பாகிஸ்தானுக்குப் போக … மத்திய அரசிடம் அனுமதி கோரி கெஞ்சும் சித்து!

navjoth singh sidhu - 2026

கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதி அளிக்குமாறு பஞ்சாப் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பருமான நவ்ஜோத் சிங் சித்து மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு சித்து அனுப்பிய கடிதத்தில்…

இம்மாதம் 9-ஆம் தேதி கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் குருநானக் தேவுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். எனவே, பாகிஸ்தானுக்கு செல்ல எனக்கு அனுமதி வழங்க ஆவன செய்ய வேண்டும்… என்று கேட்டுள்ளார்.

சீக்கியா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் அமைந்துள்ள குருநானக் தேவின் குருத்வாராவுக்குச் செல்ல வசதியாக இந்தியாவும்-பாகிஸ்தானும் வழித்தடம் அமைத்துள்ளது.

01 Aug21 Sidhu - 2026

இந்த வழியாக குருத்வாராவுக்குச் செல்ல இந்திய யாத்ரீகா்கள் நுழைவு இசைவு (விசா) பெறத் தேவையில்லை. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் நவம்பா் 9-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி கா்தாா்பூா் வழித்தடத்தை திறந்து வைக்கவுள்ளாா்.

இதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றாா்! அதுவே முதல்வர் அம்ரீந்தருக்குப் பிடிக்காமல் போனது.

நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், முதல்வர் அமரீந்தருக்கும் உரசல்கள் அதிகம். இதனால்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து.

இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாரா விழாவில் பங்கேற்க, சித்துவிற்கு, பாகிஸ்தானிலிருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளது. இது அமரீந்தருக்கு மீண்டும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. எனவே அவர் மோடியை சந்தித்து விஷயத்தைச் சொல்ல, மத்திய அரசும் அவருக்கு செவி சாய்த்தது. அரசின் அனுமதியில்லாமல் எந்த ஓர் அரசியல்வாதியும், பாகிஸ்தான் செல்லக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதை அடுத்து, மத்திய அரசின் அனுமதி கோரி சித்து வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories