
குங்குமப்பூ ‘க்ரோகஸ் சட்டிவஸ்’ என்று அழைக்கப்படும் மலரிலிருந்து கிடைக்கிறது. குங்குமப்பூ க்ரோகிஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு மற்றும் சிவப்பு சூலகமுடி ஆகும்.
குங்குமப்பூ செடியானது மத்தியதரைக் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. உலகின் 94 சதவீத குங்குமப்பூ உற்பத்தி இரான் வசம் உள்ளது. இந்தியாவில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.
அதைத்தவிர ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிளும் அதிகம் விளைகிறது. உலகளவில் ஸ்பெயின் நாட்டு குங்குமப்பூவிற்கு அதிக வரவேற்பு உள்ளது.
குங்குமப்பூவின் மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். குங்குமப்பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் அதிகமாகப் பூக்கிறது. இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும்.
தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக நேரம் மற்றும் காலம் தேவைப்படும், அதனால் தான் இதன் விலையும் மிகவும் அதிகம். இதனால்தான் உலகத்தில் விலையுயர்ந்த மசாலா பொருளாக குங்குமப்பூ இருக்கிறது.
குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் தான் அதிகம் விளைகிறது. பண்டைய காலம் முதலே குங்குமப்பூவிற்கு அதிகமான தேவை இருந்து வருகிறது. குங்குமப்பூவில் பல வகைகள் உள்ளது, அவற்றில் முக்கியமான வகைகள் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல்.
குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மங்கனீசு சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.
பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும். முகம் பிரகாசமடையும்.
குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள் உள்ளது. இது ஒரு மயக்க மருந்து போல் செயல்படுகிறது. மேலும் குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி எவ்வித குறையும் இல்லாமல் முழுமையடையும். கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலுருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
கர்ப்பமாயுள்ள பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை கொடுக்கலாம். இது அவர்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும், பசியை நன்கு தூண்டும். மேலும் தொடர்ந்து குங்குமப்பூவை சேர்த்துக்கொண்டால் சளி, இருமல் தாக்கக்கூடிய வாய்ப்புகளும் குறையும்.

குங்குமப்பூ உங்கள் சருமத்தை பொலிவடைய செய்யக்கூடும். சிறிது சந்தனம், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக முகத்தை கழுவிய பின் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் நன்கு பூசுங்கள். நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் வரை காய விடுங்கள். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
உணவு அடிப்படையிலேயே குங்குமப்பூவானது ஒரு மசாலா பொருளாகும். எனவே இது உணவில் சேர்க்கப்படும்போது அதன் சுவையும், மணமும் வித்தியாசமாய் இருக்கும். சமைத்து முடித்தபின் அதன்மீது சிறிதளவு குங்குமப்பூ தூவினால் உணவின் சுவை அதிகரிக்கும். .
குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.
மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தையின் நிறம் கூடும் என்பதெல்லாம் கட்டுக்கதை. மசக்கையாக இருக்கும்போது பெண்களுக்கு எதை சாப்பிடாலும் வாந்தி உணர்வு தோன்றும். குங்குமபூவில் உள்ள வேதிப்பொருள் அந்த வாந்தி உணர்வை கட்டுப்படுத்தும். அதற்க்கு தான் குங்குமபூ கலந்த பாலை கொடுக்கிறார்கள். கர்ப்பிணி மட்டுமல்லாமல் மற்றவர்களும் இதனை தாராளமாக குடிக்கலாம்.
குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் போல செய்து அரை மணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெறும்.
குங்குமப்பூவுடன் சந்தனத்தை அரைத்து நெற்றியில் தடவினால் கண்பார்வை அதிகரிக்கும் மற்றும் தலைவலி போக்கும். செலரி கலந்த குங்குமப்பூவை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்கள் குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரக்கிறது. வயது முதிர்வினால் வரும் கண் பார்வை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதான் மூலம் பாதிப்பின் தீவிரம் குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.
பாலுணர்வு குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை பிரச்சினை உள்ளவர்கள் குங்குமப்பூ எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி அதிக பலன் தரும். மேலும் ஆணின் இனப்பெருக்க மண்டலத்திற்கும் உதவுகிறது. இதிலுள்ள க்ரோசின் என்னும் பொருள் வழக்கமான செயல்முறையை விட அதிகளவு சக்தியுடன் படுக்கையில் செயல்பட வைக்கக்கூடியது என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்மைக்குறைபாட்டை சரிசெய்யும்.
குங்குமப்பூவில் உள்ள கேமம்ஃபிரோல் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மூலக்கூறு, இதயத்தின் உந்து சக்தியை அதிகரிக்கிறது. இது இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்ஸ்களை சமநிலை செய்ய உதவுகிறது. இந்த புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
குங்குமப்பூ ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக செயல்பட வைக்கிறது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்தது
குங்கும்ப்பூவில் ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்து காணப்படுகிறது. க்ரோசின், க்ரோசிட்டின், சபிரனால் , கேம்ஃபிரோல் போன்ற வேதி பொருள்கள் குங்குமப்பூவில் உள்ளன. இவை மனநலம், உணவு, உடல் ஆரோக்கியம் போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன
மூட்டு வலி உடையோர் குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்கி, மூட்டுகள் பலமாகிறது.
இதிலுள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கு முக்கியமான தேவையாகும். பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமா மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.
குங்குமப்பூவானது அதிலுள்ள அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட்களாலும், அழற்சி பண்புகளாலும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி நுரையீரல் சிகிச்சைகளிலும், வயிற்று புண் சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.
குங்குமப்பூ காயங்களை குணப்படுத்த உதவுகிறது, குறிப்பாக தீக்காயங்களுக்கு இது சிறந்த மருந்தாகும். அதுமட்டுமின்றி காயம்பட்ட இடம் பழைய நிலைக்கு திரும்பவும் உதவுகிறது.
நீங்கள் வாங்கிய குங்குமப் பூ சுத்தமானது என்பதை கண்டறிய குங்கமப்பூவின் ஓரிரு இதழ்களை தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலியானது. 10 அல்லது 15 நிமிடங்களில் கழித்து நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ என்பதை கண்டறியலாம்.
குங்குமப்பூ 80 சதவீதம் சிவப்பாகவும் 20 சதவீதம் மஞ்சளாகவும் இருக்கும். தரமற்றது எனில் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும்.
விலைக்குறைவாக குங்குமப்பூ விற்கும் வியாபாரிகள் குங்குமப்பூவுடன் தேங்காய் துருவல் மற்றும் மெல்லிய நூலிற்கு சாயம் பூசி கலந்துவிடுவார்கள். இது பார்க்கும் போது வித்தியாசம் தெரியாது. ஆனால் உண்ணும்போது வலிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
எனவே விலை குறைவாக கிடைக்கிறதே என்று தரமற்ற குங்குமப்பூவை வாங்கி பயன்படுத்தாதீர்கள்.
குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும். மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
பயனுள்ள பண்புகள்
குங்குமப்பூ எண்ணெயில் ஒத்த எண்ணெய்களில் லினோலிக் அமிலத்தின் அதிக செறிவு உள்ளது.
அமினோ அமிலங்களுடன் இணைந்து, இது இரத்தத்தில் உள்ள நோய்க்கிருமி கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது, அதாவது, இது உண்மையில் ஒரு கார்டியோ மற்றும் ஆஞ்சியோபுரோடெக்டிவ் செயல்பாட்டை செய்கிறது.
இந்த செயல்பாடுகள் இருதய நோய்க்குறியியல் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் முற்காப்பு நோக்கங்களுக்காக சஃப்ரோல் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தீர்மானிக்கின்றன. மயோர்கார்டியம்.
இந்த எண்ணெயில் நிறைய ஒமேகா 6 அமிலங்கள் உள்ளன, ஆனால் நடைமுறையில் ஒமேகா 3 இல்லை என்பதால், சஃப்ரோல் எண்ணெய் வெற்றிகரமாக நோய்க்கிருமி கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ஆனால் அதே நேரத்தில் ஆபத்தை அதிகரிக்கிறது இஸ்கிமிக் இதய நோய்.
