December 5, 2025, 4:07 PM
27.9 C
Chennai

உன் பல் சரியில்லை… முத்தலாக் கொடுத்த கணவன்!

muthalak - 2025

மனைவியின் பல் வரிசை சரியில்லை, எடுப்புபல்லாக இருக்கிறது என காரணம் காட்டி, முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்த கணவன் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கும், ருக்சானா பேகம் என்பவருக்கும் கடந்த 2019 ஜூன் 27 அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில், பல் வரிசை சரியில்லை, எடுப்புபல் எனக்கூறி முஸ்தபா முத்தலாக் செய்துவிட்டதாக, ருக்சானா பேகம் ஐ தராபாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ருக்சானா கூறுகையில், திருமணத்தின் போது, முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் நிறைய வரதட்சணை எதிர்பார்த்தனர். அனைத்தையும் எனது குடும்பத்தினர் நிறைவேற்றினர். திருமணத்திற்கு பிறகு, கணவரும், அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்னை துன்புறுத்தினர். எனது பெற்றோரிடம் நிறைய பணம் மற்றும் நகை வாங்கி வர கூறினர்.

எனது சகோதரரின் இரு சக்கர வாகனத்தையும் முஸ்தபா வாங்கி கொண்டார். தொடர்ச்சியாக என்னை அவர்கள் துன்புறுத்தினர்.

எனது பல் வரிசை சரியில்லை எனக்கூறும் முஸ்தபா, என்னுடன் வாழ பிடிக்கவில்லை எனவும் கூறினார். என்னை அவர்களது வீட்டில் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்து வைத்தனர். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.

இதனையடுத்து முஸ்தபாவும், அவரது பெற்றோரும் என்னிடம் சமரசமாக செல்வதாக கூறினார். மீண்டும் வீட்டிற்கு அழைத்துக் கொள்வதாக கூறினர்.ஆனால் கடந்த அக்., 1ம் தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்த முஸ்தபா, என்னுடன் மீண்டும் வாழ முடியாது எனக்கூறியதுடன், எனது பெற்றோரையும் மோசமான வார்த்தைகளில் திட்டி, முத்தலாக் கூறினார். பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், முத்தலாக் கூறினார்.

இதனால், கடந்த அக்.,26ல் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்தேன். முத்தலாக் கூறியதற்காகவும், வரதட்சணை கேட்டதற்காகவும் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கு நீதி வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories