பருத்திப்பால்
பருத்தி விதை – 50 கிராம்
பசும்பால் – அரை லிட்டர்
பருத்தி விதையை மைய அரைத்து சாறு எடுத்து அத்துடன் பசும்பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட உடம்பில் ரத்தம் ஊறி, ஆண்மை பெருகும். வெட்டைச் சூடு, மேகச்சூடு தணியும்.
அதேப்போல், பசும்பாலில் தண்ணீர் சேர்க்காமல் சுண்டக் காய்ச்சி அதை சுடுசாதத்தில் கலந்து சாப்பிட தாது பெருகும்.
அக்ரகாரம், கிராம்பு, லவங்கப்பட்டை வகைக்கு 10 கிராம் எடுத்து தூள் செய்து எருமைப் பால் 100 மி.லி., ஆமணக்கு எண்ணெய் 100 மி.லி. இரண்டையும் கலந்து மேற்படி தூளினையும் கலந்து அடுப்பேற்றி பதத்தில் தைலமாக இறக்கவும். தேவையான அளவு தைலத்தை குறியில் தேய்க்க, குறி விரைப்பு நிலையை அடையும். குறி தளர்வு நீங்கும்.