அடடே ஜகன்! சம்பளம் ஒரு ரூவா… ஆனா மக்கள் பணம் ரூ.73 லட்சத்த விரயமாக்கி சொந்த வீட்டுக்கு ஜன்னல்!

Jagan Chandrababu - 2026

ஆந்திர மாநிலத்தில் இப்போது அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது ஜகன் மோகன் வீட்டுக்கு ஜன்னல் வைக்கும் விவகாரம்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மாநில முதல்வர் ஜகன் மோகனின் சொந்த வீட்டில், ஜன்னல், கதவுகள் பொருத்த அரசு கஜானாவில் இருந்து ரூ.73 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜகன் மோகன் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடிகள் நடந்து வருகிறது. குண்டூர் மாவட்டத்தின் தடேபள்ளி கிராமத்தில் உள்ள ஜகன் மோகனின் சொந்த வீட்டுக்கு அரசின் பணத்தில் ரூ.5 கோடி செலவு செய்து சாலை அமைக்கப்பட்டது. மின் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.3.6 கோடி ஒதுக்கப்பட்டது. ஜகன் வீட்டில் ஹெலிபேட் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.1.89 கோடியும், வீட்டுக்காக கூடுதல் நிலம் கையகப்படுத்த ரூ.3.25 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதல்வர் வீட்டின் அருகே மக்களை சந்திக்க அலுவலகம் கட்டுவதற்கு ரூ.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி தடாலடியாக மக்கள் பணத்தை கஜானாவில் இருந்து எடுத்து சொந்த பயன்பாட்டுக்கு ஜகன் விரயமாக்கி வரும் நிலையில், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கதவு மற்றும் ஜன்னல் பொருத்த ரூ.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்.

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

இது குறித்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தைப் பதிவு செய்த போது, ஜெகன் அரசு, அவரது வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு சுமார் 73 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. அரசாங்க பணத்தில் இது செய்யப் படுகிறது. கடந்த 5 மாத ஆட்சியில் நிகழ்ந்துள்ள நிர்வாக சீர்கேடுகளால் ஆந்திர அரசு நிதிச் சிக்கலில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு செலவு தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

jaganmohan - 2026

அதே நேரம், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்ட அறையை, அது சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று கூறி, முதல்வராகப் பதவியேறதும் ஜகன் மோகன் ரெட்டி, அதனை இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றபோதும், ஹைதராபாத்தில் இருந்து கட்சிக் காரர்கள், உள்ளூர் விவசாயிகள் என பலரை ரயிலில் அழைத்துச் சென்றார்! இதற்கு அரசு சார்பில் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஐதராபாத் மற்றும் விஜயவாடா நகரில் முகாம் அலுவலகம் நடத்த ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தைப் போலவே, தெலங்கானாவிலும் முதல்வர் அலுவலகம் மற்றும் வீடு கட்ட அரசு நிதி ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories