December 7, 2025, 1:21 AM
25.6 C
Chennai

‘ஹிந்து பாகிஸ்தான்’ எனக் கூறி மதப் பிரிவினை தூண்டிய சசிதரூருக்கு கைது வாரண்ட்!

sashi taroor - 2025பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., சசிதரூருக்கு எதிராக கோல்கட்டா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நேற்று ‘கைது வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வரன்முறையின்றி பேசுபவர்! பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்பவர்.

காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது காங்கிரஸ் தலைவர்கள் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அவர்களில் ஒருவராக சசிதரூரும் பேசிவருகிறார். இருப்பினும் இப்போது அவரது பழைய பேச்சுக்காக பிரச்னை எழுந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கடந்த ஆண்டு ஜூலையில், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ‘2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ என்றார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சசிதரூரின் பேச்சுக்கு பாஜக., கண்டனம் தெரிவித்தது. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. ஆனால் சசிதரூர் மறுத்துவிட்டார்.

இதை அடுத்து கோல்கட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சசி தரூருக்கு எதிராக வழக்கறிஞர் சுமித் சௌத்ரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘சசிதரூரின் கருத்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சசி தரூருக்கு சம்மன்கள் அனுப்பப் பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தாஸ்குப்தா, சசிதரூருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories