தாய் வீட்டுக்கு போகக் கூடாதுன்னு… மனைவி கைகளை வெட்டிய… ‘சந்தேகப் பிராணி’ கணவன்!

arival attack - 2026

மனைவியின் கைகளை வெட்டிய கணவன்; சந்தேகப் பிராணியான கணவன் மனைவியின் கைகளை வெட்டினான்.

கடப்பா மாவட்டத்தில் நிகழ்ந்த கொடுமை இது. கணவன் தாக்கியதால் பத்மாவதியின் வலது கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடது கையும் முக்கால்வாசி துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்தோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் கோபத்தால் அறிவிழந்தான். மனைவி பிறந்த வீட்டுக்குச் செல்வதை விரும்பாத அவன் மனைவியை கோபத்தால் தாக்கினான்.

கடப்பா மாவட்டம் ‘ரயில்வே கோடூரில்’ இந்த கொடூரம் நிகழ்ந்தது. ‘விபிஆர் கண்டிரிக’ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவய்யாவும் பத்மாவதியும் தம்பதிகள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்.

ஆனால் சில நாட்களாக சிவய்யா மனைவியின் நடத்தையில் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டுள்ளான். இது தொடர்பாக இருவரிடையே பலமுறை சண்டை நடந்துள்ளது. அதனால் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வர விரும்பவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மனைவி திரும்பி வந்த பின்பும் அவன் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. செவ்வாய் அன்று இரவு கூட கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வலுத்தது. அதை தாங்க இயலாமல் பத்மாவதி பிறந்த வீட்டுக்குச் செல்வதற்கு வீட்டை விட்டு கிளம்பினாள்.

அதனால் கோபமடைந்த சிவய்யா கத்தியால் மனைவியை தாக்கினான். கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.

அருகில் இருந்தோர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories