சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

crow - 2026

இது ஒரு #காக்காவின்கதை

காக்கையை ‘ஆகாய தோட்டி’ – அதாவது பறக்கும் ‘துப்புரவாளன்’ என்பர். ஆனால் ஸ்ராத்தம் முதலியன செய்யும் சமயம் #’வாயசபிண்டம்’ அதாவது காக்காவிற்கு உருண்டை வைக்கிறோம். அது தவிர சிலருடைய வீடுகளில் சாப்பிடுவதற்கு முன்னம் காக்கைக்கு சாதம் வைப்பதுண்டு. இது எதனால் தெரியுமா?

ராமாயணம் உத்தரகாண்டத்தில் இதற்குரிய விடையுள்ளது. ஒரு சமயம் ராவணன் திக்விஜயம் செய்தான். அப்போது மருத்தன் எனும் சிறந்த அரசன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவனது யாகத்தில் இந்த்ரன், வருணன், யமன் முதலிய தேவர்கள் நேரிடையாகக் கலந்து கொண்டனர். திக்விஜயம் செய்த ராவணன் மருத்தனுடன் சண்டைக்கு வந்தான். யாக தீக்ஷிதனாக அதாவது வ்ரதமுடையவனான காரணத்தால் மருத்தன் சண்டைக்கு வரவில்லை.

அப்போது அவன் கண்களில் படாமல் தேவர்கள் பறவையுருக்கொண்டு மறைந்திருந்தனர். இந்த்ரன் மயிலாகவும், வருணன் ஹம்ஸமாகவும், யமன் காகமாகவும் மாறியிருந்தனர். ராவணன் சென்றதும் அவர்கள் தங்கள் சுயரூபம் கொண்டனர். பின்னர் அந்த பறவைகளுக்கும் வரமளித்தனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதில் காக்கையுருக் கொண்ட யமன் காகங்களுக்கு வரமளித்தான். அதாவது காகங்களுக்கு நோயே வராது. பறவைக் காய்ச்சல் முதலிய நோய்கள் காகங்களை அணுகாமையைக் காண்க.

மேலும் மனிதர் பிடித்தாலல்லது அவைகளுக்கு மரணமில்லை. ஒரு சில இனத்தவரால் ஆகாரத்திற்காக அவை கொல்லப்படுவதைக் காணலாம்.

இவையனைத்தையும் விட மிக முக்கியமாக யமலோகம் முதலிய லோகத்திலுள்ள முன்னோர்களுக்கு பசி தீர காகங்களான உங்களுக்கு அன்னமிடுதல் அவசியமானது என்றான்.

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

#குறிப்பு: எதுவாகவிருந்தாலும் முதலில் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்வது மிக முக்கியம். அதை மறக்கலாகாது.

கட்டுரை: ஸ்ரீ உ.வே. ஏபிஎன் ஸ்வாமி (ந்ருஸிம்ஹ ப்ரியா இதழில்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories