அத நைஸா திருடி… இங்க கூடவா ஒளிச்சி வெப்பாங்க..?!

Published:

stealing thins - 2026

திருடிகள் உள்ளார்கள்… ஜாக்கிரதை! எங்கெங்கெல்லாம் ஒளித்து வைக்கிறார்கள் பாருங்கள்… என்று ஆந்திராவில் வைரலாகும் ஒரு வீடியோ பதிவினை பகிர்ந்து கொண்டு கருத்து இடுகிறார்கள்.

நல்கொண்டா மாவட்டம் மிரியால்குடா கணேஷ் நகரில் திருடிகள் சிலர், திடீர் பரபரப்பை ஏற்படுத்தினர். சைனா மார்க்கெட் கடைகளுக்குச் சென்று அதில் உள்ள பொருட்களை திருடி பின்னர் எதுவும் அறியாதது போல் மெதுவாக அங்கிருந்து நழுவினர் .

ஆனால் அவர்கள் சென்றபின்னர் தான் கடைக்காரர் பொருட்கள் குறைவதை கவனித்துள்ளார். அது குறித்து சந்தேகம் ஏற்பட்டு சிசிடிவி காட்சிகளை அவர் மெதுவாகப் பரிசோதித்துள்ளார்.

அப்போதுதான், கடைக்கு வந்த பெண்கள் சிலர் பொருட்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் தென்பட்டன. அதிலும், மூன்று பேர் நின்று கொண்டிருக்க, ஒரு பெண்மணி லாகவமாக புடைவைக்குள் பொருள்களை வைப்பதைப் பார்த்து கடைக்காரர் அசந்து போனார். அட… எங்கெங்கெல்லாம் ஒளித்து வைக்கிறார்களோ பாருங்க என்று வியந்த கடைக்காரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இப்போது ஆந்திரத்தில் வைரலாகிவருகிறது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img