ஆர்.டி.எக்ஸ் வெடிச்சத்தம்… பெயர் மட்டும் அமைதி பூங்கா! 27 ஆம் ஆண்டு நினைவில்!

IMG 20190808 WA0023 - 2026

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் பிறந்த சவுந்தரராஜன் பின்னாட்களில் சேருவார் சேர்க்கை சரியில்லாமல் தத்தாரியாய் திரிந்து இஸ்லாமியனாக ஹைதர்அலி எனற பெயரில் மதம் மாறினான்.

M K தியாகராஜ பாகவதர் போன்ற நன் மக்கள் பிறந்த சமுதாயத்தில் பிறந்தவன், இமாம்அலி தொடர்பிற்குப் பின் குடும்பத்தைப் பிரிந்து மதம் மாறி தீவிரவாதப் பாதையில் செல்லத் தொடங்கினான். இமாம் அலி ஜிஹாத் கமிட்டி பொறுப்பில் இருந்தான். பழனிபாபாவுடன் நல்ல தொடர்பில் இருந்தான்.

இதன் ஒரு பகுதியாக 1992ம் ஆண்டில் வெடிகுண்டு தயாரித்து அதை அவன் வீட்டருகில் உள்ள ஆனைமலை பகுதியில் Test செய்தான். சத்தம் கேட்டு ஊர்மக்கள் ஓடி வந்து விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது ஜெயலலிதா அரசு. கைது செய்த காவல்துறை சிறையிலிருந்து இமாம் அலியையும், ஹைதர் அலியையும் வழக்கு விசாரணைக்கு கையில் விலங்கிடாமல் அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர் இதனைப் பயன்படுத்தி இருவரும் போலீஸிலிருந்து தப்பித்தனர்.

தப்பித்த இருவரும் மேலப்பாளையம், ஆம்பூர்,வாணியம்பாடி, கோவை போன்ற பல இடங்களுக்கு சென்று பல இஸ்லாமிய இளைஞர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு பெரிய அளவில் கொலை செய்யத் திட்டமிட்டனர்.

இதற்காக தங்கள் வழி முறையை மாற்றி இந்து இயக்கங்களுக்குள் ஊடுருவ முயன்றனர். தங்களை சாதாரண கடவுள் பக்தியுள்ள இந்துக்கள் போல் காட்டிக்கொண்டு இந்துமுன்னணி நடத்தும் கூட்டங்களை follow செய்தனர். அப்போது இந்துமுன்னணியின் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய S V ஸ்ரீதரன் கூட்டங்களை நோட்டம் விட்டு அவரிடம் வாணியம்பாடி பொது கூட்டம் முடிந்தவுடன் இந்து பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பேச்சாளரிடம் எங்கு தங்கி உள்ளீர்கள் என்றதற்கு சென்னை காரியாலயம் என்றார். எங்களுக்கு சேத்பட் காரியாலயம் தெரியும், சென்னையில் வேலை செய்கிறோம், அங்கு வரும்போது சந்திப்பதாகவும் சொல்லி விடைபெற்றனர். அப்போது இந்துமுன்னணி காரியாலயம் சேத்துபட்டில் சங்க காரியாலயம் அருகே இருந்தது.

சொன்னது போலவே 2,3 முறை அந்த பிரமுகர் இல்லாத போது இந்துமுன்னணி அலுவலகம் வந்துள்ளனர். அவர் இல்லை என்றவுடன் இருவரும் சங்க காரியாலயம் சென்று தங்களை இந்து பெயரில் அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். அதானல் இந்த இருவரும் நம் இயக்க ஆட்கள் எனும் தோற்றத்தை ஏற்படுத்தினர்.

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

அப்போது இந்துமுன்னணி அலுவலகத்திற்கு தொலைபேசி வசதி இல்லை. சங்க ஆபிஸ் நம்பர்தான் தொடர்பிற்கு. ஒரு calling bell switch மூலம் இந்து முன்னணி அலுவலகத்திற்கு தெரிவிக்கப் படும். பின்னர் யாராவது ஒருவர் வந்து போனுக்கு பதில் சொல்வது வழக்கம். அது போல 06.08.1993 வெள்ளிக்கிழமை மதியம் சங்க அலுவலகத்திற்கு போன் செய்த இமாம்அலி நம் பிரமுகரிடம் பேச வேண்டும் என சொல்லியுள்ளான். சங்க அலுவலகத்திலுந்து bell அடித்தவுடன் அப்போதைய இந்துமுன்னணி முழுநேர ஊழியரும் என் நண்பன் திருவாரூர் பாலு சங்க காரியாலயம் வந்து போனுக்கு பதில் சொல்லியுள்ளான். அவர்கள் நம் பிரமுகர் பற்றி கேட்க வெளியில் சென்றுள்ளார், மாலை வருவார் என பாலு சொன்னான். இமாம்அலியும் மாலை 5மணிக்கு மேல் வருகிறேன். அவரை இருக்க சொல்லுங்க என சொன்னான்.

சொன்னது போலவே அன்று மாலை 5.30மணியளவில் இந்துமுன்னணி அலுவலகம் இருவரும் வந்துள்ளனர். திருவல்லிக்கேணி சீனிவாசன்(கருப்பு சீனு) எனும் முழு நேர ஊழியர் இருந்தார். ஒருவரைப் பார்த்தால் அவரை கிட்டத்தட்ட அப்படியே படம் வரையும் கைவரப் பெற்றவர் கருப்பு சீனு.(பின்னாட்களில் வழக்கிற்கு சீனு வரைந்த திவிரவாதிகள் ஓவியம் துப்பு துலக்க மிகவும் உதவியாக இருந்தது.) அவரை சந்தித்து நம் பிரமுகர் இருக்கிறாரா என கேட்டுள்ளனர். வெளியே சென்றவர் இன்னும் வரவில்லை என்றவுடன் கையில் கொண்டு வந்த பையை “இங்கேயே இருக்கட்டும். சங்க காரியாலயம் போய் சிலரை பார்த்து விட்டு வந்து எடுத்துச் செல்கிறோம்’ என சொல்லி வைத்து விட்டு காரியாலயம் வந்தனர். அப்போது சுமார் 5.40. 6மணிக்கு காரியாலய ஷாகா தினசரி நடக்கும். அதற்குள் நாங்கள் டீ குடித்து விட்டு வருகிறோம், பெட்டி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர். அன்று காரியாலயத்தில் இருந்த நம் மூத்த தலைவர்களான சூரி ஜி, கோபால்ஜி, சண்முகநாதன் மற்றும் பலர் ஷாகாவில் பங்கேற்றனர். ஆனால் 6மணி ஷாகாவிற்கு இருவரும் வரவில்லை.

பெட்டியை வைத்துச் சென்ற இருவரும் வெளியில் சற்று தூரத்திலிருந்து Remote மூலம் இரு பெட்டியிலுருந்த குண்டை வெடிக்க முயன்றனர். ஆனால் Remote பிரச்சினையால் வெடிக்கவில்லை. ஆம் அவர்கள் இந்துமுன்னணி அலுவலகம் மற்றும் சங்க காரியாலயத்தில் டீ குடித்து விட்டு வருகிறோம் என சொல்லி வைத்து விட்டு சென்ற பையிலும் பெட்டியிலும் இருந்தது RDX பாம். அன்று குண்டு வெடிக்காததால் வீரத்துறவி கோபால்ஜி,சூரிஜி, சண்முகநாதன் ஜி ஆகியோர் உயிர் பிழைத்தனர். குண்டு வெடிக்காத்தால் மீண்டும் வந்து பையையும், பெட்டியையும் எடுத்து சென்றான். ஒரு வேளை குண்டு வெடித்திருந்தால் M V நாயடு தெருவில் உள்ள பல கட்டிடங்கள் வெடித்து சிதறி அதிக அளவில் பொது மக்களும் உயிர் இழந்திருப்பார்கள்.இந்த RdX வெடிகுண்டும் Remoteம் பின்னாட்களில் பெரம்பூரில் இமாம்அலி தங்கியிருந்த போலீஸ்காரர் வீட்டு கிணற்றிலிருந்து வழக்கு விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட்து.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

முதல் முயற்சி தோல்வியுற்றதால் அடுத்த முறை சங்க காரியாலயத்தை மட்டும் குறி வைத்து plan செய்தார்கள். அதுவும் 2வது நாளே. காரணம் அன்றுதான் சென்னை மாநகர இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் 08.081993 ஞாயிறு அன்று மதியம் 2மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே நாளில் காலை நேரத்தில் ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் குரு பூஜா நிகழ்ச்சி இருந்த காரணத்தால் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆலோசனை கூட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒத்தி வைக்கப்பட்டதை அறியவில்லை. குருபூஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும், குறிப்பாக வெளியூரில் இருந்து வந்த பலரும் காரியாலயம் சென்றுவிட்டு கிளம்பலாம் என்று சேத்துப்பட்டு காரியாலயம் சென்றனர். ஹைதர்அலியம், இமாம்அலியும் சுமார் 13.15மணியளவில் வந்தனர். அப்போது காரியாலயத்தில் பல ஸ்வயம் சேவைகர்களும், பிரச்சாரக்கும் இருந்தனர். ஏற்கனவே இந்த இருவரையும் ஓரிரு முறை பார்த்த காரணத்தால் ஜவஹர்,முனுசாமி ஜியும், பூவலிங்கம் ஜியும் பெட்டியும், நம் பிரமுகருக்குப் பழக் கூடையும் கொண்டு வந்ததை வைத்து விட்டு டீ சாப்பிட்டு வருகிறோம் என்று சொன்னவுடன் அனுமதித்தனர்.
வெளியே சென்ற இருவரும் சுமார் 13.40மணியளவில் காரியாலயத் தெருவில் அருகே இருக்கும் அரச மரத்தடியிலிருந்து Remote மூலம் RDX குண்டை வெடிக்கச் செய்தனர். மிக பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்த அடுத்த நொடி கட்டிடமும் தரை மட்டமானது. இடிபாடுகளில் சிக்கியம், குண்டு வெடித்ததால் உடல் பிய்ந்தும் 11பேர் மரணமடைந்தனர். பழக் கூடைக்குள் தான் குண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

உடலின் பாகங்கள் தனித்தனியாக பிய்ந்தும், மண்டை உடைந்தும் நம் இயக்க சகோதர்கள் மாண்டனர். மிகக் கொடுரமாக அரங்கேற்றப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு காசிநாதன், சேஷாத்ரி, ராம சுப்ரமணியன், தேசிகன், குமரி பாலன் என சங்க பிராக்கார்களும், 2மாதங்களுக்கு முன்பு சங்க பிரசாரக்கிலிருந்து வெளி வந்து திருமணமாகி 40நாட்களே ஆன புத்தாநத்தம் ராஜேந்திரன், திருவள்ளூர் நகர RSS கார்யவாஹ்(செயலாளர்) பிரேம்குமார் அவர் மனைவி மோகனா பிரேம்குமார் திருவள்ளூர் தாலுகா கார்யவாஹ் ரவீந்திரன், சேவிகா சமிதி லலிதா, ராமகிருஷ்ண ரெட்டி என 11பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாம்பலம் ஸ்வயம் சேவக் கார்த்திக் பலத்த காயம் அடைந்து மருத்துவ மனையில் சில நாட்கள் தங்கி வைத்தியம் செய்து கொண்டான். சில மாதங்களுக்குப் பின்தான் கேட்க்கும் திறனை முழுமையாகப் பெற்றான். மேலும் 4பேர் பலத்த காயத்துடன் Inpatient ஆக admitt ஆகி வைத்தியம் பார்க்க வேண்டிய அளவுக்கு பலத்த காயம். 4பேர் புற நோயாளியாக வைத்தியம் பார்த்துக் கொண்டனர்.

அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் நடந்த முதல் RDX பாம் வைத்து கொலை செய்த நிகழ்வு இது.

வீர மரணம் அடைந்த 11பேருக்கும் என் 27ம் ஆண்டு அஞ்சலியை செலுத்துகிறேன்.

குண்டு வைத்து கொல்லப்பட்ட 11தியாகிகளுக்கும் ஆகஸ்ட்8, 27ம் ஆண்டு நினைவு நாள். அவர்கள் எந்த கொள்கைக்காக வாழ்ந்தார்களோ அந்த கொள்கைக்கு வலுவூட்டும் விதமாக நாமும் களப்பணி செய்வோம்.

ஓமாம்புலியூர் ஜெயராமன்

(பாஜக பிரமுகர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories