உன் பல் சரியில்லை… முத்தலாக் கொடுத்த கணவன்!

muthalak - 2026

மனைவியின் பல் வரிசை சரியில்லை, எடுப்புபல்லாக இருக்கிறது என காரணம் காட்டி, முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்த கணவன் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கும், ருக்சானா பேகம் என்பவருக்கும் கடந்த 2019 ஜூன் 27 அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில், பல் வரிசை சரியில்லை, எடுப்புபல் எனக்கூறி முஸ்தபா முத்தலாக் செய்துவிட்டதாக, ருக்சானா பேகம் ஐ தராபாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ருக்சானா கூறுகையில், திருமணத்தின் போது, முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் நிறைய வரதட்சணை எதிர்பார்த்தனர். அனைத்தையும் எனது குடும்பத்தினர் நிறைவேற்றினர். திருமணத்திற்கு பிறகு, கணவரும், அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்னை துன்புறுத்தினர். எனது பெற்றோரிடம் நிறைய பணம் மற்றும் நகை வாங்கி வர கூறினர்.

எனது சகோதரரின் இரு சக்கர வாகனத்தையும் முஸ்தபா வாங்கி கொண்டார். தொடர்ச்சியாக என்னை அவர்கள் துன்புறுத்தினர்.

எனது பல் வரிசை சரியில்லை எனக்கூறும் முஸ்தபா, என்னுடன் வாழ பிடிக்கவில்லை எனவும் கூறினார். என்னை அவர்களது வீட்டில் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்து வைத்தனர். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.

இதனையடுத்து முஸ்தபாவும், அவரது பெற்றோரும் என்னிடம் சமரசமாக செல்வதாக கூறினார். மீண்டும் வீட்டிற்கு அழைத்துக் கொள்வதாக கூறினர்.ஆனால் கடந்த அக்., 1ம் தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்த முஸ்தபா, என்னுடன் மீண்டும் வாழ முடியாது எனக்கூறியதுடன், எனது பெற்றோரையும் மோசமான வார்த்தைகளில் திட்டி, முத்தலாக் கூறினார். பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், முத்தலாக் கூறினார்.

இதனால், கடந்த அக்.,26ல் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்தேன். முத்தலாக் கூறியதற்காகவும், வரதட்சணை கேட்டதற்காகவும் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கு நீதி வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories