தெரு நாய்களால்… பறிபோன விவசாயியின் வாழ்வாதாரம்!

Published:

goats died - 2026

கும்பல் கும்பலாக இறந்த ஆடுகள்… வீதி நாய்கள் கொன்றிருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

வளர்ப்பு ஆடுகள். அவைதான் அவருக்கு வாழ்வாதாரம். ஆனால் தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் காவல் காக்காமல் விட்டதால், எதிர்பாராத விதமாக அவை மரணத்தின் வாயில் விழுந்தன.

தெலங்காணா மாநிலம் கொமரம் பீம் அசிபாபாத் மாவட்டம் திர்யாணி மண்டலம் ரொம்பல்லி பஞ்சாயத்து எல்லையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ‘கெர்வேத’ துகாராம் என்பவரின் ஆட்டுமந்தை மேல் ஞாயிறன்று மாலை தெருநாய்கள் தாக்குதல் நடத்தின. அதில் 26 ஆடுகள் உடனுக்குடன் இறந்தன.

ஞாயிறு காலையில் ஆட்டு மந்தையை காட்டிற்குச் சென்று மேய்ந்து விட்டு மாலையில் கிராமத்தின் அருகில் உள்ள புல்வெளியில் அவிழ்த்து விட்டார்.

தீபாவளியானதால் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 8 மணி அளவில் ஆட்டுமந்தை அருகில் சென்றபோது தெருநாய்கள் அவற்றை தாக்குவதை கண்டார். அவற்றை துரத்தி விட்டு பார்த்தால் இருபத்தாறு ஆடுகள் அங்கேயே இறந்து கிடந்தன.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

தீபாவளி அன்று நடந்த இந்த சம்பவம் கிராமத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img