ஸ்ரீவாரி சேவையில் மீண்டும் ரமண தீட்சிதர்! ‘லைன் கிளியர்’ ஆக்கிய ஜெகன்!

ramana dikshitar - 2026

ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ்.ஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குப்படி மீண்டும் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதியில், முந்தைய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்ததால் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரமண தீட்சிதருக்கு ஆலயத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளது. ஆகம ஆலோசனை மண்டலியின் உறுப்பினராக மட்டுமின்றி ஸ்ரீவாரி கைங்கரியம் செய்வதற்கும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

tirupati ramana deekshitalu - 2026

இதனால் ஸ்ரீவாரி சேவையில் பங்கு பெறுவதற்கு அவருக்கு வழி பிறந்துள்ளது. மறுபுறம் ரமண தீட்சிதரின் இரு புதல்வர்களையும் கோவிந்தராஜ சுவாமி ஆலயத்திலிருந்து மீண்டும் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிகழ்ந்த அராஜகங்களையும் அநீதிகளையும் ரமண தீட்சிதர் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். இதனால் அப்போதைய மாநில அரசு மற்றும் தேவஸ்தானத்தால், அவர் பிரதான அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

Tirumala Tirupati Brahmotsavam - 2026

அதுமட்டுமின்றி திருமலை வேங்கடேஸ்வர ஸ்வாமியின் மிகப் புராதனமான ஆபரணங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக அவர் சந்தேகம் தெரிவித்ததுடன், ஆகம சாஸ்திரத்திற்குப் புறம்பாக ஸ்ரீவாரி பொட்டு எனப்படும் மடப்பள்ளியை மூடிவிட்டு அடியில் தோண்டத் தொடங்கினார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டதாக பலரும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனைத்தும் ஜெகன் மோகனால் மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஸ்ரீவாரி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories