மலச் சிக்கல் தீர்க்கும் மகத்தான வழிமுறைகள்!

constipation clear vijay - 2026மலச்சிக்கல் பலச்சிக்கல் : மலச்சிக்கல் போக்குவதற்கான வழிமுறைகள்…

திருச்சி அமிர்தா யோக மந்திரத்தில் மலச்சிக்கல் போக்கும் வழிமுறைகள் யோகா ஆசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்து பேசுகையில் நவநாகரிக உலகில் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நவீன வசதிகளுடன் மக்கள் வாழ பழகி விட்டார்கள். சுற்றுச்சூழல் மாசு, நீர் மாசு, காற்று மாசு உள்ளிட்ட பஞ்ச பூதங்களும் மாசடைந்து விட்டதால் மனிதன் எண்ணற்ற உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

வேலைப்பளுவாலும், மன உளைச்சலாலும், போதுமான குடிநீர் அருந்தாதாலும் மலச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகமாக உடலில் இருந்து வெளியேறுவதால் மலச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இப்படி மலச்சிக்கலானது பல சிக்கலை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கலினால் வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தலைவலி, உடல் வலி, சோர்வு, தூக்கமின்மை, வயிற்றுப்புண், மூல வியாதி, தோல் வியாதி மேலும் உடலில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

மலமானது இயல்பாகவும் சுலபமாகவும் கழிக்கவேண்டும். துர்நாற்றம் வீசக் கூடாது. ஒரு நாளைக்கு இரு முறையாவது மலம் கழிக்க வேண்டும். உறங்கி அதிகாலை எழுந்த 30 நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும்.

மலம் கழிப்பது ஓரிரு நிமிட வேலையாகும். அதிக நேரத்துடன் அதிக சிரமத்துடன் மலம் கழிக்கக்கூடாது. மலம் கழிக்கும் முன்போ பின்போ வயிறு வலிக்க கூடாது. மலத்துவாரத்தில் அரிப்பு எரிச்சல் வரக்கூடாது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஏனென்றால் மனிதன் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆரோக்கிய முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி பசிக்கிறதோ அதேபோல செரிக்க வேண்டும்.

நாம் உண்ணும் உணவானது வாய் ,பல், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கணையம் வழியாக சென்று ஜீரணம் நடைபெறுகிறது .நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், நுரையீரல், வழியாக தூய காற்றை உட்கொண்டு நுரையீரல் கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது.

ரத்த நாளங்கள், இதயம் உடல் முழுக்க ரத்தத்தை பரவச் செய்கின்றது.

உடல் கழிவுப் பொருட்களை சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் ஆகியன வெளியேற்றுகின்றன.

முதுகு தண்டுவடம் மூளை நம்மை ஆட்கொள்கின்றன.

மேற்கண்டவாறு மனித உடலானது நித்தம் நித்தம் நடைபெற்று வருகிறது.

நமது உணவை ஜீரணம் செய்யும் பகுதி வாய்க்குழி, நாக்கு, உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், இவையெல்லாம் உணவுக்குழாயின் உறுப்புகள் ஆகும் .

நாம் உண்ணும் உணவானது வாய் வழியாகச் சென்று பற்களால் மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து இரைப்பைக்கு செல்கிறது. பிறகு இரைப்பை சிறுகுடல் சுவர்களில் உள்ள ரத்த நாளங்களால் சக்திகள் உறிஞ்சப்படுகின்றன.

இவ்வாறு ரத்தத்துடன் கலந்த உணவு நேராக கல்லீரலுக்கு செல்லும். பின்னர் உடலின் இதர பாகங்களில் செல்லும். ஜீரணிக்கப்பட்ட புரோட்டீன்கள் இறுதியாக அமினோ அமிலங்களாக திசுக்களை சரி படுத்தப்படுகின்றன.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

கழிவு பொருட்கள் நீக்கமானது சிறுகுடலில் இருக்கும் உணவானது பெருங்குடலில் கலக்கும் போது உணவின் சத்தானது ரத்தத்தில் கலந்துவிடும்.

எஞ்சிய ஜீரணிக்க முடியாத பொருட்கள் பெருங்குடலில் சிதைந்து மலக்கழிவு ஆகிறது . மலக்கழிவானது தினமும் வெளியேற வேண்டும்.

உடலில் உணவு பொருளில் உள்ள சத்துக்களை சிறுகுடல் பிரித்து மிச்சத்தை பெருங்குடலுக்கு அனுப்பும் இவ்வாறு இளகி வரும் பொருளிலுள்ள திரவத்தை உறிஞ்சிக் கொள்ளும் போது கழிவு இருகி விடுகிறது. பின்னர் பெருங்குடல் சதை மலக்கழிவை வெளித்தள்ளுகிறது. கழிக்கப்படும் வரை மலக்கழிவானது சிக்மாய்டிலும் மலக்குடலிலும் இருக்கும்.

குடிநீர் குறைவாக அருந்துவோர் நவநாகரீக பொறித்த உணவை, மாறுபட்ட உணவை உண்ணுவோர் மலச்சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

ஆதலால் மலக்குடலில் மலக்கழிவு அதிக நேரம் தங்கி உடலின் சீரான இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மனித உடலில் நடக்கும் சீரான இயக்கத்தில் மலம் கழிப்பதும் ஒன்றாகும் அதுவே பிரச்சினையாகும்போது மலக் கழிவை வெளியேற்ற இயற்கை மருத்துவ முறையில் எனிமா பயன்படுகின்றது.

constipation clear vijay2 - 2026எனிமா எடுத்துக் கொள்ளும் முறை

இயற்கை மருத்துவ அங்காடிகளில் எனிமா குடுவை விற்கின்றது. இக் குடுவையானது 750 மிலி குடிநீர் கொள்ளுமளவு எனிமா குடுவையுடன் அரை மீட்டர் பிளாஸ்டிக் குழாயுடன் நாசில் பொருத்தப்பட்டிருக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா குடுவை நாசிலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு எனிமா குடுவையில் நீரை நிரப்பியவுடன் சிறிது நீரை வெளியேற்றவும் அப்போது காற்று குமிழ்கள் வெளியேறிவிடும். பின்பு எனிமாகுடுவையினை உயரமாக பிடித்துக்கொண்டு சற்றே முன் குனிந்து ஆசனவாயில் நாசிலை சொருக வேண்டும். சில நிமிடங்களில் நீர் மலக்குடலில் சென்றுவிடும் .

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

பிறகு நாசிலை எடுத்து எனிமா குடுவையை வைத்து விட்டு 10 நிமிடம் சவாசனத்தில் படுத்துக் கொள்ள வேண்டும். மலக்குடலில் சென்ற நீர் மலக்குடல் உட்புறத்தில் இருக்கும் இருக்கும் மலக்கழிவினை இளக்கி விடும். உடன் மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும் அப்பொழுது மலம் கழிக்க வேண்டும்.

பொதுவாக மலச்சிக்கல் இருக்கும் பொழுது எனிமா குடுவினையை பயன்படுத்தி மலம் கழிக்கலாம்.

படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் எனிமா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

  • யோகா விஜய், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories