பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகியான ரபி பிர்ஸாடா ஒரு ட்வீட் செய்தவுடனேயே, அவரது டிவிட்டர் பக்கம் கேலி கிண்டல் பதிவுகளால் நிரம்பிப் போனது. பிறகு..?! பாரதப் பிரதமர் மோடியைக் கொல்வேன் என்று கூறி தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தும் நபர்கள் அணியும் வெடிகுண்டுகளுடனான ஆடையை அணிந்த படி போஸ் கொடுத்த ரபி பிர்ஸாடா, இதனை ஒரு பதிவாகச் செய்திருந்தால்…?
இடுப்பில் கைகளை வைத்தபடி, பாடகி ரபி பிர்ஸாடா தனது ஆடைகளுக்கு மேல் ஒரு கறுப்பு நிற உடையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டார், டைமருடன் இணைக்கப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டிருக்கும் அந்த ஆடையை அணிந்த படி போஸ் கொடுத்து, “மோடிஹிட்லர் நான் விரும்புகிறேன் #காஷ்மிர்கிபேடி,” என்று எழுதியுள்ளார்.
இந்த டிவீட்டுக்கு, இந்தியாவில் இருந்து நெட்டிசன்கள் அதிவிரைவில் எதிர்வினையாற்றினர், பெரும்பாலானவர்கள், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நாட்டின் ஆதரவை அளிக்கும் விதத்தில் இதனை, பாகிஸ்தானின் “தேசிய உடை” என்றனர்!
“ஆஹா !! பாரம்பரிய பாக்கிஸ்தானிய உடையில் நீங்கள் அருமையாக இருக்கிறீர்கள்” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.
மற்றொருவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்த ஆடையை பாகிஸ்தானின் தேசிய உடையாக அறிவிக்குமாறு வலியுறுத்தினார்.
இத்தகைய விசித்திரங்கள் இந்தப் பாடகி ரபி பிர்ஸாடாவுக்கு புதியதல்ல.
கடந்த செப்டம்பர் மாதம், காஷ்மீர் தொடர்பான புது தில்லியின் முக்கிய முடிவுகள் தொடர்பாக மோடிக்கு எதிராக பாம்புகள், முதலை, கருந்தேள் என விஷப் பூச்சிகளை வைத்து தாக்குதல் தொடுப்பேன் என்று அச்சுறுத்தினார். அத்துடன், ஏராளமான பாம்புகள் மற்றும் முதலைகளுடன் ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.
சிலர் அதனை “முட்டாள்தனம்” என்று கூறியிருந்தாலும், மற்றவர்கள் விரைவில் அவர் மனநலம் தொடர்பில் குணமடைய வேண்டும் என்று விரும்பினர்.
கடந்த மாதம், பஞ்சாப் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பூங்காக்கள் துறை பிர்சாடா மீது நான்கு மலைப்பாம்புகள், ஒரு முதலை மற்றும் பாம்புகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பதற்காக நடவடிக்கை எடுத்தது என்று ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லாகூர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட்கூட பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் வெடிகுண்டுகளுடன் போஸ் கொடுத்து உசுப்பு ஏற்றியுள்ளார்.
#Tradition_dress_of #இந்திய#ஜப்பான்#பூடான்#பாக்கிஸ்தான்
— ????????லட்சுமி????தீபா???????? (@Deppaa1) October 23, 2019
இவர்கள்
(#இஸ்லாமியர்கள்)
எந்த நாட்டில்
இருந்தாலும் அந்த
நாட்டில் நிம்மதி
என்பது கிடையாது
என்பதற்கு இதுவே சான்று..#இஸ்லாம்_பயங்கரவாதம் pic.twitter.com/z789O0f1s5
இந்திய #ஜப்பான் #பூடான் #பாக்கிஸ்தான் – இவர்கள் (#இஸ்லாமியர்கள்) எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டில் நிம்மதி என்பது கிடையாது என்பதற்கு இதுவே சான்று.. #இஸ்லாம்_பயங்கரவாதம்
இதையும் படியுங்க…
மோடி மீது பாம்புகளை ஊர்ந்துபோக விட்டு… கொன்னு… : பாகிஸ்தான் பாப் பாடகி மிரட்டல்! |