கண்ணைப் போல் அல்ல… கண்ணையே பாதுகாக்க…! இயற்கை மருத்துவத்தில் கண் கழுவும் பயிற்சி!

test eye vijay - 2026

உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .

உடல் உறுதிக்கு பல பயிற்சிகள் உள்ளன. உடல் தூய்மைக்கு இயற்கை மருத்துவத்தில் ஒரு சில பயிற்சிகள் உள்ளன.

அதில் கண் கழுவுதல் குறித்து திருச்சி அமிர்தா யோகமந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அவ்வகையில் கண்களை பேணிக்காப்பது இன்றியமையாதது ஆகும். நவநாகரிக உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலைகளாலும் சுற்றுச்சூழல் மாசுகளாலும் காற்றில் மாசுகள் உள்ளன.

சாலையில் நடந்து சென்றாலோ, இருசக்கர வாகனத்தில் சென்றாலோ,பேருந்து பயணம் சென்றாலோ காற்றில் கலந்துள்ள மாசுகள் முகத்தில் படுகின்றன. மூச்சுக் காற்றிலும் கலக்கின்றன. அதுமட்டுமின்றி கண்களிலும் பரவுகின்றன.

உடல் மேல் உள்ள மாசுக்களை குளித்து தூய்மை செய்யலாம். கண்களில் உள்ள மாசுகளை அகற்ற இயற்கை முறையில் உள்ள கண் கழுவுதல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பயிற்சியை மேற்கொள்வதற்கு கண் குடுவையை கையில் எடுத்துக்கொண்டு முதலில் குடுவையிணை தூய்மையாக கழுவிக் கொள்ள வேண்டும். தூய்மையான குடிநீரை கண் குடுவையில் நிரப்பிக் கையில் செங்குத்தாக வைத்துக் கொண்டு தலையை குனிந்து குடுவை மீது கண்களை வைத்தல் வேண்டும்.

அப்பொழுது குடுவையில் உள்ள நீரானது கண்களில் படும் .கண்களை திறந்து திறந்து மூட வேண்டும். இப்பயிற்சியினால் கண்களில் உள்ள மாசானது நீரில் வந்துவிடும் .இதேபோல கண் குடுவையில் புதிதாக தூய நீரை நிரப்பி அடுத்த கண்ணையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

கண்களை கழுவுவதால், கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. புத்துணர்வு வருகிறது. கண்கள் குளிர்ச்சி அடைகிறது .கண்களில் உள்ள தூசி முதலியன வெளியாகின்றன என்றார்

– யோகா விஜய், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories