சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

crow - 2026

இது ஒரு #காக்காவின்கதை

காக்கையை ‘ஆகாய தோட்டி’ – அதாவது பறக்கும் ‘துப்புரவாளன்’ என்பர். ஆனால் ஸ்ராத்தம் முதலியன செய்யும் சமயம் #’வாயசபிண்டம்’ அதாவது காக்காவிற்கு உருண்டை வைக்கிறோம். அது தவிர சிலருடைய வீடுகளில் சாப்பிடுவதற்கு முன்னம் காக்கைக்கு சாதம் வைப்பதுண்டு. இது எதனால் தெரியுமா?

ராமாயணம் உத்தரகாண்டத்தில் இதற்குரிய விடையுள்ளது. ஒரு சமயம் ராவணன் திக்விஜயம் செய்தான். அப்போது மருத்தன் எனும் சிறந்த அரசன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவனது யாகத்தில் இந்த்ரன், வருணன், யமன் முதலிய தேவர்கள் நேரிடையாகக் கலந்து கொண்டனர். திக்விஜயம் செய்த ராவணன் மருத்தனுடன் சண்டைக்கு வந்தான். யாக தீக்ஷிதனாக அதாவது வ்ரதமுடையவனான காரணத்தால் மருத்தன் சண்டைக்கு வரவில்லை.

அப்போது அவன் கண்களில் படாமல் தேவர்கள் பறவையுருக்கொண்டு மறைந்திருந்தனர். இந்த்ரன் மயிலாகவும், வருணன் ஹம்ஸமாகவும், யமன் காகமாகவும் மாறியிருந்தனர். ராவணன் சென்றதும் அவர்கள் தங்கள் சுயரூபம் கொண்டனர். பின்னர் அந்த பறவைகளுக்கும் வரமளித்தனர்.

அதில் காக்கையுருக் கொண்ட யமன் காகங்களுக்கு வரமளித்தான். அதாவது காகங்களுக்கு நோயே வராது. பறவைக் காய்ச்சல் முதலிய நோய்கள் காகங்களை அணுகாமையைக் காண்க.

மேலும் மனிதர் பிடித்தாலல்லது அவைகளுக்கு மரணமில்லை. ஒரு சில இனத்தவரால் ஆகாரத்திற்காக அவை கொல்லப்படுவதைக் காணலாம்.

இவையனைத்தையும் விட மிக முக்கியமாக யமலோகம் முதலிய லோகத்திலுள்ள முன்னோர்களுக்கு பசி தீர காகங்களான உங்களுக்கு அன்னமிடுதல் அவசியமானது என்றான்.

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

#குறிப்பு: எதுவாகவிருந்தாலும் முதலில் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்வது மிக முக்கியம். அதை மறக்கலாகாது.

கட்டுரை: ஸ்ரீ உ.வே. ஏபிஎன் ஸ்வாமி (ந்ருஸிம்ஹ ப்ரியா இதழில்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories