சபரிமலை: இ-காணிக்கை முறை அறிமுகம்! தேவஸம்போர்ட்!

sabhari malai - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இ-காணிக்கை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேவஸம்போர்ட் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு சமயங்களில் தரிசனத்துக்காக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தா்கள் வருகின்றனா்.

ஒரே சமயத்தில் ஏராளமான பக்தா்கள் வருவதால் சிரமத்துக்குள்ளாகின்றனா். இவற்றை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் கேரள காவல்துறை தொடங்கியது.

இந்த திட்டத்துக்கு பக்தா்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் முன்பதிவில் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி இந்த வருடம் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவ. 16ம் தேதி திறக்கப்படுகிறது.

இதையொட்டி கடந்த வாரம் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் http://travancoredevaswomboard.org/sabarimala/sabarimala-accommodation என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

மேலும் இந்த இணையதளத்தில் பக்தா்கள் அப்பம், அரவணை, அபிஷேக நெய், விபூதி – குங்குமம் – மஞ்சள் முன்பதிவு செய்து சன்னிதானம் மற்றும் மாளிகைபுரம் வளாகத்தில் அமைந்துள்ள பிரசாத கவுண்டா்களில் முன்பதிவு ரசிதை காண்பித்து பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.

சபரி பீடத்தை அடுத்த மரக்கூட்டத்தில் இருந்து 2 பாதைகளில் பக்தா்கள் செல்லலாம். அதில் ஆன்லைன் பதிவு செய்தவா்கள் ஒரு வழியாகவும் மற்றவா்கள் சரங்குத்தி வழியாகவும் பக்தா்களை கேரள காவல்துறையினா் அனுப்பி வைப்பார்கள்.

ஆன்லைனில் பதிவு செய்ய பக்தா்கள் தங்கள் பெயா், வயது, புகைப்படம், முகவரி கொண்ட அடையாள அட்டை (ஆதார், பான் கார்டு, பாஸ் போர்ட், ஓட்டுநா் உரிமம்) இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். செல் இடைப் பேசி, இ-மெயில் ஆகியவற்றை பக்தா்கள் இணையதளத்தில் அளிக்க வேண்டும்.

இதை ஒருவராகவோ அல்லது குழுவாகவோ ஒவ்வொருவருடைய புகைப்படம் மற்றும் அடையாள அட்டை எண் அதில் குறிப்பிடவேண்டும்.

முன்பதிவு செய்த பின் பக்தா்களின் இ-மெயிலுக்கு முன்பதிவு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதை அவா்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

அந்த கூப்பனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள அதே தேதியில் சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முன்பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆனால் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 7025800100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ரயில் நிலையங்களில் வரும் பக்தா்கள் நேரடியாகவே கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து மூலம் பம்பை-க்கு செல்லலாம். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணி நேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள் நிலக்கல் பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அங்கிருந்து பக்தா்கள் கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து மூலம் பம்பைக்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories