December 5, 2025, 11:52 PM
26.6 C
Chennai

ஹைதராபாத்தில் களை கட்டிய எருமை மாடுகளின் ‘சதர்’ பண்டிகை!

hyderabad sadar2 - 2025

யாதவ குலத்தவரின் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாக ‘சதர் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்த இரண்டாம் நாள் யாதவர்கள் தவறாமல் கடைப்பிடிக்கும் பண்டிகை சதர் பண்டிகை. சதர் என்றால் ஹைதராபாத் பேச்சு நடைமுறை வழக்கில் ’முக்கியமானது’ என்று பொருள்.

வருடா வருடம் தெலங்காணாவில் முக்கியமாக ஹைதராபாத் நகரில் நடைபெறும் இந்த எருமை மாட்டு திருவிழா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1940ஆம் ஆண்டு முதல் இந்தத் திருவிழா ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது

விமர்சையான சதர் பண்டிகையில் பெரிய பெரிய எருமை மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான். பளபளவென்று மின்னும் வண்ணம் கருத்த எமன் வாகனத்தை அலங்கரிப்பார்கள்.

ஒரு வாரம் முன்பிருந்தே ஏற்பாடுகள் தொடங்கி விடும். எருமையின் உடல் மீதிருந்து ரோமங்களை அகற்றி தயிரும் வெண்ணெயும் தேய்த்து கருப்புக் கண்ணாடி போல் வழுவழுப்பாக்குவார்கள். கொம்புகளுக்கு பல நிற ரிப்பன்கள் சுற்றி வண்ணமயமாக்குவார்கள். பூமாலைகளும் மணி மாலைகளும் அணிவித்து உற்சாகமூட்டுவார்கள்.

மாட்டின் கால்களுக்கு சலங்கை கட்டி அவற்றை ஆட விடுவார்கள். பின் அவற்றை மனிதக் காளைகள் அடக்குவதுதான் இந்த விழாவின் சிறப்பு.

தினமும் எருமைகளுக்கு காலையில் 15 லிட்டர் பாலும் முந்திரிப் பருப்பும் ஆகாரமாக அளிப்பார்கள். இரவில் விஸ்கியோடு பிஸ்தா பருப்பு உணவு.

இளைஞர்கள் மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கும் போது அவை முன்னங்கால்களைத் தூக்கி தாக்க முற்படும். ஆனால் மிகப் பெரிய உருவமும் மிகமிக அதிக எடையும் கொண்டதாக இருப்பதால் மனிதர்களே வெற்றி பெறுவர்.

hyderabad sadar1 - 2025

ஹைதராபாத் சுற்றுப்புறங்களில் இருக்கும் பல மாவட்டங்களில் இருந்தும் பலர் ‘சதர்’ உற்சவ வேடிக்கை காண திரண்டு வருவர். தற்போது இதன் பிரபலம் பெருகி வருவதால் இந்தியா முழுவதிலிருந்தும் இதைக் காண மக்கள் பெரும் அளவில் வருகை தருகின்றனர்.

இந்த எருமை மாடுகளின் விலை பல கோடி கணக்கில் உள்ளது. ஹைதராபாத் நாராயண்குடாவில் நிகழும் பண்டிகை அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த விழாவிற்காக பாரதத்தின் பல ஊர்களிலிருந்தும் எருமை மாடுகள் ஹைதராபாத் வந்து சேர்கின்றன.

இந்த ஆண்டு எருமை நட்சத்திரங்களாக ஹரியானாவில் இருந்து 1600 கிலோ எடை கொண்ட ‘சர்டஜ்’ எருமையும், 2000 கிலோ எடை கொண்ட ‘ஷஹென்ஷா’ என்ற எருமையும் வந்திறங்கியுள்ளன.

எருமை மாடுகள் அணிவகுப்போடு யாதவ குலத்தவர்களின் ஊர்வலம் தாரை தப்பட்டை முழங்க ஆட்டமும் பாட்டமுமாக ஹைதராபாதிலுள்ள முஷீராபாதில் தொடங்கி நாராயண்குடா ஒய்எம்சிஏ மைதானத்தில் நிறைவடைந்தன.

இதன் பொருட்டு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வாகனங்களுக்கு மாற்று வழிகளை ஐதராபாத் நகர டிராபிக் போலீசார் ஏற்பாடு செய்தனர்.

அக்டோபர் 29 செவ்வாய் நேற்று மாலை 7 மணி முதல் புதன் கிழமை இன்று காலை 5 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் இதற்காகக் கடைபிடிக்கப் பட்டது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories