‘ஹிந்து பாகிஸ்தான்’ எனக் கூறி மதப் பிரிவினை தூண்டிய சசிதரூருக்கு கைது வாரண்ட்!

sashi taroor - 2026பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., சசிதரூருக்கு எதிராக கோல்கட்டா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நேற்று ‘கைது வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வரன்முறையின்றி பேசுபவர்! பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்பவர்.

காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது காங்கிரஸ் தலைவர்கள் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அவர்களில் ஒருவராக சசிதரூரும் பேசிவருகிறார். இருப்பினும் இப்போது அவரது பழைய பேச்சுக்காக பிரச்னை எழுந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கடந்த ஆண்டு ஜூலையில், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ‘2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ என்றார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சசிதரூரின் பேச்சுக்கு பாஜக., கண்டனம் தெரிவித்தது. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. ஆனால் சசிதரூர் மறுத்துவிட்டார்.

இதை அடுத்து கோல்கட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சசி தரூருக்கு எதிராக வழக்கறிஞர் சுமித் சௌத்ரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘சசிதரூரின் கருத்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சசி தரூருக்கு சம்மன்கள் அனுப்பப் பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தாஸ்குப்தா, சசிதரூருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories