உன் பல் சரியில்லை… முத்தலாக் கொடுத்த கணவன்!

muthalak - 2026

மனைவியின் பல் வரிசை சரியில்லை, எடுப்புபல்லாக இருக்கிறது என காரணம் காட்டி, முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்த கணவன் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கும், ருக்சானா பேகம் என்பவருக்கும் கடந்த 2019 ஜூன் 27 அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில், பல் வரிசை சரியில்லை, எடுப்புபல் எனக்கூறி முஸ்தபா முத்தலாக் செய்துவிட்டதாக, ருக்சானா பேகம் ஐ தராபாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ருக்சானா கூறுகையில், திருமணத்தின் போது, முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் நிறைய வரதட்சணை எதிர்பார்த்தனர். அனைத்தையும் எனது குடும்பத்தினர் நிறைவேற்றினர். திருமணத்திற்கு பிறகு, கணவரும், அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்னை துன்புறுத்தினர். எனது பெற்றோரிடம் நிறைய பணம் மற்றும் நகை வாங்கி வர கூறினர்.

எனது சகோதரரின் இரு சக்கர வாகனத்தையும் முஸ்தபா வாங்கி கொண்டார். தொடர்ச்சியாக என்னை அவர்கள் துன்புறுத்தினர்.

எனது பல் வரிசை சரியில்லை எனக்கூறும் முஸ்தபா, என்னுடன் வாழ பிடிக்கவில்லை எனவும் கூறினார். என்னை அவர்களது வீட்டில் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்து வைத்தனர். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதனையடுத்து முஸ்தபாவும், அவரது பெற்றோரும் என்னிடம் சமரசமாக செல்வதாக கூறினார். மீண்டும் வீட்டிற்கு அழைத்துக் கொள்வதாக கூறினர்.ஆனால் கடந்த அக்., 1ம் தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்த முஸ்தபா, என்னுடன் மீண்டும் வாழ முடியாது எனக்கூறியதுடன், எனது பெற்றோரையும் மோசமான வார்த்தைகளில் திட்டி, முத்தலாக் கூறினார். பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், முத்தலாக் கூறினார்.

இதனால், கடந்த அக்.,26ல் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்தேன். முத்தலாக் கூறியதற்காகவும், வரதட்சணை கேட்டதற்காகவும் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கு நீதி வேண்டும் என்றார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories