக., பாமக., தேமுதிக., என எதிர்பார்த்த வகையில் அதிமுக., பாமக.,வுடன் கூட்டணி அமைந்துள்ளது.

admk pmk alliance - 2026

பாஜக., முயற்சி எடுத்தாலும், தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுக.,வே இங்கு கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்று உறுதியாக சொல்லப் பட்டதால், அதை ஏற்று, பாஜக.,வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலே அதிமுக., தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இதனிடையே, சிவசேனையுடனான கூட்டணி முடிந்த கையுடன் தமிழகத்திலும் கூட்டணி குறித்து பேசி பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை நேற்று அவர் வரவில்லை. பதிலாக, முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய பியூஷ் கோயலே வந்தார்.

அமித் ஷா ஏன் வரவில்லை என்று பல்வேறு யூகங்கள் கிளம்பிக் கொண்டிருந்த நிலையில், கூட்டணி குறித்தும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் அறிவிப்பு வந்த போது கட்சியினருக்கு தெரியவந்தது.

ஆமாம்.. இந்த அஞ்சு தொகுதிகளை வாங்குவதற்கு அமித் ஷா வேற வரணுமா? என்றும், கூட்டணித் தலைமை என்பது அதிமுக எனும் போது, அதற்கு எதற்கு அமித் ஷா வரணும் என்றும் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.

பாஜக., இதனை வழக்கம் போல் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அழைப்பதையே விரும்பியது. ஆயினும் ஒரு புதிய பெயரை சொல்லிவிட்டுச் சென்றார் பாமக., ராமதாஸ்.

அதிமுக., தலைமையில்தான் கூட்டணி என்றால், ஏன் தேமுதிக.,வுடன் அதிமுக., பேச்சுவார்த்தை நடத்தாமல், பியூஷ் கோயல் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார் என்ற கேள்வியை பாஜக.,வினர் எழுப்புகின்றனர்.

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories