February 21, 2026, 1:06 PM
29.5 C
Chennai

சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

crow - 2026

இது ஒரு #காக்காவின்கதை

காக்கையை ‘ஆகாய தோட்டி’ – அதாவது பறக்கும் ‘துப்புரவாளன்’ என்பர். ஆனால் ஸ்ராத்தம் முதலியன செய்யும் சமயம் #’வாயசபிண்டம்’ அதாவது காக்காவிற்கு உருண்டை வைக்கிறோம். அது தவிர சிலருடைய வீடுகளில் சாப்பிடுவதற்கு முன்னம் காக்கைக்கு சாதம் வைப்பதுண்டு. இது எதனால் தெரியுமா?

ராமாயணம் உத்தரகாண்டத்தில் இதற்குரிய விடையுள்ளது. ஒரு சமயம் ராவணன் திக்விஜயம் செய்தான். அப்போது மருத்தன் எனும் சிறந்த அரசன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவனது யாகத்தில் இந்த்ரன், வருணன், யமன் முதலிய தேவர்கள் நேரிடையாகக் கலந்து கொண்டனர். திக்விஜயம் செய்த ராவணன் மருத்தனுடன் சண்டைக்கு வந்தான். யாக தீக்ஷிதனாக அதாவது வ்ரதமுடையவனான காரணத்தால் மருத்தன் சண்டைக்கு வரவில்லை.

அப்போது அவன் கண்களில் படாமல் தேவர்கள் பறவையுருக்கொண்டு மறைந்திருந்தனர். இந்த்ரன் மயிலாகவும், வருணன் ஹம்ஸமாகவும், யமன் காகமாகவும் மாறியிருந்தனர். ராவணன் சென்றதும் அவர்கள் தங்கள் சுயரூபம் கொண்டனர். பின்னர் அந்த பறவைகளுக்கும் வரமளித்தனர்.

அதில் காக்கையுருக் கொண்ட யமன் காகங்களுக்கு வரமளித்தான். அதாவது காகங்களுக்கு நோயே வராது. பறவைக் காய்ச்சல் முதலிய நோய்கள் காகங்களை அணுகாமையைக் காண்க.

மேலும் மனிதர் பிடித்தாலல்லது அவைகளுக்கு மரணமில்லை. ஒரு சில இனத்தவரால் ஆகாரத்திற்காக அவை கொல்லப்படுவதைக் காணலாம்.

இவையனைத்தையும் விட மிக முக்கியமாக யமலோகம் முதலிய லோகத்திலுள்ள முன்னோர்களுக்கு பசி தீர காகங்களான உங்களுக்கு அன்னமிடுதல் அவசியமானது என்றான்.

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

#குறிப்பு: எதுவாகவிருந்தாலும் முதலில் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்வது மிக முக்கியம். அதை மறக்கலாகாது.

கட்டுரை: ஸ்ரீ உ.வே. ஏபிஎன் ஸ்வாமி (ந்ருஸிம்ஹ ப்ரியா இதழில்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories