ஊமத்தை விதையைச் சாப்பிட்டு விட்டால்…
சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள ஊமத்தை விதையைச் சாப்பிட்டு விடுவார்கள். பருத்திப் பூவை கஷாயம் வைத்து உள்ளுக்குக் கொடுக்க விஷ முறிவு ஏற்பட்டு உயிரைக் காப்பாற்றி விடும்.
மாதவிலக்கு பிரச்சினையா?
பலாப்பூக்களை சுத்தம் செய்து கஷாயம் தயாரித்து காலை, மாலை அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வெளிப்படத் தொடங்கும்.
உதிரக்கட்டினால் குழந்தை இல்லையா?
உதிரக்கட்டு ஏற்பட்டால் சந்தான விருத்தி ஏற்படாது. கல்யாண முருங்கைப் பூவை சுத்தம் செய்து மிளகு சேர்த்து அரைத்து காலையிலும் மாலையிலும் ஒரு சுண்டைக்காயளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர உதிரக் கட்டு நீங்கும். அதன் பிறகு குழந்தைப் பேறும் உண்டாகும்.
உள்உறுப்புகள் பலம் பெற…
இலவங்கத்தைப் பொடி செய்து ஒரு சிட்டிகைப் பொடியுடன் தேன் கலந்து காலை, மலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உள் உறுப்புகள் அனைத்தும் நன்கு பலம் பெறும்.
காம விருத்திக்கு குளிகை…
மதனகாமப்பூவுடன் குங்குமப்பூ, மராட்டி மொக்கு சம எடை சேர்த்து முருங்கைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக நிழலில் உலர்த்தி காலை, மாலை பசும்பாலில் ஒரு மாத்திரை சாப்பிட்டு வர போகத்தில் விந்து சீக்கிரத்தில் வெளிப்படாது.