முள் உடைந்து விட்டதா?
காலில் முள் உடைந்து உள்ளேயே தங்கிவிட சீழ் பிடித்துக் கொண்டு வலி எடுக்கும். கொடிக் கள்ளி பாலை அந்த இடத்தில் வைத்து கட்ட உடைந்த முள் முனை தானே வெளியே வந்து விடும்.
சிறுநீர் சம்பந்தமான பிணிகளுக்கு…
வெள்ளை நாவற்பழம் சாப்பிட நீரைப் பிரிக்கும். நீரிழிவு நோயைப் போக்கும். நீர்ச்சுருக்கு இருந்தாலும் சரியாகும். தாது புஷ்டியையும் ஏற்படுத்தும்.
*நீரிழிவுக்காரர்கள் வெந்தயம், வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது நல்லது. வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து சாப்பாட்டுக்கு கால் மணி நேரத்திற்கு முன் பகலும் இரவும் சாப்பிட்டு வர இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
தொண்டைப் புண்ணுக்கு…
சிறிது வெல்லம். சிறிது மிளகு. சிறிது பசு நெய்யையும் சேர்த்து லேகியமாகக் கிளறி கோவி குண்டளவு சாப்பிட்டு வர தொண்டைப் புண் குணமாகும்.
குளிர் சன்னி, சுரம் சரியாக…
புன்னை மரப்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் உ கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் இப்பொடியை சிறிது தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.
பல் வலிக்கு…
சொத்தைப் பல் ஈறுகளில், வீக்கம் இருந்தால் ஓமம், கிராம்பு, கற்பூரம் சேர்த்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு சொத்தைப் பல்லில் வைக்கவும். ஈறு வீக்கத்திற்கு இதே பொடியை வீக்கத்தின் மேல் பூசி 5 நிமிடங்களுக்குப் பிறகு வாய்க் கொப்பளிக்க பல் வலி, ஈறு வீக்கம் எல்லாம் குணமாகும்.