3 நாட்களுக்கு ஆந்திரா அவதார தின விழாக்கள்!

Published:

andhra foods - 2026

அடுத்த மூன்று நாட்களுக்கு ஆந்திரா அவதார தின உற்சவங்கள் களைகட்டுகின்றன.

நவம்பர் 1 முதல் 3 வரை ஆந்திர மாநிலம் தோன்றிய நாளை ஆந்திரப் பிரதேச அரசாங்கம் விமரிசையாக கொண்டாட உள்ளது. அதிகாரிகள் விஜயவாடா இந்திரா காந்தி முனிசிபல் மைதானத்தில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த திருவிழாவில் முதல்நாள் சிறப்பு விருந்தினர்களாக மாநில கவர்னரும் முதல்வரும் பங்கு பெறுவார்கள். ‘அமரஜீவி’ பொட்டி ஸ்ரீராமுலுவுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்துவார்கள்.

மூன்று நாட்களும் தொடர்ந்து கலாச்சாரம், சாம்பிரதாயம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு சன்மானம் செய்ய உள்ளார்கள். குச்சிபுடி நிருத்தியம், சுரபி நாடகங்களோடு கூட இருபத்தொரு கைத்தறி , கைவினைப் பொருட்களின் ஸ்டால்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மாநிலத்தின் பல்வேறு ருசிகளை ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக 25 உணவு ஸ்டால்களும் இடம் பெறுகின்றன.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img