கூடுதலாக, சஃப்ரோல் எண்ணெயின் ஒரு பகுதியாக இருக்கும் பாலிஅன்சாச்சுரேட்டட் அமினோ அமிலங்கள் கல்லீரல் புரதத் தொகுப்பில் ஈடுபட்டுள்ளன. எனவே, கல்லீரல் நோய்க்குறியுடன் தொடர்புடைய அல்லது அவற்றால் தூண்டப்பட்ட நோய்களில் (சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், கல்லீரலின் சிரோசிஸ் போன்றவை), சஃப்ரோல் எண்ணெயை எடுத்துக்கொள்வதன் நன்மைகள் இரத்த நாளங்களுக்கு மட்டுமல்ல, கல்லீரலுக்கும் பெறப்படுகின்றன, அத்துடன் முழு உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களின் மீளுருவாக்கம்.
கூடுதலாக, சஃப்ரோல் எண்ணெயின் நன்மை பயக்கும் பண்புகள் உடல் பருமனுக்கும் பயன்படுத்தப்படுகின்றன – இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது: இது வயிற்று கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, அதை தசை திசுக்களால் மாற்றுகிறது.
கூடுதலாக, இது மூளை திசு மற்றும் புற நரம்பு மண்டல நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது .
எண்ணெயில் உள்ள வைட்டமின் கே ரத்தக்கசிவு மற்றும் தந்துகி-பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது, இரத்த உறைதலை ஊக்குவிக்கிறது மற்றும் தந்துகி சிராய்ப்பதைத் தடுக்கிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட வைட்டமின் ஈ, நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு நன்மை பயக்கும், ஃப்ரீ ரேடிக்கல்களைப் பொறிக்கிறது, இது புற்றுநோயியல் நியோபிளாம்களின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது, மேலும் பசை வயதான செயல்முறையை குறைக்கிறது தற்போதைய, திசுக்கள் மற்றும் உறுப்புகள். மேலே உள்ள அனைத்தும் குங்குமப்பூ எண்ணெயை எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் தீர்மானிக்கிறது,
வீடு மற்றும் தொழில்துறை ஆகிய இரண்டையும் அழகுசாதனத்தில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதும் பிரபலமானது. அதன் தூய்மையான வடிவத்தில், குங்குமப்பூ எண்ணெய் விரைவாக உறிஞ்சப்பட்டு, ஆழமான தோல் திசுக்களில் ஊடுருவி, அவற்றில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, ஊட்டமளிக்கிறது, மென்மையாக்குகிறது மற்றும் மேல்தோல் செல்களை மீண்டும் உருவாக்குகிறது. அதே பண்புகள் தொழில்துறை தோல் தயாரிப்புகள், ஷாம்புகள், வயதான எதிர்ப்பு கிரீம்கள் மற்றும் ஜெல், சன்ஸ்கிரீன் லோஷன்களில் அதன் பயன்பாட்டை தீர்மானிக்கின்றன.
இந்த பொருளுக்கு நடைமுறையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை, அரிதான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட சகிப்பின்மை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக, நீங்கள் சஃப்ரோல் எண்ணெயைப் பயன்படுத்தப் போகிறீர்களா என்பது முக்கியமல்ல என்று கூறலாம். எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் அல்லது சிகிச்சை மற்றும் முற்காப்பு நோக்கங்களுக்காக உணவுகள். எப்படியிருந்தாலும், நன்மை முழுவதுமாக இருக்கும்.
பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்தஇடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
குங்குமப்பூ நுகர்வு தமனிகளில் அடைப்பை சரிசெய்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும். குங்குமப்பூ நுகர்வு நினைவகத்தை மேம்படுத்துகிறது. மற்றும் சளி மற்றும் காய்ச்சலின் போது உட்கொள்வது இரண்டில் இருந்தும் விடுபட உதவும்.
குழந்தைக்கு சளி இருக்கும் போது சிறிது குங்கும்பூ பாலில் கலந்து கொடுப்பது நன்மை பயக்கும். மேலும் குங்குமப்பூ மற்றும் அஸ்ஃபெடிடாவை இஞ்சி சாற்றில் கலந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மார்பில் தடவுவது சளியின் போது நன்மை பயக்கும்.
நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.



