அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! கண் எரிச்சல், சூலை நோய், மூலம், மார்புவலி..!

health tips 1
health tips 1

சூலை நோய் நீங்க…

ஆகாரம் உட்கொண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வகை வயிற்றுவலி உண்டாகும். காக்கட்டான் வேர், சிவதை வேர், சுக்கு. கடுகு ரோகிணி, திராட்சைப் பழம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் காய்ச்சி சுண்ட வைத்து ஓர் ஆழாக்கு ஆக்கி, வேளைக்கு கால் ஆழாக்கு சாப்பிட்டு வந்தால் கழிச்சல் உண்டாகி குலை நோயின் வேகம் குறையும்.

மூலம், முளை மூலத்திற்கு…

வெள்ளை வெங்காயத்தையும் பனங்கற்கண்டையும், சம அளவில் நெய்யில் வதக்கி, நன்றாக அரைத்து கடுக்காயளவு இரண்டு வேளை சாப்பிடலாம். சுத்தரிக்காயை தீயில் சுட்டு சாம்பலாக்கி வெளியே பூசலாம்.

மார்பு வலிக்கு…

அகத்திக்கீரையைக் காய வைத்து இடித்து, சவித்து காலை, மாவை இருவேளையும் அரை தோலா தூள் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மார்பு வலி (நெஞ்சு வலி) குணமாகும்.

வெந்தயக் கீரையை 250 மில்லி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து ஒவ்வொரு வேளையும் இரண்டு அவுன்ஸ் அருந்தி வர நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மார்பு வலி குணமாகும்.

வீக்கம் சரியாக…

உடலில் எங்கு வீக்கம் ஏற்பட்டாலும் வேப்பிலையை வதக்கி வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் வாடி விடும்.
நன்னாரி வேரை நீர் விட்டுக் களிம்பு போல் அரைத்துப் பற்று போட்டு வந்தால் நீண்ட கால வீக்கமும் வடிந்து விடும்.

கண் எரிச்சலா?

நந்தியாவட்டை மலர்களை இரவில் கண்களில் கட்டிக் கொண்டு காலையில் எடுத்து விடலாம். இரண்டு மூன்று நாள்கள் கட்டி வந்தாலே நல்ல குணம் தெரியும்.
கற்றாழையின் சோற்றை கட்டி வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.

ஒரு துளி தாமரைத் தேன் அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும். உச்சந் தலையில் சிறிது சிற்றாமணக் கெண்ணெய் வைத்து அதக்கி விட்டால் சீக்கிரம் குணம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories