உபி., பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது!

chinmayanad - 2026

உ.பி.யில் இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது

பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்தாவை உடனடியாக கைது செய்யாவிட்டால், தான் தீக்குளித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக., முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது திருட்டுத் தனமாக படம் எடுத்து மிரட்டியதாக சின்மயானந்த் மீது குற்றம் சாட்டினார். மேலும், அதை வெளியிட்டு விடுவதாகவும், துப்பாக்கி முனையில் வைத்து தன்னை மிரட்டி சின்மயானந்தின் ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர் என்று புகார் அளித்துள்ளார்.

up ex minister - 2026

ஓர் ஆண்டாக சின்மயானந்த் தன்னை பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், அதை தன் கண் கண்ணாடியில் கேமரா பொருத்தி பதிவு செய்து ஆதாரம் வைத்திருப்பதாகவும் கூறினார். இதனால், தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்று விடுவதாக சின்மயானந்த் மிரட்டியதாக புகார் அளித்தார் அந்தப் பெண்.

ஆனால், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் காரணங்களைக் கூறி நழுவி வந்தார் சின்மயானந்த். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜரானார். உச்ச நீதிமன்றம் நியமித்த உ.பி., சிறப்பு விசாரணைக் குழுவின் பல கட்ட விசாரணைகளின் போது, தனது குற்றச்சாட்டு தொடர்பாக 43 வீடியோக்கள் அடங்கிய ஒரு பென் டிரைவை அந்த மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தார்.

சின்மயானந்தின் படுக்கை அறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்ற விசாரணைக் குழு மேலும் ஆதாரங்களைத் திரட்டிய நிலையில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories