5வது நாளில்… 48 ஆயிரம் ஆர்டிசி தொழிலாளர்களின் போராட்டம்!

rtc telangana3 - 2026

தெலங்கானாவில், ஐந்து நாட்களாக தொடர்ந்து நடக்கும் 48,000 ஆர்டிசி தொழிலாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசுடன் ரோட்வேஸ் ட்ரான்ஸ்போர்ட் கார்பரேஷன் – ஆர்டிசி.,ஐ இணைக்க் கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து உள்ளது. இதற்கு ஆதரவு தரும்படி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஆர்டிசி ஜேஏசி அழைப்பு விடுத்துள்ளது.

தெலங்கானா ஆர்டிசி தொழிலாளர்கள் நடத்தும் பந்த் ஐந்து நாட்களைக் கடந்துவிட்டது! தொழிலாளர்களும் சரி… அரசும் சரி… தங்களின் பிடிவாதத்தை தளர்த்தாததால் தசரா விஜயதசமி பண்டிகை சமயத்தில் பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

rtc telangana2 - 2026

இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளார்கள். சென்ற 5 நாட்களாக பலவித வடிவங்களில் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளது ஆர்டிசி ஜேஏசி.

இந்தப் போராட்டத்தில் அரசு பணியாளர்களும் பொதுமக்களின் பல்வேறு சங்கங்களும் இணைய வேண்டும் என்று விரும்புகிறது ஆர்டிசி ஜேஏசி. இதன் தொடர்பாக புதன்கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அரசாங்கத்தோடு ஆர்டிசியை இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் மேலும் 26 கோரிக்கைகளை வற்புறுத்தி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது இந்த போராட்டம்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அரசும் பின்வாங்காத நிலையில் தொழிற்சங்கங்கள் மேலும் தீவிர போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. போராட்டம் தொடங்கிய இரண்டாம் நாள் பஸ் டிப்போக்களின் முன்பாக குடும்பத்தோடு சேர்ந்து ஆர்டிசி தொழிலாளர்கள் “பதுக்கம்மா” எனப்படும் தெலங்கானா நவராத்திரி பண்டிகையை கும்மியடித்து கொண்டாடினார்கள்.

பஸ் டிப்போக்களின் முன் விஜய தசமியன்று ‘சமீ’ பூஜை செய்து தொழிலாளிகள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதோடு மாதச் சம்பளம் கூட அரசாங்கம் அளிக்காத நிலையில் அவர்கள் மிகவும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் உள்ளார்கள்.

rtc telangana1 - 2026

ஆர்டிசி ஜேஏசி தலைமையில் சோமாஜிகூடா பிரஸ் கிளப்பில் அனைத்து சங்கங்களையும் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து ஜேஏசி கன்வீனர் அசுவத்தாமரெட்டி அறிக்கை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் உத்தியோகி சங்கங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆர்டிசி தொழிலாளர் போராட்டத்திற்கு ஏற்கெனவே காங்கிரஸ், பிஜேபி, டிடிபி இவற்றோடுகூட பல அரசியல் கட்சிகள் ஆதரவு அறிவித்துள்ளன. அதேபோல் ஹுஜூர்நகரில் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவு நல்கி உள்ள சிபிஐ கூட தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

முதலமைச்சர் தன் வழி முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஹுஜூர் நகரில் வரும் எலக்ஷனில் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டி வரும் என்று அந்தக் கட்சி தலைவர் கூறியுள்ளார். தாம் ஒன்றும் எந்த ஒப்பந்தமும் எழுதிக் கொடுக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் தரப்பில் போராடுவதற்கு சிபிஐ எப்போதும் முன்னிற்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்திற்கு பேராசிரியர் கோதண்டராம், டிடிபி.யிலிருந்து ராவுல சந்திரசேகர், சிபிஐ கட்சிகளின் பல பிரமுகர்கள் ஆஜரானார்கள். மறுபுறம் ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. ஆளுநரின் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருக்கின்றன.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தங்கள் வேலையை தாமே இழந்துள்ளார்கள் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இவர்களை எந்தச் சூழலிலும் வேலையில் மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார். ஆர்டிசி ஜேஏசியோடு பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்றார்.

ஆனால் சோமாஜிகூடா பிரஸ் கிளப் மீட்டிங்கில் பங்கு கொண்ட பல கட்சி பிரமுகர்கள் கேசிஆர் வழிமுறையை விமர்சனம் செய்தார்கள். ஆர்டிசி தொழிலாளர்கள் புதிதாக எதையும் கோரிக்கை வைக்கவில்லை என்று சிபிஎம் தலைவர் தம்மிநேனி வீரபத்ரம் தெரிவித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

தனியார் பஸ் ஆபரேட்டர்களுக்கும் முதல்வருக்கும் இடையே மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். சேவ் ஆர்டிசி ஊர்வலத்தை சிபிஎம் கட்சியினர் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories