December 5, 2025, 2:47 AM
24.5 C
Chennai

கேக்-ல் விஷம் வைத்த சித்தப்பா! பிறந்தநாளே இறந்தநாளான சோகம்!

cake 5 - 2025

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள அய்னாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் தன்னுடைய மகன் ராம்சரணின் ஒன்பதாவது பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர். ரவியின் மகன் பிறந்தநாளுக்கு ஸ்ரீநிவாஸ் கேக் ஒன்றை அனுப்பியுள்ளார் .

இரவு தந்தை ரவி, தாய் பாக்கியலட்சுமி, சகோதரி பூஜிதா உள்ளிட்ட உறவினர்களின் வாழ்த்து மழையில் சிறுவன் ராம்சரணும் சந்தோஷமாக கேக் வெட்டியுள்ளான். அனைவரும் அதனை உண்டுள்ளனர். சிறிது நேரத்தில் கேக் சாப்பிட்ட நான்கு பேருமே மயங்கி விழுந்தனர்.

cake - 2025

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் சித்தி பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ராம்சரணும் அவனுடைய தந்தை ரவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் பாக்கியலட்சுமியும், சகோதரி பூஜிதாவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து கொம்முரவேலி காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் காவல் துறையினர். சித்திபேட்டையில் ரவிக்கு சொந்தமான பூர்வீக சொத்து உள்ளது. இதனை பங்கிட்டுக் கொள்வதில் ரவிக்கும், அவருடைய தம்பி சீனிவாசுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

cake 4 - 2025

அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி சீனிவாஸ் பிறந்த நாள் கேக்கில் விஷம் கலந்து, உடன் பிறந்த அண்ணன் குடும்பத்தையே கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
அவரின் இந்த முயற்சியில் அண்ணன் ரவியும் அவரது மகன் ராம்சரணும் கொல்லப்பட்டுள்ளனர்.

சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கேக்கில் ஸ்ரீநிவாஸ் விஷம் வைத்து பழிதீர்த்ததாக குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ரகு கூறும்போது, “கேக்கில் பூச்சிக்கொல்லி மருந்தின் வாடை வீசியது. பாதிக்கப்பட்டவர்கள் மீதும் அதே வாடை வீசியதாக கிராம மக்கள் கூறினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது,” என்றார்.

கேக்கில் இருந்தது என்ன மாதிரியான விஷம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகும் விசாரணைக்கு பிறகே முழு தகவல் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories