சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

crow - 2026

இது ஒரு #காக்காவின்கதை

காக்கையை ‘ஆகாய தோட்டி’ – அதாவது பறக்கும் ‘துப்புரவாளன்’ என்பர். ஆனால் ஸ்ராத்தம் முதலியன செய்யும் சமயம் #’வாயசபிண்டம்’ அதாவது காக்காவிற்கு உருண்டை வைக்கிறோம். அது தவிர சிலருடைய வீடுகளில் சாப்பிடுவதற்கு முன்னம் காக்கைக்கு சாதம் வைப்பதுண்டு. இது எதனால் தெரியுமா?

ராமாயணம் உத்தரகாண்டத்தில் இதற்குரிய விடையுள்ளது. ஒரு சமயம் ராவணன் திக்விஜயம் செய்தான். அப்போது மருத்தன் எனும் சிறந்த அரசன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவனது யாகத்தில் இந்த்ரன், வருணன், யமன் முதலிய தேவர்கள் நேரிடையாகக் கலந்து கொண்டனர். திக்விஜயம் செய்த ராவணன் மருத்தனுடன் சண்டைக்கு வந்தான். யாக தீக்ஷிதனாக அதாவது வ்ரதமுடையவனான காரணத்தால் மருத்தன் சண்டைக்கு வரவில்லை.

அப்போது அவன் கண்களில் படாமல் தேவர்கள் பறவையுருக்கொண்டு மறைந்திருந்தனர். இந்த்ரன் மயிலாகவும், வருணன் ஹம்ஸமாகவும், யமன் காகமாகவும் மாறியிருந்தனர். ராவணன் சென்றதும் அவர்கள் தங்கள் சுயரூபம் கொண்டனர். பின்னர் அந்த பறவைகளுக்கும் வரமளித்தனர்.

அதில் காக்கையுருக் கொண்ட யமன் காகங்களுக்கு வரமளித்தான். அதாவது காகங்களுக்கு நோயே வராது. பறவைக் காய்ச்சல் முதலிய நோய்கள் காகங்களை அணுகாமையைக் காண்க.

மேலும் மனிதர் பிடித்தாலல்லது அவைகளுக்கு மரணமில்லை. ஒரு சில இனத்தவரால் ஆகாரத்திற்காக அவை கொல்லப்படுவதைக் காணலாம்.

இவையனைத்தையும் விட மிக முக்கியமாக யமலோகம் முதலிய லோகத்திலுள்ள முன்னோர்களுக்கு பசி தீர காகங்களான உங்களுக்கு அன்னமிடுதல் அவசியமானது என்றான்.

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

#குறிப்பு: எதுவாகவிருந்தாலும் முதலில் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்வது மிக முக்கியம். அதை மறக்கலாகாது.

கட்டுரை: ஸ்ரீ உ.வே. ஏபிஎன் ஸ்வாமி (ந்ருஸிம்ஹ ப்ரியா இதழில்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories