December 6, 2025, 7:14 AM
23.8 C
Chennai

தீபாவளி ஸ்பெஷல்: மிக்சர்!

mixer - 2025

தேவையான பொருட்கள்

கடலை மாவு – ½ கிலோ கிராம்

மிளகாய்த் தூள் – 15 கிராம்

உப்பு – தேவையான அளவு

நிலக்கடலைப் பருப்பு – 100 கிராம்

பொரிகடலை – 100 கிராம்

அவல் – 100 கிராம்

கறிவேப்பிலை – 3 கொத்து

வெள்ளைப் பூண்டு – 15 முதல் 20 இதழ்கள் (மீடியம் சைஸ்)

பெருங்காயப் பொடி – தேவையான அளவு

சமையல் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

மிக்ச‌ர் செய்முறை
வெள்ளைப் பூண்டினை நசுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். கடலை மாவினை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.பின் அதனை இரு சமபாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும்.

முதல் பாதியில் தேவையான உப்பு மற்றும் தேவையான மிளகாய்த் தூள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

திரட்டிய மாவினை ஓமப்பொடி அச்சு உள்ள முறுக்கு குழலில் அடைத்துக் கொள்ளவும்.பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பெரிய முறுக்காக பிழிந்து விடவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வேக விடவும். ஓமப்பொடி இரண்டு புறங்கள் வெந்ததும் வெளியில் எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.

இவ்வாறாக பிசைந்த மாவினை ஓமபொடியாகச் சுட்டு எடுக்கவும். ஓமப்பொடி வேகமாக வெந்து விடுவதால் சரியான பதத்தில் எடுக்கவும். கடலை மாவின் மற்றொரு பாதியுடன் வையான உப்பு மற்றும் மிளகாய்ப் பொடி, தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கரைத்த மாவினை பூந்திக் கரண்டியில் ஊற்றி விடவும். பூந்திகள் ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுக்கவும்.

எண்ணெயை வடித்து ஏற்கனவே சுட்டு வைத்துள்ள ஓமப்பொடியுடன் சேர்க்கவும்.இவ்வாறாக கரைத்த எல்லா மாவினையும் பூந்திகளாகச் சுட்டு ஓமப்பொடியுடன் சேர்க்கவும்.

பின்னர் நிலக்கடலைப் பருப்பு, பொரிகடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியே எண்ணெயில் பொரித்து ஏற்கனவே உள்ள பொரித்த கலவையில் சேர்க்கவும்.

வாணலியில் குறைந்தளவு எண்ணெயில் அவல் மற்றும் நசுக்கிய பூண்டினை தனித்தனியே பொரித்து பொரித்து ஏற்கனவே உள்ள பொரித்த கலவையில் சேர்க்கவும்.

அவல் மற்றும் பூண்டு பொரித்த எண்ணெய் கருப்பாகவும், நெடியுடனும் இருப்பதால் குறைந்தளவு எண்ணெயில் அவல் மற்றும் பூண்டினைப் பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது கலவையில் தேவையான உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலவையை நன்கு கலக்கவும்.

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பட்டாணி, முந்திரிப்பருப்பு, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றை எண்ணெயில் பொரித்து எடுத்து மிக்சரில் சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் ஓமத்தை அரைத்து மாவில் சேர்த்து ஓமப்பொடி தயார் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories