ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கன மழை கொட்டி வருகிறது. பட்கம் மாவட்டத்தில் அபாய அளவில் வெள்ள நீர் இருப்பதால், அங்கிருந்த 221 குடும்பங்களை மாநில அரசு அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இந்நிலையில், ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து, அபாய அளவைத் தாண்டியிருப்பதால், ஸ்ரீநகரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்ற வருட வெள்ள பாதிப்பில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்னும் முழுதுமாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் மழைக்காலம் துவங்கியிருப்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Popular Categories