அப்பாச்சி தீர்வு: ஊதுகாமாலை, தேள்கடி, அனீமியா..!

Published:

health tips - 2026

ஊது காமாலைக்கு…

கோவை இலையை கசக்கிப் பிழிந்து சாறெடுத்து காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு அவுன்ஸ் சாப்பிடுவதுடன் கோவை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ள ஊதுகாமாலை சரியாகி விடும்.

தேள் கடிக்கு…

சுக்கை அரைத்து அதன் விழுதை கடிவாயில் தடவி நெருப்பில் சுட வலி நிற்கும். கடுகடுப்பு குறையும்.

அன்னாசியின் மகிமை

அன்னாசிப் பழச்சாறு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பசி உணர்வைத் தூண்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது. இருதயத்திற்கு பலமளிக்கிறது. நன்கு பழுத்த பழங்களையே பயன்படுத்த வேண்டும்.

பாப்கார்ன் மருத்துவம்

இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பை அடக்குகிறது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், சொறி சிரங்கு உள்ளவர்கள் பாப்கார்ன் சாப்பிட்டால் நோய் அதிகமாகும்.

அனீமியா குணமாக…

சோயா பீன்ஸின் மேல் தோவில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. சோயா பீன்ஸை தோலுடன் சாப்பிட்டு வர அனீமியா குணமாகும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img