January 25, 2025, 5:06 PM
29 C
Chennai

அமேதிக்கு விரைவில் வருவார் ராகுல்: சோனியா காந்தி

sonia-amethi அமேதி: அமேதி தொகுதிக்கு விரைவில் வந்து மக்களைச் சந்திப்பார் ராகுல் காந்தி என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சோனியா காந்தி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தி விடுமுறை எடுத்து வெளியில் சென்றுள்ள நிலையில், தொகுதி மக்களை அவருக்கு பதிலாக சோனிய காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேபரேலி, அமேதி தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதனை நாங்கள் தீர்த்து வைப்போம். ராகுல் காந்தி ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்றார் சோனியா காந்தி. முன்னதாக, தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் உள்ள பச்வார், பந்திப்பூர், சிவ்புரி ஆகிய கிராமங்களுக்கு சோனியா காந்தி சென்றார். அங்கு அவரிடம், திடீர் மழையால் கோதுமை, கடுகு ஆகிய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறையிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்ததா? என சோனியா காந்தி கேட்டார். அதற்கு அவர்கள், மத்திய அரசின் உதவிகள் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால் உத்தரப் பிரதேச அரசு அறிவித்த உதவி இன்னமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்ட சோனியா காந்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு, சர்வோதயா, உதர்பாரா கிராமங்களுக்குச் சென்ற அவர், அண்மையில் ரயில் விபத்தில் உயிரிழந்த சிவேந்திர சிங், சிட்ல பிரசாத் மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ALSO READ:  சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.