ஆர்டிசி விவகாரம்: வென்றது யார்? ஜகன் அரசியல் வியூகத்தில் விழி பிதுங்கிய ராவ்!

kcr jagan - 2026
கோப்புப் படம்

இரு தெலுங்கு மாநிலங்களில் ஆர்டிசி விவகாரத்தில் வென்றது யார்? ஷாக் தின்றது யார்? ஜகனின் அரசியல் வியூகத்தால் அதிர்ந்து நிற்கும் சந்திரசேகர ராவ்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஒப்பிட்டால் ஜகனின் அரசியல் அனுபவம் மிகவும் குறைவே! அப்படியிருக்கையில் ஜகன் வகுக்கும் அரசியல் வியூகத்தில் டிஆர்எஸ் சிக்கித் தவிக்கிறதா?

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆர்டிசி நஷ்டத்தில்தான் ஓடுகிறது. இது பல ஆண்டுகளாக உள்ள நிலைமை. ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு அரசாங்கமே நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை அளிக்கும் சூழல் நிலவுகிறது.

இதையெல்லாம் கவனித்த ஆந்திரா முதல்வர் ஜெகன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆர்டிசியை அரசாங்கத்தோடு இணைந்து விடுவதாக வாக்களித்தார். அதே போல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் ஆந்திரா ரோடு டிரன்ஸ்போட் கார்பொரேஷனை அரசோடு இணைத்ததுடன் அதன் பணியாளர்களையும் அரசாங்க பணியாளர்களாக அறிவித்தார்.

அதனால் ஆர்டிசி பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இத்தனை நாட்களாக பட்ட கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட சந்தோஷத்தில் தசரா பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

அதே நேரம்… தெலங்கானாவில் நிலைமை முழுவதும் தலைகீழாக மாறியது. ஆந்திரா போலவே தம்மையும் அரசாங்கத்தோடு இணைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையோடு ஆர்டிசி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆந்திர அரசு எடுத்த முடிவு போலவே தெலங்கானா அரசும் முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு இருந்தபோதிலும் தெலங்கானா முதல்வர் கேசிஆர் வெவ்வேறு காரணங்களால் அதுபோல் முடிவெடுக்க ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தெலங்கானா முதல்வர் கேசிஆர் மட்டும் ஏன் இவ்வாறு முரண்டு பிடிக்கிறார் என்று ஆர்டிசி தொழிலாளர்கள் முதல்வரை கேள்வி எழுப்புகின்றனர்.

rtc telangana3 - 2026

இதற்கு ஒப்புக்கொண்டால் நாளை தெலங்கானாவில் ஆட்டோ டிரைவர்கள் கார் டிரைவர்கள் கூட இனி ஆரம்பிப்பார்கள் என்று எண்ணுகிறார் கேசிஆர். ஏனென்றால் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் அங்குள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும் கார் டிரைவர்களுக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளிப்பது போலவே தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எண்ணுகிறது என்று தெரிகிறது .

அதனால் எந்தச் சூழலிலும் ஆந்திராவில் எடுக்கும் முடிவுகளை தெலங்கானாவில் எடுக்கக்கூடாது என்று கேசிஆர் தீர்மானமாக இருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் தெலங்கானா சிஎம் கேசிஆரோடு ஒப்பிட்டால் ஜெகனின் அரசியல் அனுபவம் மிகவும் குறைவே. அப்படியிருக்கையில் ஜெகன் வகுக்கும் வியூகத்தில் சிக்கி சந்திரசேகரராவ். அவஸ்தைக்கு ஆளாவதாகத் தெரிகிறது.

ஆந்திர அரசாங்கம் நல்ல முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் தெலங்கானா அரசு மட்டும் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது இல்லை என்றும் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆர்டிசி விஷயத்தில் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை ஆந்திராவில் ஆர்டிசி பணியாளர்கள் போராட்டத்தின் வழி செல்ல மாட்டார்கள். ஒருவேளை போராட்டத்தை அறிவித்தால் பொதுமக்கள் அவர்களையே குற்றம் சாட்டுவார்கள்.

jagan writer - 2026

ஏனென்றால் அரசாங்கம் அவர்களை அரசு பணியாளர்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் அவர்களுக்கு அதுவே பெரிய வரம். அதைவிட வேறென்ன வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து. அதனால் ஆந்திராவில் ஆர்டிசி பணியாளர்கள் இனி போராட்டம் பந்த் போன்றவற்றில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் தெலங்காணாவில் இந்தச் சூழ்நிலை இல்லை.

கேசிஆர் ஒருவேளை ஒப்புக் கொண்டால் அதன் பலன் கேசிஆருக்கு அல்லாமல் ஜகனுக்குச் சென்று விடும் வாய்ப்பு உள்ளது என்பது டிஆர்எஸ் தரப்பு கருத்து. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும் ஜகன் எடுக்கும் முடிவுகள் தெலங்கானா அரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories