ஸ்ரீவாரி சேவையில் மீண்டும் ரமண தீட்சிதர்! ‘லைன் கிளியர்’ ஆக்கிய ஜெகன்!

Published:

ramana dikshitar - 2026

ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ்.ஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குப்படி மீண்டும் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதியில், முந்தைய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்ததால் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரமண தீட்சிதருக்கு ஆலயத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளது. ஆகம ஆலோசனை மண்டலியின் உறுப்பினராக மட்டுமின்றி ஸ்ரீவாரி கைங்கரியம் செய்வதற்கும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

tirupati ramana deekshitalu - 2026

இதனால் ஸ்ரீவாரி சேவையில் பங்கு பெறுவதற்கு அவருக்கு வழி பிறந்துள்ளது. மறுபுறம் ரமண தீட்சிதரின் இரு புதல்வர்களையும் கோவிந்தராஜ சுவாமி ஆலயத்திலிருந்து மீண்டும் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிகழ்ந்த அராஜகங்களையும் அநீதிகளையும் ரமண தீட்சிதர் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். இதனால் அப்போதைய மாநில அரசு மற்றும் தேவஸ்தானத்தால், அவர் பிரதான அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
Tirumala Tirupati Brahmotsavam - 2026

அதுமட்டுமின்றி திருமலை வேங்கடேஸ்வர ஸ்வாமியின் மிகப் புராதனமான ஆபரணங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக அவர் சந்தேகம் தெரிவித்ததுடன், ஆகம சாஸ்திரத்திற்குப் புறம்பாக ஸ்ரீவாரி பொட்டு எனப்படும் மடப்பள்ளியை மூடிவிட்டு அடியில் தோண்டத் தொடங்கினார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டதாக பலரும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனைத்தும் ஜெகன் மோகனால் மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஸ்ரீவாரி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img