தாய் வீட்டுக்கு போகக் கூடாதுன்னு… மனைவி கைகளை வெட்டிய… ‘சந்தேகப் பிராணி’ கணவன்!

Published:

arival attack - 2026

மனைவியின் கைகளை வெட்டிய கணவன்; சந்தேகப் பிராணியான கணவன் மனைவியின் கைகளை வெட்டினான்.

கடப்பா மாவட்டத்தில் நிகழ்ந்த கொடுமை இது. கணவன் தாக்கியதால் பத்மாவதியின் வலது கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடது கையும் முக்கால்வாசி துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்தோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் கோபத்தால் அறிவிழந்தான். மனைவி பிறந்த வீட்டுக்குச் செல்வதை விரும்பாத அவன் மனைவியை கோபத்தால் தாக்கினான்.

கடப்பா மாவட்டம் ‘ரயில்வே கோடூரில்’ இந்த கொடூரம் நிகழ்ந்தது. ‘விபிஆர் கண்டிரிக’ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவய்யாவும் பத்மாவதியும் தம்பதிகள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்.

ஆனால் சில நாட்களாக சிவய்யா மனைவியின் நடத்தையில் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டுள்ளான். இது தொடர்பாக இருவரிடையே பலமுறை சண்டை நடந்துள்ளது. அதனால் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வர விரும்பவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

மனைவி திரும்பி வந்த பின்பும் அவன் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. செவ்வாய் அன்று இரவு கூட கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வலுத்தது. அதை தாங்க இயலாமல் பத்மாவதி பிறந்த வீட்டுக்குச் செல்வதற்கு வீட்டை விட்டு கிளம்பினாள்.

அதனால் கோபமடைந்த சிவய்யா கத்தியால் மனைவியை தாக்கினான். கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.

அருகில் இருந்தோர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img