திருமலை ஆலயத்தில் இருப்பது யார்?

tirupati ramana deekshitalu - 2026

திருமலை ஆலயத்தில் இருப்பது யார் ? திருமலை ஆலயத்தில் இருப்பது மாலவனா ? அம்பிகையா ? சர்ச்சை இருந்து வருகிறது. தொல் தமிழிலக்கியமும், ஆழ்வார்களும் பாடிய வண்ணம் திருமலையில் உறைவது மாலவனே என்பது தெளிவு.

திருமலை ஆனந்த நிலைய விமானத்தில் இருப்பது அம்பிகையின் வாஹனமான சிம்மம், ஆகவே ஆலயம் அம்பிகையினுடையது என்பது ஒரு வாதம். வைணவ வைகாநஸ ஆகம மரபை ஒட்டி சிம்மம் அமைகிறது.

பாலாஜி – ‘பாலா’ அம்பிகையின் பெயர், ஆகவே மூலஸ்தானத்தில் இருப்பது அம்பிகை எனும் வாதமும் ஆதாரமற்றது.

திருமகள் மார்பில் உறைவதால் வெள்ளிக்கிழமை அபிஷேகம்; மஹா லக்ஷ்மிக்கு ‘பில்வ நிலயா’ என்று திருநாமம் , ஆகவே பில்வார்ச்சனை. தனிக்கோயில் நாச்சியார் திருமலையில் இல்லாத காரணத்தால் பெருமாள் கருவறையிலேயே பிராட்டிக்கான ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

திருவரங்கத்தில் பெரிய பிராட்டியார் ஸந்நிதி அருகில் வில்வ மரம் இருப்பதைக் காணலாம். நவராத்ரி உத்ஸவம் விண்ணகரங்களில் மஹாலக்ஷ்மிக்கும் நடைபெறு கின்றன. புரட்டாசியின் ச்ரவணம் திருமலையப்பனுக்குரியது, அதை ஒட்டி ‘ப்ரஹ்மோத்ஸவம்’ அமைகிறது.

‘அகலகில்லேன் இறையும்’ என மாலவனின் திருமார்வில் உறையும் திருமகளின் நாமத்தை ஒட்டியதான ‘ஸ்ரீநிவாஸன்’ வாஸம் செய்வது இத்தலச் சிறப்பு. வல்லப மரபின் வைணவர் சூட்டிய பெயர் ‘பாலாஜி’

மஹாப்ரபு வல்லபாசார்யர் [15 – 16 நூற்] பாரதம் நெடுகிலும் தல யாத்திரை செய்து பாகவத உபந்யாஸங்களை நிகழ்த்தியவர். அந்தப் புனிதமான இடங்களை ஸ்ரீவல்லப மரபின் வைணவர் ’பைடக்’ என அழைப்பர். தமிழில் ‘அமர்வு’ என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு 84 அமர்வுகளை மிக முக்கியமாகக் கொள்வர் புஷ்டி மார்கீய வைணவர்கள். திருவேங்கடம், திருவரங்கம்,ராமேசுவரம், நெல்லை [பொருனை ஆற்றின்கரை], திருவநந்தபுரம், வற்கலை, நாங்குநேரி போன்ற தென்னகத் தலங்களும் இவற்றுள் அடக்கம்.

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

மொத்தம் 84 பைடக்குகளில் திருமலை 38ம் அமர்வாகக் கணக்கிடப்படுகிறது.

३८.तिरूपति श्री महाप्रभुजी बैठक
कर्नाटक धर्मशला छत्रम् के पास, गांवतिरूमाला, पो. तिरूपति (आन्ध्रप्रदेश)

https://www.nathdwaratemple.org/content/mahaprabhuji/baithaks

வல்லபாசார்ய மரபினர் பால கிருஷ்ணனை வழிபடுவர். ஆகவே வடபுலத்தவர் வேங்கடவனை ’பாலாஜி’ என அழைக்கத் தொடங்கினர். மிகவும் பிற்காலப் பெயர்.

வல்லபரின் இந்த பைடக் தற்போது வசதியான அறைகளுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தர்மசாலைக்கருகில் அருங்காட்சியகம் செல்லும் வழியில் இது அமைந்துள்ளது.

‘பாலாஜி’ என்னும் மராட்டியப் பெயரின் அடிப்படையில் , திருமலையப்பன் சொல்லப்படுகிறான் எனும் வாதமும் செல்லுபடியாகாது; பல்லாள் என்பதன் சுருக்கமே ‘பாளா’ ‘பாளா ஜீ’ ‘பாளா சாஹேப்’ எனும் மராட்டியப் பெயர்கள். ‘பல்லாள்’ கன்னட, மராட்டியப் பிராந்தியங்களின் குடிப்பெயர்; தமிழ் வல்லாள் என்பதன் திரிபு.

மதுரை கூடலழகர் விமானத்திலும் சிம்மம் உள்ளது என்பது பலரின் கவனத்துக்கு வருவதில்லை. இணைப்பாக விமானப் படங்கள்.இரு படங்களிலும்  மேற்கலசத்திலிருந்து அடுத்த நிலையைக் கூர்ந்து கவனிக்கவும். விமானம், மதில்களில் சிம்மம் நிறுவுதல் வைகாநஸ மரபு.

’மூவராகிய மூர்த்தி’ என வைணவர் வெளிப்படையாகப் பெயர் சூட்டியுள்ள திருமேனி திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.சிரஸில் ஜடாபாரமே தேவநாதனுக்கு உள்ளது.

‘தாழ்சடையும், நீண்முடியும், ஒண்மழுவும், சக்கரமும்….’ பாடலை ஒரு சான்றாகக் காட்டுவர். ஆனால் இதுபோல் நம்மாழ்வார் பாடல் ஒன்றும் உண்டு; –
”தடம்புனல சடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும் உடம்புடையான்..”

”ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளும் தனியுடம்பன்……” மற்றுமொரு பாசுரம். ஆனால் இதுபோன்ற பாடல்கள் திருமலை மூல மூர்த்தியை நிர்ணயிப்பதில் சான்றாகா. மாலவனின் தன்மையைப் பொதுவில் புகழும் பாடல்கள் இவை.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

சிலம்பின் விவரிப்பில் வேங்கடவன் –

வீங்கு நீரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இரு மருங்கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்கு விற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்விற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் ….

மராட்டிய மாநிலத்தின் பாலாஜி மந்திர் [மெஹகர்] -https://www.youtube.com/watch?v=0-r5ulSUy2U

இந்த ஆலயம் புதியதானாலும், மூர்த்தி பழமையானது. 11 அடி உயரம் இதில் காணப்படுவது மாலவனே !

திருமலையப்பனுக்கு புஜங்களில் நாகாபரணம் உள்ளது; ஆகவே அது சிவ மூர்த்தம் என்பர். அதுவும் தவறு; காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கும் நாகாபரணம் உண்டு. திரு அயிந்தை தேவநாதர் முக்கண்களும், சடாபாரமும் கொண்டு விளங்குகிறார். ஏனோ திருமலையப்பன் மட்டும் சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டு விட்டார் !

ஒப்பிலியப்பன் 22 முழப் பட்டாடை அணிகிறார்; ஸ்ரீ ரங்கபட்டணம் பெருமாளும் அவ்வாறே. ஆக்ருதிக்குத் தகுந்த ஆடை.

திருமலை விமானத்தில் இருப்பது பல்லவர் சின்னம் சிம்மம் , என்னும் வாதமும் உள்ளீடற்றது. டாக்டர்@Sankara Narayanan G அவர்கள் தரும் தகவல்கள் சில :

வைகாநஸ ஆகமப்படி விண்ணகர விமாந சிகரங்களில் சிம்மம் அமைந்திருப்பது மரபுதான்.

இன்று நாம் காணும் திருமலை ஆலயத்துக்கும் பல்லவர்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. பல்லவர் அமைத்த எந்த ஒரு ஆலய விமான சிகரத்திலும் சிம்மம் கிடையாது.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

தந்திவர்ம பல்லவன் காலத்திய விமாந சிகரங்களில் பூதங்கள் மட்டும் இடம்பெறும்; அவற்றுக்குப் பெயர்களும் இருந்தன. திருமலை ஆலயத்தில் பல்லவர் கல்வெட்டு ஒன்றுகூடக் கிடையாது. தற்போது நாம் காணும் திருமலை ஆலயம் பிற்காலச் சோழர் பாணி; அது 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது.

விமானத்தின் க்ரீவத்தின் கோணங்களில் பூதங்களையாவது அந்தந்த தேவதைகளின் வாஹனங்களையாவது அமைக்கலாம். நான்கு கோணங்களில் – விதிக்குகளில் அமைய வேண்டிய பூதங்களின் பெயர்கள் ஆமோதன், ப்ரமோதன், ப்ரமுகன் மற்றும் துர்முகன். இந்த பூதங்களை இரு அமர்ந்த ரிஷபங்களின் நடுவிலும் அமைக்கலாம். க்ரீவாவில் அமைந்த பழமையான பூதங்களை மல்லைக் கடற்கரைகோயிலில் காணலாம். க்ரீவா கோணத்தில் மட்டுமின்றி கூட மண்டபத்தின் திருப்பங்களிலும் அமைக்கலாம். திருமாலின் கோயிலானால் கருடனை அமைக்கலாம். வைகானஸ ஆகமம் ககேந்த்ரம் வா ம்ருகேந்த்ரம் வா என்று பறவையரசனான கருடனையோ அல்லது விலங்குகளின் அரசனான சிங்கத்தையோ அமைக்கச் சொல்லியிருக்கிறது. திருப்பதியிலும், காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலிலும் இவ்வகைச் சிங்கங்கள் இருப்பதைக் காணலாம். இந்தச் சிங்கங்களை வைத்து எழும் சர்ச்சை தேவையற்றது. (Sankara Narayanan G)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories