February 20, 2026, 10:34 PM
27.3 C
Chennai

8 செயற்கைக் கோள்களுடன் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-35

ஸ்ரீஹரிகோட்டா: அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி சி-35 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து காலை சரியாக 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 48 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 8.42 மணிக்கு தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஆராய்ச்சி செய்து வருகிறது. மேலும் வர்த்தக ரீதியாகவும் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பருவநிலை மாற்றங்கள், புயல் எச்சரிக்கை உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளை இன்று காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. இதற்கான 48 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 8.42 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைகோள் 730 கிலோமீட்டர் உயரத்தில் துருவ சுற்று வட்டப்பாதையில் 98.1 டிகிரியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் எடை 371 கிலோ.  புயல் எச்சரிக்கை, பருவநிலை மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறியும் வகையில் ஆஸ்கேட்-2 என்ற செயற்கைகோளை இஸ்ரோ கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி விண்ணில் நிலை நிறுத்தியது.

ஒடிசா கடற்கரை பகுதியில் பாஃலின் புயல் எச்சரிக்கையை ஆஸ்கேட்-2 அளித்த தகவல்களுடன் இஸ்ரோ முன்கூட்டியே துல்லியமாக தெரிவித்தது. இதனால் பல உயிர்கள் அப்போது காப்பாற்றப்பட்டது. இந்த ஆஸ்கேட்-2 செயற்கைகோளின்  ஆயுட்காலம் 2014 மார்ச்  மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இதே வகையில் மற்றொரு செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்து ஸ்கேட்சாட்-1 என்ற செயற்கைகோள் தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை அனுப்பிய ஆஸ்கேட்-2 செயற்கைகோளை விட, அதிநவீன கருவிகள் தற்போது அனுப்பப்பட்டுள்ள ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது புயல், பருவநிலை தொடர்பான சிக்னல்களை அனுப்பி மக்களை பாதுகாக்க உதவும்.

ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளுடன் அல்ஜீரியா நாட்டின் அல்சாட் – 1பி, அல்சாட் – 2பி,  அல்சாட் – 1என், கனடாவின் என்எல்எஸ்-19, அமெரிக்காவின் பாத்பைஃன்டர் -1,  மும்பை ஐஐடியின் பிரதம், பெங்களூர் பிஈஎஸ் பல்கலைக்கழகத்தின் பைசாட் ஆகிய 7  செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இவை பூமியிலிருந்து 689 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்ட பாதையில்  நிலைநிறுத்தப்பட உள்ளன. ஒரே ராக்கெட் மூலம் இரு வேறு சுற்றுப்பாதையில்  செயற்கைகோள்களை நிலை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும். இதனால்  பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் செலுத்துவதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியதில் இருந்தே, விஞ்ஞானிகள் ராக்கெட் செயல்பாடுகளை பரிசோதித்து வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories