உங்களுக்கு விரைப்புத் தன்மை குறைந்தால்… உடனே இதை கவனிக்க வேண்டும்!

heart operation - 2026

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தாம்பத்ய வாழ்க்கையில் உடல் ஒத்துழைக்காமல் தடுமாறுவது இயல்புதான். குறிப்பாக ஆண்களுக்கு கலவியின் போது ஏற்படும் விரைப்பு குறைபாடு பெரும் கவலையைத் தரும் ஒன்று.

நீண்ட கால சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், அது அவருக்கு உடலில் உள்ள அனைத்து சிறு இரத்தக் குழாய்களையும் சுருக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால்தான் கால்கள் மரத்துப் போவது, கால்களில் புண்கள் ஏற்படுவது, அவ்வாறு புண் ஏற்பட்டால் விரைவில் ஆறாமல் இருப்பது போன்றவை ஏற்படுகின்றன.

அதேபோலத்தான் ஆண்களுக்கு அந்தரங்க உறுப்புக்கு இரத்தம் பாய்வதும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதே வகையில்தான் விரைப்புத்தன்மை குறைபாடும் சிலருக்கு ஏற்படும். இது தொடக்கத்தில் லேசாகத்தான் இருக்கும். அப்போதே அதை உணர்ந்து கொண்டு சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதுதான் சரியான வழி.

அதேபோல உயர் இரத்த அழுத்தமும் தங்களுக்கு உடன் இருந்தால் அதைக் கண்டறிந்து, அதையும் மருத்துவர் ஆலோசனையின்படி கட்டுப்படுத்திக் கொண்டு சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் விரைப்புத்தன்மைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இதயநோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். காரணம், இரத்தத்தை பம்ப் செய்து அந்தரங்க உறுப்புகளுக்கு அதிவேகமாக அனுப்பும் செயல்பாடு இதய நோய் இருந்தால் தடைபட்டுப் போகும். எனவே விரைப்புத் தன்மைக் குறைபாடு ஏற்படும்.

எனவே, இது போன்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், இதய நோய் வல்லுநரை அணுகி, பிரச்னைகள் தென்பட்டால் சிகிச்சைக்கு தயாராக வேண்டும். புகை, மதுப் பழக்கங்கள் இருந்தால் அவற்றை நிறுத்த வேண்டும். தொடக்கத்திலேயே விரைப்புத்தன்மை குறைவைப் புரிந்து கொண்டு சர்க்கரை மாத்திரை அல்லது ஊசி ஆகியவற்றுடன், இரத்த நாளங்களை வலுப்படுத்தும் விட்டமின் காம்ப்ளக்ஸ் மாத்திரைகளான நியூரோபியான், மெதிகோபால் போன்றவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. விரைப்புத் தன்மைக்காக பொதுவாக வயகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இதுபோன்று இதய நோய்கள் இருப்பது தெரிந்தால், அல்லது கல்லீரல் நோய் போன்றவை சிறிதளவு இருந்தால் கூட வயாகரா வகை மாத்திரைகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories