பருப்பு உருண்டை மோர் குழம்பு!

Published:

thuvaram dhal 1 - 2026

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை –

உருண்டைக்கு:

துவரம்பருப்பு – அரை கப்,

தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 3,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,

கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 3,

இஞ்சி – ஒரு துண்டு,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

கடைந்த மோர் – ஒரு கப்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

கடுகு – கால் டீஸ்பூன்,

உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

உருண்டை:

parupu urundai mor kuzhambu - 2026

துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

குழம்பு:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும், தயாராக இருக்கும் உருண்டைகளை அதில் போடவும்.

அவை வெந்ததும் மேலே வரும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் துவரம்பருப்புக் கலவையை சேர்த்து… அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மோரில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, உருண்டைகள் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்டி கலந்து பரிமாறவும்

Related articles

Recent articles

spot_img